நல்வழிச் சிறுகதைகள்-1

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

நல்வழிச் சிறுகதைகள்
முதல் பாகம்



நாரா. நாச்சியப்பன்

முதற் பதிப்பு : ஜனவரி, 1965

எட்டாம் பதிப்பு : மார்ச், 1998

முழு உரிமை வானதி பதிப்பகத்திற்கு

திருநாவுக்கரசு தயாரிப்பு


விலை : ரூ. 10-00

Title : NALVAZHI SIRUKATHAIKAL PART - I

Author : NARA. NACHIYAPPAN

Subject : Short Stories

Language : Tamil

Edition : Eighth Edition, March 1998

Pages : 68

Price : RS. 10-00

Published by : VANATHI PATHIPPAKAM

13, Deenadayalu Street,
Thyagarayanagar., Chennai-17.


அச்சிட்டோர் :
ஸ்ரீதுர்க்கை பிரிண்டிங் பிரஸ்

21, தென்மேற்கு போக் சாலை,

தியாகராயநகர், சென்னை-600 017.

4334130,4346849

முன்னுரை

அண்மையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பேசும்போது நம் முதல் அமைச்சர் உயர் திரு பக்தவத்சலம் அவர்கள் சின்னஞ் சிறுவர்களுக்காகத் தமிழில் நல்ல பல நூல்கள் வெளிவர வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். இதே கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு நான் எழுதி வரும் நூல்களிலே மிகச் சிறந்த நூல் 'நல்வழிச் சிறு கதைகள்' என்ற இத்தொகுப்பு நூல்.

குழந்தை மனம் எந்தக் கருத்துக்கும் இடங் கொடுக்கக் கூடியது. குழந்தைப் பருவத்தில் படியும் கருத்துகள்தாம் ஒரு மனிதனை உருவாக்குகின்றன. எனவே குழந்தையுள்ளத்தில் நல்ல பல கருத்துகள் படியவேண்டும்- படியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தை முன் வைத்துத்தான் சிறுவர்கள் படிப்பதற்கென்று நம் தமிழகச் சான்றோர்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, நன்னெறி, மூதுரை ஆகிய பல நீதி நூல்களை இயற்றினார்கள் ; அவற்றையே துவக்கப்பள்ளிகளில் பாடமாகவும் சொல்லிக் கொடுத்தார்கள்.

இந்த நூல்கள் நீதி நூல்களாக மட்டுமன்றி சிறந்த இலக்கியங்களாகவும் திகழ்கின்றன. இவற்றிலே காணப்படும் கருத்துகள் சிறந்த உவமைகளால் அழகு பெறுகின்றன. அந்த உவமைகளையும், கருத்துகளையுமே வைத்துக்கொண்டு பல கதைகளைப் புனைந்துள்ளேன்.

தமிழில் இது ஒரு தனி முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றி தரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்தக் கதைகளைப் படிப்பதால் சிறுவர் சிறுமியரின் உள்ளம் பண்பட்டு, அவர்கள் வருங்காலத்தில் நல்ல குடி மக்களாகத் திகழ்வார்கள். எவ்வாறெனில், அவர்களை உருவாக்கும் நல்ல கருத்துகளை இவை நயமாக எடுத்துக் கூறுவதால் என்க.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் களும், பெற்றோர்களும் பிள்ளைகளின் உள்ளத்தை விரிவடையச் செய்யும் இந்நூலை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று பெரிதும் கேட்டுக் கொள்கின்றேன்.

சென்னை
நாரா. நாச்சியப்பன்
நூலாசிரியர்
21-12-64

மயிலும் வான்கோழியும்

காட்டில் இருந்த பறவைகள் எல்லாம் ஒரு பெரிய மாநாடு கூட்டின. அந்த மாநாட்டுக்கு எல்லாப் பறவைகளும் வந்திருந்தன. பறவைகள் முன்னேற்றத்தைக் குறிந்துப் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு முடிவில் ஒருநடன அரங்கேற்றம் ஏற்பாடாகியிருந்தது. திட்டப்படி கடைசியில் மாநாட்டு மேடையின் மீது ஏறி மயில் நடனம் ஆடியது. நீலப் புள்ளிகள் நிறைந்த அழகிய பச்சைத் தோகையை விரித்து மயில் ஆடிய நடனம், பார்க்கப் பார்க்க இன்பமளிக்கும் காட்சியாயிருந்தது. பறவைகள் மயிலை மிகவும் பாராட்டின. அதன் அற்புதமான நடனத் திறனைக் குறித்து அவை புகழ்ந்து பேசின. பல பரிசுகளும் மாநாட்டின் சார்பில் மயிலுக்கு வழங்கப் பெற்றன.

இவற்றையெல்லாம் ஒரு வான்கோழி பார்த்துக் கொண்டிருந்தது. மாநாட்டுத் தலைவரிடம் போய் "நானும் நடன அரங்கேற்றம் நடத்த அனுமதி கொடுங்கள்” என்று கேட்டது.

"நீயா?” என்று வியப்புடன் கேட்டது மாநாட் டுத் தலைவராக இருந்த பருந்து.


ந. சி-1 "ஏன், ஆச்சரியப்படுகிறீர்கள்? என்னையும் ஆடவிட்டுப் பாருங்கள். வாய்ப்புக் கொடுத்தால் தானே திறமை இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்?’ என்று அடித்துப் பேசியது வான்கோழி.

மாநாட்டுத் தலைவர் பருந்து, அனுமதி கொடுத்து விட்டது.

வான்கோழி மேடையின்மீது ஏறியது. வால் போல் நீண்டிருந்த தன் சிறகுகளை விரித்துக் கொண்டு, அது நடனம் ஆடியது வேடிக்கையாக இருந்தது. எல்லாப் பறவைகளும் கேலி செய்து சிரித்தன. அவமானம் தாங்க முடியாமல் வான் கோழி மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டது.

கருத்துரை :- மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி தானும் அதுபோல் ஆடமுடியும் என்று கருதியது. இது தவறு. கல்வியில்லாதவர்கள் கவிதை எழுத முயல்வது வான்கோழியின் செயல் போன்றதுதான்.

புலியும் மருத்துவனும்

காட்டில் இருந்த ஒரு புலிக்கு வயிற்றில் நோய் கண்டிருந்தது. அது பொல்லாத நச்சு நோய். அந்த நோய் ஏற்பட்டிருந்ததால் அதனால் எவ்விதமான உணவும் உட்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் மெலிந்து வந்தது. அப்படியே நோய் வளர்ந்து வந்தால், தான் இறந்துபோக நேரிடுமென்ற அச்சம் புலிக்கு உண்டாகியது.

