திருவான்மியூர்ச் சிவபெருமான் பதிகம்

விக்கிமூலம் இலிருந்து


திருவான்மியூர்ச் சிவனே சீதரனும் போற்றும்

ஒருவா! புலித்தோல் உடையாய் - மருவார்

கடுகை யணிவானே! நின் கண்ணருளால் என்றன்

இடுக்க ணெல்லாம் தீர்த்தருளின்றே.


அங்கமுற்றும் வெண்ணீ(று) அணியும் உன(து) அடியார்பால்

வெங்கலிநோய் மருவிலுன்றன் வியன்புகழ்கோர் இழிவன்றோ

பங்கமில் சீர் தென்னகைப் பதியுடையான் உயிர்போல்வாய்

செங்கண் விடைப்பரி யூர்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(1)


மௌலந் தோட்புரவலர்தம் வாழ்வினையும் மதியார்தாம்

எவ்வ முறக்காணிலும் சற்(று)மிரங்காதல் முறைதானோ?

பௌவவிடம் உண்டோனே! பரமாய பண்ணவனே!

செவ்வரிக் கண் உமைபங்கா! திருவான்மியூர்ச் சிவனே.---(2)


இருக்கு முதலாய மறை ஈரிரண்டும் ஏத்தரிதாப்

பெருக்கும் உன்றன் புகழ்சிறிது பேசும்நலம் பெறுவோனே?

மருக்கமழ் பூங்கொன்றை யணிவார் சடையில் மதிவைத்தாய்!

திருக் கொழியத் தடுத்தள்வாய்! திருவான்மியூர்ச் சிவனே.--(3)


நாவேறுமவள் கேள்வன் நடுத்தலையில் பலிகொள்வாய்

பாவேறப் புனைவார்க்குப் பரிசளித்த விதம் யாதோ?

தாவேறும் வல்லவுணர் தமக்கும் அருள்வானே!

சேவேறும் பெருமானே! திருவன்மியூர்ச் சிவனே.--(4)


புத்தர் முதற்பகர்கின்ற புலைச் சமயத்தினர் முன்னென்

சித்தமொல்கித் தளராமற் திருவருள் வாழ்வடையோனே?

மத்தமெருக் காத்தி தும்பை வன்னிமுதற் சென்னியிற்கொள்

சித்தனே! ஈடில்புகழ்த் திருவான்மியூர்ச் சிவனே.---(5)


புணராமுலை மின்னார் பொய்ப்போக மயல்கொண்டு

நாணாமற் றிருவேற்கு நலம்சிறி(து) ஈந்தருள்வாயோ?

ஆணாதி ஒருமூன்று ஆகியன்றும் ஆகானே!

சேணாடர் பணிகொள்ளும் திருவான்மியூர்ச் சிவனே..(6)


கரியவனும் காணாநின் கழல்பாடிக் கசிந்துருகா(து)

உரியவினைப் போகத்தூ(டு) உழல்வேனும் உய்வேனோ?

கிரியினை வில்லெனக் கொண்டு கிளர் ஒளிப்புன்னகை தன்னால்

திரிபுரம் நீரெனச் செய்தாய்! திருவன்மியூர்ச் சிவனே!.--(7)


மிகப்புகழ்ப் பார்த்தன் வில்லடிக்கு விறல்வாளி

அக்கணத்தன்(று) அருள்செய்தாய்! அடியேனுக் கிரங்காயோ?

முக்கணுடைப் பெம்மானே! முவருக்கும் முதலானாய்!

திக்கடங்க உணர்சீலத் திருவான்மியூர்ச் சிவனே!.--(8)


அத்திமுகத்தினன் செவ்வேள் ஆகும் இருவரைப் பெற்றாய்!

நந்தியுனைப் போற்றிசைக்கும் நாயடியற்(கு) இரங்காயோ?

பத்திவலைப் படல் கூறிப் பணிந்தானுக்(கு) அருள் செய்தாய்!

சித்தியடு முத்தி நல்கும் திருவன்மியூர்ச் சிவ·னே.=.--(9)


நால்வருக்களுக்கு அருள்செய்த நலம் கேட்டு நண்ணியுன்றன்

பால்வரும் என்றனக்கான பரிசின்னெ தரவேண்டும்!

கோல்வனப்புக் கண்ணளைக்குல விடைமேற் கூடவைத்தாய்

சேல்வள நீர்வயல் காட்டும் திருவான்மியூர்ச் சிவனே..--(10)


செல்வமலி தருபான்மைத் திருவாமியூர்ச் சிவன்பால்

நல்வரம் பெற்றுய்வ தெண்ணி நறுந்தமிழ்த் தென்மலய மெனும்

கல்வரைப்பால் அவிர்கின்ற கழைவனத்தோன் கழறுமிலை

சொல்வதெனிற் துணிவுற்றோர் துயர்சிறிதும் தோயாரே!..(11)