திருவிளையாடற் புராணம்/38

விக்கிமூலம் இலிருந்து

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பெயர் தருமசீலை என்பது இருவரும் விளைந்த நெல்லைக் கொண்டு இல்லை என்னாமல் பசித்தவர்க்கு உணவு தந்து அறம் பல செய்தனர். சோதனை உண்டாக்க அவர்களுக்கு வறுமை தந்து வேதனை உண்டாக்கினார் இறைவன்.

கொடுத்துப் பழகிய அவர்களுக்கு வறுமை நிலை தடுத்து நிறுத்தியது. இந்த இழி நிலையை வெறுத்து இறைவனிடம் "பொருள் தருமாறு வேண்டினர்; இல்லா விட்டால் தன் உயிர் விடுப்பதாக அச்சுறுத்தினார்.

அவர்கள் உறுதியைக் கண்டு இறைவன் அவர்கள் அறம் செழிக்க எடுக்க எடுக்கக் குறையாத 'உலவாக் கோட்டை' என்ற சேமிப்பு உறையைத் தந்தருளினார்.

அவர்கள் தொடர்ந்து அறம் செய்து வாழ்ந்து இறைவன் அருளைப் போற்றி வாழ்ந்து முடித்தனர். 

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/38&oldid=1113089" இலிருந்து மீள்விக்கப்பட்டது