தீவனூர்விநாயகர்தெய்வப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து

தான தான தந்த தான தான தந்த     தான தான தந்த ...... தனதான

ஞாலம் ஆளும் அன்னை ஞானம் ஆன எந்தை காலிலே விழுந்து ... வலமாக வேலனோடு வென்று பாடி ஆடி வந்து ஞான மாகி நின்ற ... கனிவீரா ஞான மாது தந்த பாலும்தேனும் உண்டு ஞானமே வழங்கும் ....முதல்வோனே தேவர் மூவர் எங்கள் லோகமேதொழும் உன் பாதமே வணங்க அருள்வாயே தேசமேவிளங்க ஆறுபாய அன்று காகமாக வந்து.... அருள்வோனே பாவமே புரிந்த சூரன் மாள வென்று வாகை சூடி நின்ற ... அதிதீரா வேலன்காதல்கொண்ட வேடமாது அஞ்ச யானை யாக வந்த ... கணநாதா தேவலோக அண்டர் காணவே திரண்ட தீவனூர் அமர்ந்த ..... பெருமாளே