நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/இறுதிச் சொற்பொழிவு

விக்கிமூலம் இலிருந்து

199. இறுதிச் சொற்பொழிவு

பெருமானார் அவர்களுக்கு ஒரு நாள் உடல் நலமாக இருந்தது. குளித்து விட்டு, அலீ, அப்பாஸ் (ரலி) ஆகியோரின் துணையோடு பள்ளிவாசலுக்குச் சென்றார்கள்.

அப்பொழுது, பள்ளிவாசலில் ஆபூபக்கர் அவர்களே, தொழுகையை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் அங்கே வருவதை அறிந்து, அபூபக்கர் அவர்கள் தங்கள் இடத்திலிருந்து விலகினார்கள் அங்கேயே நிற்கும்படி சமிக்ஞை செய்து விட்டு, அவர்களின் பக்கமாயிருந்து பெருமானார் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள்.

தொழுகை முடிந்ததும் பெருமானார் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அதுவே பெருமானார் அவர்களின் கடைசிச் சொற்பொழிவாகும்.