தன் நோயை எவ்வாறு தீர்ப்பது என்று புலி சிந்தனை செய்துகொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ஒரு நரி வந்தது. புலி அதனிடம் தன் நோயைத் தீர்க்க ஒரு வழி கூறும்படி கேட்டது.

“பக்கத்து ஊரில் ஒரு மருத்துவன் இருக்கிறான். அவன் இது போன்ற நச்சு நோய்களைத் தீர்ப்பதில் வல்லவன். அவனைப் போய்ப் பார்” என்று கூறி விட்டு, நரி தன் வழியில் சென்றது.

புலி மெல்ல மெல்ல நடந்து மருத்துவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தது.

அந்த நச்சு மருத்துவன் புலியின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கினான். அதற்குத் தகுந்த மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்தினான்.

நோய் தீர்ந்தவுடன் புலிக்குப் பசியெடுத்தது. அத்தனை நாட்களாக ஒன்றும் தின்னாமல் இருந்த தால் பசி அதிகமாயிருந்தது. உடனடியாக ஏதாவது தின்ன வேண்டும் போலிருந்தது.

தன் நோயைத் தீர்த்தவன் என்று சிறிதுகூட எண்ணிப்பாராமல் புலி, மருத்துவன்மீது பாய்ந்தது. அவனை அறைந்து கொன்று, உடலைக் கிழித்துத் தின்றது.

நன்றிக் குணம் இல்லாத கொடிய புலிக்கு உதவி செய்த மருத்துவன் அதற்கே இரையானான்.

கருத்துரை : - கொடிய புலிக்கு உதவிய மருத்துவன் அதற்கே இரையானான்; கல்லறிவில்லாத தீயவர்களுக்குச் செய்யும் உதவிகளும் இதுபோலத் தீமையாகவே முடியும்.

கொக்கும் மீனும்

ஒரு மடைவாயில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மடையில் வந்து கொண்டிருந்த ஒரு கொழுத்த மீன் அந்தக் கொக்கைப் பார்த்தது. பார்த்தவுடன் அது பயந்து அப்படியே நின்று விட்டது.

அந்த மீனின் தாய், அதனிடம் கூறிய சொற்கள் அதற்கு நினைவுக்கு வந்தன. "கொக்குகள் நிற்கும் இடத்தைக் கண்டால் அங்கே போகாதே, அவை மீன்களைப் பிடித்துத் தின்றுவிடும்" என்று அது கூறியிருந்தது. எனவேதான் அந்தக் கொழுத்த மீன் கொக்கைக் கண்டவுடன் பயந்து நின்று விட்டது.

ஆனால், அதைக்காட்டிலும் சிறிய மீன்களெல்லாம் சிறிதும் அச்சமில்லாமல் மடைவாய் வழியாகச் சென்று கொண்டிருந்தன. கொக்கு நிற்பதைப் பற்றி அவை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக மீன்கள் தன்னைக் கடந்து செல்வதை அந்தக் கொக்கு கவனித்ததாகவும் தெரியவில்லை. அது சும்மா நின்று கொண்டிருந்தது.

அந்தக் கொழுத்த மீன் குஞ்சு சிறிது நேரம் நின்று பார்த்தது. இந்தக் கொக்கு ஏமாளிக் கொக்கு போலிருக்கிறது ! இத்தனை மீன்களில் ஒன்றைக் கூடப் பிடித்துத் தின்னவில்லை. இவ்வளவு சின்ன சின்ன மீனெல்லாம் அந்தக் கொக்குக்குப் பயப்படாமல் போகும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டு அதுவும் புறப்பட்டது.

மடைவாயை அந்தக் கொழுத்த மீன்குஞ்சு நெருங்கியது. திடீர் என்று அதன் மண்டையில் ஒரு குத்து விழுந்தது. அதற்குத் தலை சுழன்றது ; மயக்கம் வந்தது. அதே சமயம் கொக்கு அதைப் பிடித்துக் கொன்று தின்றது.

மறுபடியும் அந்தக் கொக்கு, இன்னொரு கொழுத்த மீன் எப்போது வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு மடைவாயின் கரையில் நின்று கொண்டிருந்தது.

கருத்துரை :- ஓடுகிற மீனையெல்லாம் ஓட விட்டு விட்டுப் பொருத்தமான மீன் வரும்போது சட்டென்று கொத்தித் தின்றுவிடும் கொக்கு ; அடக்கமாக உள்ளவர்கள் கொக்குப் போல் தகுந்த காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களே , அவர்களை ஏமாளிகள் என்று எண்ணிவிடக் கூடாது.


நீர்ப்பறவைகளும் பூங்கொடிகளும்

ர் ஊரில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளம் நிறையத் தண்ணீர் இருந்தது. தண்ணீர் நிறைந்திருந்ததால் அந்தக் குளம் மிகஅழகாக விளங்கியது. அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற நீர்ப் பூங்கொடிகள் இருந்தன. கொக்கு நாரை போன்ற நீர்ப்பறவைகளும் இருந்தன. எல்லாம் ஒரு குடும்பம் போல் ஒன்றாக வாழ்ந்து வந்தன. அந்தக் குளம் தன் உறவினர்களான பூங்கொடிகளுக்கு வேண்டிய அளவு தண்ணீர் குடிக்கக் கொடுத்து உயிர்வாழச் செய்தது. அது போலவே, அன்புடன் தன்னிடமுள்ள மீன்களையும் நண்டு களையும் நீர்ப்பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து உறவாடிக் களித்தது.

ஒர் ஆண்டு உரிய காலத்தில் மழை பெய்ய வில்லை. ஊரே வறண்டு போய் விட்டது. பயிர் பச்சைகளும் விளையவில்லை. அந்தக் குளத்தில் இருந்த நீரும் சிறிது சிறிதாக வற்றி, கடைசியில் அடித்தரையும் காய்ந்து போய் விட்டது.

இனி அந்தக் குளத்தில் தங்களுக்கு உணவு கிடைக்காது என்றறிந்த பறவைகள் வேறு நீருள்ள குளத்தை நாடிப் பறந்து சென்று விட்டன.

நீர்ப் பூங்கொடிகளில் சின்னஞ்சிறிய கொடி ஒன்று, மற்ற பூங்கொடிகளைப் பார்த்து, "இந்தக் குளத்திலேயே நாம் இனியும் இருந்தால் காய்ந்து கருக வேண்டியதுதான். நீர்ப் பறவைகளைப் போல் நாமும் வேறு எங்காவது போய் விட்டால் என்ன?" என்று கேட்டது.

