நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/துதர் குழுவுக்கு மதிப்பு

விக்கிமூலம் இலிருந்து

163. தூதர் குழுவுக்கு மதிப்பு

பெருமானார் அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா அவர்களை உஹத் சண்டையில் ஈட்டியினால் குத்திக் கொன்றவர் வஹ்ஷி என்பவர். அவர் மக்காவிலிருந்து ஓடி தாயிபில் இருந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, தாயியிலிருந்து ஒரு தூதர் குழு மதீனாவுக்குப் பெருமானார் அவர்களிடம் வந்தது. தூதர் குழுவைப் பெருமானார் அவர்கள் மதிப்பாக நடத்துவார்கள் என்பது வஹ்ஷிக்குத் தெரியும். ஆதலால், அவரும் அந்தத் தூதர் குழுவில் ஒருவராக மதீனாவுக்கு வந்தார்.

அந்தக் குழுவில், பெருமானார் அவர்கள், வஹ்ஷியைப் பார்த்ததும் “நீர் வஹ்ஷியா?” என்று கேட்டார்கள்.

அவர் 'ஆம்’ என்று பதில் அளித்தார்.

“ஹம்ஸா அவர்களைக் கொன்றது நீர்தானா?” என்று கேட்டார்கள், பெருமானார் அவர்கள்.

“ஆம்” என்றார் வஹ்ஷி.

சிறிய தந்தை ஹம்ஸாவுக்கும் நாயகத்துக்கும் ஒரே வயது; இருவரும் துவைபா என்ற பெண்மணியிடம் பாலுண்டவர்கள். தம் சிறிய தந்தையாரை நினைத்துப் பெரிதும் தேவனைப்பட்டார்கள்.

இருப்பினும் மன்னிப்புக் கோரி நிற்கும் வஹ்ஷியைத் தண்டிக்கவும் விரும்பவில்லை. “வஹ்ஷி! நீர் போகலாம். ஆனால் இனி என் முன்னிலையில் வராமல் இருப்பீராக!" என்று அவரைப் பெருமானார் அனுப்பி வைத்தார்கள்.