அதற்குப் பெரிய பூங்கொடி ஒன்று பதிலளித்தது :

"இந்தக் குளம் தண்ணிர் நிறைந்திருந்தபோது தாயைப்போல் நம்மை ஆதரித்துக் காப்பாற்றியது. நீர்ப்பறவைகள் சிறிதுகூட நன்றியில்லாமல் துன்பம் வந்த காலத்தில் பறந்து போய்விட்டன. நாம் நன்றியற்றவர்களாக நடந்து கொள்ளக்கூடாது. காய்ந்து கருகினாலும் இந்தக் குளத்திலேயே கிடந்து சாக வேண்டியதுதான். அதற்கு வந்த துன்பம் நமக்கும் வரட்டும் என்று பங்கு கொள்வதுதான் உறவு" என்று கூறியது. எல்லாப் பூங்கொடிகளும் அதன் கருத்தை ஒப்புக்கொண்டன. குளத்தின் வறண்ட கரையிலேயே அவை ஒட்டிக் கிடந்து தங்கள் உறவை நிலை நிறுத்தின.


கருத்துரை :- வறுமை ஏற்பட்ட காலத்தில் நீர்ப் பறவைகள் போல் பறந்து செல்பவர்கள் உறவினரல்லர். பூங்கொடிகள் போல் ஒட்டிக் கிடந்து பங்கு பெறும் இயல்பினரே உண்மயைான உறவினராவர்.

பொன்குடமும் மண்குடமும்

ர் ஊரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் இருவரும் தோழிகள். அவர்கள் ஒன்றாகவே இருப் பார்கள்.

பள்ளிக்கூடம் போகும்போதும், சந்தைக்குப் போகும்போதும், ஊருணிக்கு நீர் மொண்டுவரச் செல்லும்போதும் இருவரும் ஒன்றாகவேச் செல்வார்கள்.

நீர் மொள்ளச் செல்லும்போது ஒருத்தி பொன்குடம் எடுத்து வருவாள். மற்றொருத்தி மண்குடம் எடுத்து வருவாள். நீர் மொண்ட பின் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டுக்குத் திரும்பி வருவார்கள்.

ஒருநாள் இருவரும் நீர் தூக்கிக்கொண்டு தத்தம் வீட்டுக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சாலையோரத்தில் ஒரு கால்வாய் வெட்டிக் கிடந்தது.

அந்தக் கால்வாயைக் கண்டவுடன் ஒருத்தி கேட்டாள்: "தலையில் உள்ள குடத்தோடு இந்தக் கால்வாயைத் தாண்டவேண்டும். உன்னால் முடியுமா?”

அதற்கு மற்றொருத்தி பதில் சொன்னாள்: ‘'என்னால் முடியும். உன்னால்தான் முடியாது.”

"ஏன் முடியாது? வேண்டுமானால் இருவருமே தாண்டிப் பார்த்துவிடுவோம்" என்றாள் முதலில் கேட்டவன்.

இருவரும் அந்தக் கால்வாயைத் தாண்ட அதன் அருகில் சென்றார்கள்.

முதலில் ஒருத்தி தாவினாள். அவள் கால்வாயைத் தாண்டிவிட்டாள். ஆனால் அவள் தலையில் இருந்த பொன்குடம் கீழே தரையில் விழுந்து தண்ணிர் கொட்டிவிட்டது. குடமும் ஒரு பக்கம் நெளிந்துவிட்டது.

தொடர்ந்து தாவிய மற்றொருத்தியும் கால்வாயைத் தாண்டிவிட்டாள். அவள் தலையில் இருந்த மண்குடம் கீழே விழுந்து உடைந்து விட்டது. சுற்றிலும் தண்ணிர் சிந்தியது.

முதல் பெண் நெளிந்துபோன பொன்குடத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் தண்ணிர் மொண்டுவர ஊருணிக்குச் சென்றாள். இரண்டாவது பெண், தாயார் கோபிப்பாளே என்று பயந்து அழுது கொண்டே வெறுங்கையோடு வீட்டுக்குத் திரும்பினாள்.


கருத்துரை : - பொன்குடம் உடைந்தால் பொன்னாகவேயிருக்கும். மண் குடம் உடைந்தால் மண்ணாகிவிடும். உயர்ந்த குணம் படைத்தவர்கள் வறுமையடைந்தாலும் பயனுள்ளவர்களாகவே இருப்பார்கள். இழிந்த குணம் படைத்தவர்கள் வறுமையுற்றால் எவ்விதப் பயனும் அல்லாதவர்களாகி விடுவார்கள்.

பிணியும் மருந்தும்

ர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் வயிற்றுவலி கண்டது. சிறிது நேரம் வலித்துக் கொண்டு இருந்து பின் விட்டுவிட்டது. ஏதோ உணவுக்கோளாறு என்று பேசாமல் இருந்து விட்டான். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. வலிக்கிறவரை வயிற்றை அமுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்து வலி விட்ட பின் அதைப்பற்றி மறந்தே போய்விட்டான்.

நாளாக ஆக அடிக்கடி வயிற்றை வலித்தது. வலி வந்தபோதெல்லாம் துன்பப்பட்டு, விட்ட பிறகு அதைப் பற்றிச் சிந்திக்காமலே இருந்துவிட்டான் அவன். அதனால் வயிற்றுவலி முற்றியது.

ஒரு நாள் மிக அதிகமாக வயிறு வலித்தது. அந்த வலி பொறுக்க முடியாமல் தான் இறந்து போக நேரிடுமோ என்றுகூட அம்மனிதன் அஞ்சினான். “என் கூடவே பிறந்து இந்த வியாதி என்னைக் கொல்கிறதே!” என்று அவன் துயரத்தோடு கூறினான்.

அன்று நாள் முழுவதும் வயிறு வலித்துக் கொண்டே இருந்தபடியால், அவன் எவ்வாறேனும் வயிற்றுவலியை நிறுத்திவிட வேண்டும் என்று, ஒரு மருத்துவன் வீட்டுக்குச் சென்றான்.

மருத்துவன் அவன் உடலைப் பார்த்தான். வயிற்றை அமுக்கிப்பார்த்தான். பின் பல கேள்விகள் கேட்டான். கடைசியில் அவன், இவ்வயிற்று வலியைத் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்றே ஒன்று தான். பறம்பு மலையில் உள்ள ஒரு மூலிகையைக் கொண்டு வந்து அரைத்துக் கொடுத்தால் வயிற்று வலி நின்றுவிடும்” என்றான்.

"ஐயா, என்ன செலவு வந்தாலும் சரி, அம்மூலிகையைக் கொண்டுவந்து என் வயிற்றுவலியை நிறுத்துங்கள்" என்று கெஞ்சினான் அம்மனிதன். மருத்துவன் அன்றே பறம்பு மலைக்குப் புறப்பட்டுச் சென்று அம்மருந்து மூலிகையைத் தேடிக்கண்டு பிடித்துக்கொண்டு வந்தான். அதை அரைத்துக் கொடுத்தவுடன், அம்மனிதனின் வயிற்றுவலி நின்று விட்டது.

“என் உடலோடு பிறந்த இவ்வியாதி என் உயிரைக் கொல்ல இருந்தது. ஆனால், எங்கோ மலையில் பிறந்த இம்மூலிகை என்னைக் காப்பாற்றி விட்டது!" என்று மகிழ்ச்சியோடு கூறினான் அம்மனிதன்.


கருத்துரை :- கூடப்பிறந்தவர்களும் சில சமயம் கொல்லத் துணிவார்கள். முன்பின் தெரியாதவர்களும் சிலசமயம் துன்பத்தைத் துடைக்க முன் வருவார்கள். அவர்கள் நட்பை உதறிவிடக்கூடாது.

அன்னமும் காகமும்

ரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று இருந்தது. அதே சோலையில் ஒரு காகமும் இருந்தது.

ஒரே சோலையில் இருந்தபடியால் இரண்டும் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும். சந்திக்கும்போது தான், தான் கண்டது கேட்டது பற்றி ஒன்றிடம் ஒன்று சொல்லிப் பேசிக் கொள்ளும்.

ஒரு நாள் அன்னம் எங்கோ போய்த் திரும்பி வந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அது திரும்பவும் புறப்பட்டது.

"அன்னம்மா, எங்கே புறப்பட்டு விட்டாய் ?” என்று காகம் கேட்டது.

காக்கையண்ணா, இந்தச் சோலையை அடுத்தாற்போல் அழகான குளம் ஒன்று இருக்கிறது. அங்கே சிவப்புச் சிவப்பாகவும் வெள்ளை வெள்ளையாகவும் அழகான தாமரைப் பூக்கள் மலர்ந்து விளங்குகின்றன. அவை அந்தக் குளத்தின் அழகை அதிகப்படுத்துகின்றன. அந்தக் குளத்திலேயே மிதந்து திரிந்து தென்றல் காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தாலே போதும். அதைக் காட்டிலும் இன்பம் வேறு கிடையாது. அந்தத் தாமரைக் குளத்துக்குத்தான் நான் போகிறேன். நீங்களும் வருகிறீர்களா ?என்று கேட்டது. அன்னப் பறவை.

"அவ்வளவு அழகான குளமா ? அப்படியானால் வருகிறேன்,” என்று காகமும் அன்னத்துடன் புறப்பட்டது.

அவை போகும் வழியில் காற்றில் அழுகிய பிணத்தின் நாற்றம் கலந்து வந்தது. காட்டுப் புறத் தில் ஒரிடத்தில் ஒரு கழுதை செத்துக் கிடந்தது. செத்து நான்கைந்து நாளாகிவிட்டபடியால் அது அழுகி நாற்றமெடுத்தது. காற்றில் வந்த அந்த நாற்றத்தை உணர்ந்ததும் காகம் அன்னத்தை நோக்கி "அன்னம்மா, தாமரைக் குளத்திற்கு நீ போ. நான் வரவில்லை" என்று கூறி விட்டுப் பறந்தது. நேராகக் கழுதை அழுகிக் கிடந்த இடத்திற்குச் சென்றது. அழுகிய பிணத்தைக் கொத்தித் தின்று கொண்டே, “இந்த இன்பம் கிடைக்குமா தாமரைக் குளத்தில்” என்று தன் மனதுக்குள்ளேயே கூறிக் கொண்டது.

கருத்துரை :- அன்னம் தாமரைக் குளத்தை நாடுவது போல் கற்றோரைக் கற்றோர் விரும்புவர் காக்கை அழுகிய பிணத்தை விரும்புவது போல், தீயோரைத் தியோரே விரும்பிச் சேர்வர்.

நீர்ப்பாம்பும் நாகப்பாம்பும்

ர் ஏரியில் நீர்ப்பாம்பு ஒன்று வசித்து வந்தது. அது சில சமயங்களில் ஏரியை அடுத்தாற் போலிருந்த புல் தரைக்கு வரும். சிறிது நேரம் புற்களின் ஊடே ஊர்ந்து சென்று காற்று குடிக்கும். பிறகு ஏரிக்குத் திரும்பி வரும்.

ஒரு நாள் புல் வெளியில் அது ஊர்ந்து செல்லும் போது, எதிரில் ஒரு நாகப்பாம்பைக் கண்டது. ஒன்றையொன்று சந்தித்தவுடன் இரண்டும் அன்பாகப் பேசிக் கொண்டன. நலம் விசாரித்துக் கொண்டன. அப்போது தூரத்தில் இருந்த மூங்கில்களின் ஊடே காற்று மோதியதால் இனிய ஓசையெழுந்தது. அந்த இன்னோசையைக் கேட்டவுடன், நாகப் பாம்புக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்பத்தின் எக்களிப்பில் அது படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதன் அழகிய ஆட்டத்தைக் கண்கொட்டாது பார்த்து நீர்ப்பாம்பும் மகிழ்ந்தது.

அன்று முதல் அவையிரண்டும் நட்பினராகி விட்டன. அடிக்கடி ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. பேசிக்கொண்டே ஒன்றாக ஊர்ந்து பல இடங்களுக்குச் சென்றன.

ஒரு நாள் அவையிரண்டும் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும்போது வழியில் ஓர் ஒற்றையடிப் பாதை இருந்தது. சிறிது நேரம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நீர்ப்பாம்பு அந்தப் பாதையின் மீதே படுத்துக் கொண்டது. நாகப்பாம்போ புற்களின் ஊடே சென்று மறைவாகப் படுத்துக் கொண்டது.

"ஏன் போய் ஒளிந்து கொள்கிறாய் ?’ என்று நீர்ப்பாம்பு கேட்டது.

"இந்த ஒற்றையடிப் பாதையில் மனிதர்கள் வருவார்கள். கண்டால் அடித்துக் கொன்று விடுவார்கள்" என்றது நாகப்பாம்பு.

"நான் எத்தனையோ முறை அவர்கள் போகும் பாதைகளில் படுத்திருக்கிறேன். என்னை யாரும் அடிக்கவில்லையே" என்று வியப்புடன் கூறியது நீர்ப்பாம்பு.

உன்னிடம் நஞ்சில்லை. என்னிடம் நஞ்சு இருக்கிறது நான் கடித்தால் அவர்கள் இறந்து விடுவார்கள். அதனால் என்னை அவர்கள் பகையாகக் கருதுகிறார்கள். கண்ட இடத்தில் கொன்று விடுவார்கள்’’ என்று கூறி, மறைவான இடத்தி லேயே படுத்துக் கொண்டது, நாகப்பாம்பு.

கருத்துரை :- நல்ல மனம் படைத்தவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள். நெஞ்சில் வஞ்சங் கொண்டவர்கள்தாம் ஒளிந்து மறைந்து வாழ்வார்கள். நஞ்சுள்ள நாகப்பாம்பு போல் அவர்கள் மனித இனத்தின் பகையாவார்கள்.

மரமும் மனிதனும்

ர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை. அதனால், பக்கத்து ஊருக்கு வேலை தேடிச் சென்றான். கட்டுச் சோற்று மூட்டையுடன் புறப் பட்டான். பக்கத்து ஊருக்குச் சென்று அவன் பிற்பகல் முழுவதும் வேலை தேடியும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. மனச்சோர்வுடன் தன் ஊருக்குத் திரும்பினான்.

திரும்பி வரும் வழியில் வெயில் கொளுத்தியது. அவனுக்குக் களைப்பாக இருந்தது. பசியெடுத்தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடினான். சிறிது தூரத்தில் ஒரு பூவரசு மரம் இருந்தது. நேரே அந்தப் பூவரசு மரத்தை நோக்கி நடந்தான். அதன் அடி நிழலில் உட்கார்ந்தான். கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்து வயிறாரச் சோறு உண்டான். பிறகு கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு அங்கேயே படுத்து விட்டான்.

மரத்தின் அடியில் படுத்திருக்கும் போதே அவனுக்கு ஓர் எண்ணம் பிறந்தது.

எங்கு தேடியும் வேலை கிடைக்கவில்லை. இந்த மரத்தை வெட்டி விறகாக விற்றால் பணம் கிடைக்குமே என்று அவன் எண்ணினான் உடனே தன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். ஒருவரிடம் கோடரி வாங்கிக் கொண்டு வந்தான். அடுத்து

ந. சி. I-2 பூவரசு மரத்தின் கிளைகள் சிலவற்றை வெட்டினான். ஊரினுள் சென்று விற்றான். மறுநாளும் வந்து வேறு சில கிளைகளை வெட்டினான்.

மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போதே வெயில் உச்சிக்கேறியது. அவன் சிறிது நேரம் தன் வேலையை நிறுத்திவிட்டு, மிகுந்திருந்த கிளைகளின் கீழே நிழலில் உட்கார்ந்து சாப்பிட்டான். பிறகு தூங்கினான். மறுபடியும் எழுந்து கிளைகளை வெட்டினான்.

இப்படி ஐந்தாறு நாட்கள் அதன் நிழலிலேயே படுத்துக்கொண்டு, மீண்டும் மீண்டும் அதன் கிளை களை வெட்டினான். ஒரு வாரத்தில் மரம் முழுவதும் வெட்டி விற்று முடிந்தது.

ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் அவன் வேலை தேடிப் பக்கத்து ஊருக்குச் சென்றான் வேலை கிடைக்கவில்லை. சோர்வுடன் திரும்பி வந்தான். வெயில் கொளுத்தியது. ஆனால் களைப்பாற உட்காருவதற்கு நிழல் இல்லை. அந்த மரம் இருந்த இடத்திற்கு வந்தான்.

வெட்டித் தீர்க்கும்வரை தனக்கு அந்தப் பூவரசு மரம் நிழல் தந்தமையை நினைத்தான். ஏழு நாள் பிழைப்புக்காகத் தான் செய்த தீமையை எண்ணி வருந்தினான்.

கருத்துரை :நல்லறிவுடைய பெருமக்கள் தாம் சாகுமட்டும் தமக்குத் தீமை செய்துவருவோர்க்கும் தம்மாலானவரை அந்தத் தீயவர்களையும் காப்பாற்றவே செயலாற்றுவார்கள்

மாங்காயும் கைக்கோலும்

ரு குருடன் தட்டித் தடவிக்கொண்டே ஒரு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். வெயில் கொடுமையாக எரித்துக் கொண்டிருந்தது. எங்காவது நிழல் கிடைக்குமா என்று தேடி அவன் சென்று கொண்டிருந்தான். ஒரிடத்திற்கு வந்ததும் குளிர்ந்த நிழல் தன் மீது படுவதை அவன் உணர்ந்தான். கைக்கோலினால் தட்டிப் பார்த்து அந்த இடத்திலே ஒரு மரம் இருப்பதை அறிந்து கொண்டான். அந்த மரத்தின் அடியிலே போய் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் சென்றபின் தொப்பென்று ஏதோ விழுந்த ஓசை கேட்டது. ஒலி வந்த இடத்தை நோக்கி நகர்ந்தான். குருடன் தரையைக் கையால் தடவித் தடவி ஒரு காயைக் கண்டெடுத்தான். மூக்கின் அருகில் கொண்டு சென்றபோது அது ஒரு மாங்காய் என்று அறிந்து கொண்டான். அந்த மாங்காய் சிறிதும் புளிப்பில்லாமல் பச்சரிசி போல் சுவையாக இருந்தது.

குருடன் அதைக் கடித்துத் தின்றான். இன்னொரு மாங்காய் தின்ன வேண்டும் போல் இருந்தது. தலைக்கு மேலே மாங்காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. கைக்கோலை வீசி எறிந்தால் ஏதாவது விழும் என்ற எண்ணம் அந்தக் குருடனுக்கு ஏற்பட்டது.

தன் கைக்கோலை எடுத்தான். மேல் நோக்கி அதை வீசி எறித்தான்.

கைக்கோல் சில்லென்ற ஒசையுடன் மேல் நோக்கிச் சென்றது. மரக்கிளைகளின் ஊடே சிக்கிக் கொண்டது.

மாங்காயும் விழவில்லை. கைக்கோலும் பறி போயிற்று.

குருடன் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கிக் கொண்டிருந்தான். பிறகு குருட்டுத்தனமாகத் தான் செய்த செயலை எண்ணி நொந்துகொண்டே, கைக்கோல் இல்லாமலே அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டான். வழியில் பல தொல்லைகளை அனுபவித்துக் கொண்டு தன் இருப்பிடத்தையடைந்தான்.


கருத்துரை:- குருட்டுத்தனமான நம்பிக்கையோடு எந்தச் செயலையும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் எண்ணியதும் நிறைவேறாமல், இருப்பதையும் இழக்க நேரிடும்.

ஆற்றங்கரையும் அரசமரமும்

ரங்கள் அடர்ந்த ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டின் இடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஆற்றின் கரையில் ஒரு பெரிய அரசமரம் நின்றது.

ஆற்றிலிருந்து தொலைவில் நின்ற மரங்களுக்கெல்லாம், மழை பெய்யும்போதுதான் ஏராளமான தண்ணிர் கிடைக்கும். மற்றக் காலங்களில் அவை தரையில் மிக ஆழத்திற்குத் தங்கள் வேரை நீட்டி அங்குள்ள ஈரத்தைத்தான் இழுத்துக் கொள்ள வேண்டும். ஆற்றங்கரையில் இருந்த அரச மரத்திற்கோ ஆண்டு முழுவதும் தண்ணிருக்குக் குறைவில்லை. வண்டல் கலந்து வந்த தண்ணிரின் உரம் அரச மரத்திற்கு நல்ல வலிவும் பொலிவும் கொடுத்தது. அரச மரம் அகன்று பெருத்து வானுறவோங்கித் தலைநிமிர்ந்து பூரிப்போடு நின்றது.

அரச மரம் மற்ற மரங்களைப் பார்த்து, “நான் உங்களுக்கெல்லாம் தலைவன்!" என்று கூறியது.

மற்ற மரங்கள் பேசாதிருந்தன. ஆற்றின் வளத்தால் அதிக நலம் பெற்ற அரச மரம் அகங்காரத்தோடு பேசுவதை அவற்றால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. ஆகவேதான் அவை பேசாமல் நின்றன.

ஒரு நாள் எங்கோ தொலைவில் உள்ள ஒரு மலையில் மழை பொழிந்தது. தொடர்ந்து பெரு மழை பெய்தபடியால் ஆறு பெருக்கெடுத்தது. வெள்ளம் பெருகி ஓடிவரும் ஆறு, தன் வேகத்தால் வழி நெடுகிலும் கரையை அரித்துக்கொண்டு வந்தது. அரசமரம் இருந்த இடமும் அரிப்பெடுத்துக் கரைந்துவிட்டது. மண் கரையக் கரைய அரச மரம் வேரூன்றி நிற்க முடியவில்லை. அப்படியே ஆற்றுக் குள் சாய்ந்தது. வெள்ளம் அரசமரத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது.

“ஆற்றங்கரை வாழ்வு அவ்வளவுதான் !” என்று சொல்லி மற்ற மரங்கள் அரச மரத்திற்காகப் பரிதாபப்பட்டன.

கருத்துரை :- ஆற்றங்கரை மரம் நிலைத்து நிற்க முடியாது. அதுபோல அரசியல் செல்வாக்கும் நிலையானதல்ல.

ஆறும் நீரும்

ல்ல வெயில் காலம். வழிப்போக்கர் இருவர் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். நடைக் களைப்பும் வெயில் கொதிப்பும் அவர்களுக்குத் தண்ணிர்த் தவிப்பை உண்டுபண்ணின.

சுற்றிலும் ஒரே பொட்டல். அருகில் வீடு வாசல் தோப்புத் துரவு ஒன்றும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள்.

திடீரென்று அவர்களில் ஒருவர் மகிழ்ச்சியோடு பேசினார் "அண்ணா, இப்போதுதான் நினைப்பு வருகிறது. வலதுகைப் புறமாக கூப்பிடு தூரம் சென்றால் அங்கே ஒர் ஆறு இருக்கிறது. அங்கே சென்று தண்ணிர் குடித்துக் களைப்பாறியபின் திரும்பலாம்.”

அவர் கூறிய செய்தி கூடவந்தவருக்கும் இன்பம் தந்தது.

இருவரும் வலது புறமாகத் திரும்பினார்கள். சிறிது தூரம் நடந்தபின், ஆற்று மணல் பரந்து கிடப்பதைக் கண்டார்கள்.

ஆற்றைக் கண்டுவிட்ட குதுாகலத்துடன், கொதிக்கும் மணற்சூட்டையும் பொருட்படுத்தாமல் விரைந்து நடந்தார்கள். ஆனால் என்ன ஏமாற்றம்! அந்த ஆறு வற்றி வறண்டுபோய்க் கிடந்தது. இக்கரையிலிருந்து அக்கரை வரை எங்கும் ஒரே மணல்வெளிதான் கண்ணுக்குத் தோன்றியது. தூரத்தில் கானல்தான் தெரிந்தது.

இருவரும் மனமுடைந்து போனார்கள். சிறிது நேரத்தில் தண்ணிர் கிடைக்காவிட்டால் மயங்கிச் சோர்ந்து விழ வேண்டியதுதான்! அவர்கள் நம்பிக்கை இழந்து சோர்ந்து நின்றபோது ஆடு மேய்க்கும் பையன் ஒருவன் அங்கே வந்தான் ஆற்று மணலைத் தோண்டினான். இரண்டடி ஆழம் தோண்டிய பின் அடியிலிருந்து தண்ணிர் ஊறி வந்தது. இரு கைகளாலும் அள்ளிக் குடித்து விட்டுச் சென்றான். அதைப் பார்த்த வழிப் போக்கர்கள் தாங்கள் நின்ற இடத்திலேயே மணலைத் தோண்டினார்கள். அங்கேயும் அடியில் நீர் ஊறியது. அவர்கள் தூய்மையான அந்த நீரைப் பருகித் துன்பம் தீர்த்தார்கள் ஆற்றுத் தாயைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்து சென்றார்கள்.

கருத்துரை :- தான் வறண்டு போனாலும் ஆறு தன் ஊற்று நீரை வழங்கி நாடி வந்தவர்களை நலமடையச் செய்யும். அதுபோல நல்ல குடியில் பிறந்த பெரியோர் தாங்கள் துன்பமடைந்த காலத்தும் நாடி வந்தவர்க்கு நன்மை செய்வார்கள்.

வயிறும் உணவும்

ர் ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவன் பரம்பரைப் பிச்சைக்காரன். அதாவது அவன் தகப்பனும் பிச்சைக்காரன், பாட்டனும் பிச்சைக்காரன். அவர்கள் வழியில் வந்த அவனும் பிச்சைக்காரன்.

பொதுவாக உலகத்தில் வேலை செய்யச் சோம்பல் கொண்டவர்கள் பிச்சைக்காரர்களாக மாறுவார்கள். உழைக்காமல் பிழைக்கலாம் என்று பலர் பிச்சையெடுப்பார்கள். பரம்பரைப் பிச்சைக்காரனான அவனுக்கு வீடு வீடாகப் படியேறிப் பிச்சையெடுப்பதே தொல்லையாக இருந்தது.

ஒரு நாள், பிச்சையெடுத்ததை வைத்துக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு விட்டுப் பிள்ளையார் கோயிலில் படுத்துத் தூங்கினால் என்ன இன்பமாக இருக்கும் என்று அவன் கற்பனை பண்ணிப் பார்த்தான். ஆனால், வீடுகளில் பிச்சை போடுகிறார்களே, அவை இரண்டு மூன்று நாட்களுக்கு நீடித்திருப்பதில்லை.

பழைய கஞ்சியும் சுண்டற் குழம்பும் எத்தனை நாளைக்குத்தான் நன்றாக இருக்கும். சில வீடுகளில் அரிசி போடுவார்கள். அதை அவன் வாங்குவதேயில்லை. அடுப்பு மூட்டி சோறு வடிப்பதென்றால் அது ஒரு பெரிய வேலையென்று அந்தச் சோம்பேறிப் பிச்சைக்காரன் அரிசி வாங்குவதில்லை. கஞ்சி, குழம்பே போதுமென்றிருப்பான். ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரர் அன்னதானம் செய்தார். அவர் தெய்வத்துக்கு நேர்ந்து கொண்ட படி நூறு பேருக்கு அன்னதானம் செய்தார். அந்த நூறு பேரில் இந்தப் பிச்சைக்காரனும் ஒருவனாகப் போய்ச் சேர்ந்தான்.

அன்னதானம் என்றால் வெறும் சோற்று உருண்டையல்ல; நல்ல சாப்பாடு-வடை, பாயசத்தோடு கூடிய அறுசுவையுண்டி ! பிச்சைக்காரன் அதுபோல் அவன் ஆயுளில் சாப்பிட்டதேயில்லை.

அவன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இது போல் நல்ல சாப்பாடு இனிமேல் கிடைக்காது. இரண்டு மூன்று நான் சாப்பாட்டை ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்த எண்ணத்தோடு மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டான் அவன்.

சாப்பிட்டபின் எழுந்திருக்கக் கூட முடியவில்லை. மூச்சைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். கை கழுவி விட்டுப் பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தான். வழியில் தொண்டையை என்னவோ செய்வது போலிருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவுதான். சாப்பிட்டதெல்லாம் அப்படியே வாந்தியெடுத்தான்.

“என்ன வயிறு இது !’ என்று வருத்தத்தோடு கூறிக்கொண்டு சென்றான் பிச்சைக்காரன்.

கருத்துரை :- காள்தோறும் உழைக்கவேண்டும். உழைத்துச் சாப்பிடவேண்டும் என்பதற்காகவே வயிறு ஒரு வேளையுணவை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அளவுடையதாய் உளளது.

செல்வனும் திருடனும்

ர் ஊரில் ஒரு பெரிய செல்வந்தன் இருந்தான். அவன் எப்படியெப்படியோ பணம் சேர்த்தான். ஊரிலேயே பெரிய பணக்காரன் ஆகிவிட்டான். ஆனால் அவன் பணக்காரனாக இருந்து என்ன பயன் ?

பெற்ற தாய் தகப்பனுக்குக்கூட ஒரு காசு கொடுக்க மாட்டான். பிள்ளை குட்டிகள் ஆசையாகக் கேட்கும் அற்பப் பொருள்களைக்கூட வாங்கிக் கொடுக்க மாட்டான். தன் வயிற்றுக்கே அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை.

சோற்றை வடித்துப் பச்சைமிளகாயைக் கடித்துக்கொண்டு சாப்பிட்டால் போதும் என்பான். சாம்பார் வைக்க வேண்டுமென்றால் பருப்புப் படி ஒரு ரூபாயல்லவா? ஏன் வீண் செலவு என்று கேட்பான்.

உறவினர்கள் யாரும் அவனைத் நாடி வருவதேயில்லை. ஏதாவது உதவி செய்யக் கூடிய வனாய் இருந்தால் அல்லவா அவனை தேடி வருவார்கள் .

அவனுக்கு நண்பர்களே கிடையாது. யாராவது ஆபத்துக் காலத்தில் வந்து கைமாற்றுக் கேட்டால் கூடக் கொடுக்க மாட்டான். திரும்ப வசூல் ஆகுமோ ஆகாதோ என்று பயந்து அவன் அந்த வழக்கமே வைத்துக்கொள்ளவில்லை.

துன்பத்தையெல்லாம் சொல்லித் தொழுது அழுது கேட்டாலும் அவனிடமிருந்து ஒரு சல்லிக் காசுகூடப் பெற முடியாது.

அந்தப் பணக்காரன் வீட்டுக்குள் ஒரு நாள் இரவு கொள்ளைக்காரன் ஒருவன் புகுந்தான். நேராகப் பணக்காரன் படுத்திருந்த அறைக்குச் சென்றான். ஒரு கையில் தீவட்டியும் மறு கையில் வெட்டரிவாளும் வைத்திருந்த அந்தக் கொள்ளைக் காரன் அவனைத் தட்டியெழுப்பினான்.

செல்வன் திருடனைக் கண்டு திடுக்கிட்டான். திருடன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கேட்டான். அவன் கொடுக்க மறுத்தான். வெட்டரிவாளால் காலிலும் கையிலும் இரண்டு மூன்று இடங்களில் வெட்டினான் திருடன்.வலி தாங்க முடியாமல் பணக் காரன் அழுதான். கடைசியில் உயிருக்குப் பயந்து அவன் இரும்புப் பெட்டிச் சாவியைக் கொடுத்து விட்டான். இருந்த பணம் முழுவதையும் கொள்ளைக்காரன் மூட்டைக் கட்டிக்கொண்டு போய் விட்டான்.

பணக்காரன் அமுது கொண்டிருந்தான். அவனைத் தேற்ற யாரும் வரவில்லை.

கருத்துரை :- அழுது தொழுது கேட்டாலும் இரக்கப்பட்டுச் சிறிது பொருள் கொடுக்காதவர்கள், அடித்து உதைத்துக் கேட்பவர்களுக்குப் பயந்து இருப்பதையெல்லாம் கொடுத்து விடுவார்கள்.

இளைஞனும் பெரியவரும்

ர் இளைஞன் சாலை வழியாகப் பாடிக் கொண்டே சென்றான். அவன் குரல் இனிமையாக இருந்தது. ஆனால், அவன் பாடிய பாட்டென்னவோ நன்றாயில்லை. அதில் பொருளும் இல்லை அழகும் இல்லை. வழியில் ஒரு பெரியவர் எதிர்ப்பட்டார். “தம்பி, இந்தப் பாட்டெல்லாம் ஏன் பாடுகிறாய்? உன் குரலே நன்றாயிருக்கிறது. இசையை மட்டும் உன் வாய் அசை போட்டாலே அழகாக இருக்கும். இந்தப் பாட்டைப் பாடி ஏன் உன் குரல் அழகையும் பாழ்படுத்திக் கொள்கிறாய்?’’ என்று கேட்டார் பெரியவர்.

அவன் அவர் அறிவுரையை இலட்சியம் செய்ய வில்லை. தன் போக்கில் பாடிக்கொண்டே சென்றான். நேராகச் சூதாடும் இடத்திற்குச் சென்றான். கையில் இருந்த பொருளையெல்லாம் சூதாடித் தோற்றுவிட்டு இளைஞன் திரும்பி வந்தான். திரும்பி வரும்போது அவன் பாடிக் கொண்டு வரவில்லை. வழியில் இருந்த ஒரு மரத்தடியில் களைப்பாற உட்கார்ந்தான்.

அதே மரத்தடியில் அந்தப் பெரியவர் ஒரு புறத்தில் இருந்தார். இளைஞன் கவனிக்கவில்லை.

சிறிது நேரத்தில் மற்றொரு ம னின் அவவழியாக வந்தான். அவனும் களைப்பாறு வதற்காக மரத்தடிக்கு வந்தான். இளைஞன் அருகில் வந்து உட்கார்ந்தான். இளைஞனுக்கு அந்த மனிதனைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. அவன் தன் அருகில் வந்து உட்கார்ந்ததும் இளைஞனுக்குக் கோபம் வந்தது. "உயர்ந்த சாதியான் நான். என்னருகில் நீ எப்படி வந்து உட்காரலாம்?” என்று கேட்டான்.

இச்சொற்கள் பெரியவர் காதில் விழுந்தன. "உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளுவதைவிட ஒழுக்கமாய் இருப்பது சிறந்தது” என்று கூறினார்.

இளைஞன் கோபத்தோடு எழுந்து நடந்தான். பெரியவர் பின்தொடர்ந்தார். வழியில் ஒருவன் இளைஞனை மறித்துத் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டான். "நடுப்பாதையில் நீ எப்படி என்னைக் கடன் கேட்கலாம்” என்று இளைஞன் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். அவனும் பதிலுக்குக் கையை ஓங்கவே இளைஞன் பயந்து ஓடிவிட்டான்.

"விண் வீரம் பேசுவதைவிட விடா நோயுடன் இருப்பது நல்லது” என்றார் பெரியவர். அவன் சென்ற வழியே சென்றார்.

இளைஞன் வீடு சென்றான். வாசலில் நின்ற மனைவி தெருவிலேயே அவனோடு சண்டை போட்டாள். அவனை வைதாள். இதைக் கண்ட பெரியவர், பழிக்கஞ்சாத மனைவியுடன் வாழ்வதை விடத் தனியாய் இருப்பது நல்லது” என்று சொல்லி விட்டு வழிநடந்தார்.

கருத்துரை:- பிழையற்ற பாட்டும், ஒழுக்கஞ் சேர்ந்த குடிப்பிறப்பும், அஞ்சாத வீரமும், நெஞ்சில் அன்புடைய மனைவியும் வாழ்விற்கு இன்பமாகும்.

அறமும் புகழும்

ர் ஊரிலே கண்ணப்பர் என்று ஒருவர் இருந்தார். அவர் பெரிய, பணக்காரரல்லர். இருப்பினும் அவர் தம் மகனுக்கு ஒரு நோய் ஏற்பட்டபோது ஏதாவது ஒரு நல்ல அறம் செய்வதாகத் தெய்வத்திடம் உறுதி செய்து கொடுத்தார். மகன் பிழைத்து விட்டான்.

உறுதியை நிறைவேற்ற வேண்டும். என்ன அறம் செய்யலாம் என்று சிந்தித்தார். அந்த ஊரில் குளம் இல்லை. குடிநீருக்காக அரைக்கல் தொலைவில் உள்ள குளத்திற்கு மக்கள் சென்று வந்தார்கள். இதைக் கருதிய கண்ணப்பர் தம் ஊரில் ஒரு குளம் வெட்டினார்.

குளம் வெட்டும் செலவுக்கு அவரிடம் பணம் இருந்தது அதற்குக் கல்லினால் கரையமைத்துப் படிபோடும் அளவிற்குப் பணம் இல்லை. ஆகவே அவர் கற்கரையும் படியும் அமைக்காமலே குளத்தை வெட்டி முடித்தார். குளத்தின் கரையில், "குளம் வெட்டியவர் கண்ணப்பர்” என்ற எழுத்துகள் பொறித்த ஒரு கல்லும் நாட்டினார்.

அதே ஊரில் நல்லப்பர் என்ற ஒருவர் இருந்தார். அவரும் செல்வரல்லர். சாதாரண வணிகர்தாம். அவர் ஒரு நாள் கண்ணப்பர் வெட்டிய குளத்தை வந்து பார்த்தார். கற்கரையும் படியும் அமைக்காமல் விட்டது ஒரு பெருங் குறையாக அவருக்குத் தோன்றியது.

அவர் கண்ணப்பரிடம் சென்றார். தம் மனக் கருத்தை வெளியிட்டார். கரையமைக்காவிட்டால் குளம் விரைவில் தூர்ந்துவிடும் என்ற உண்மையை எடுத்துக் கூறினார். “நான் என்ன செய்வேன். என்னிடம் அதற்கு மேல் பணம் இல்லையே!” என்றார் கண்ணப்பர். என்னிடம் சேமிப்புப் பணம் சிறிது இருக்கிறது. அதைத் தருகிறேன். கரையும் படியும் அமைத்து விடுங்கள்” எனக் கூறினார் நல்லப்பர். அவ்வாறே பணமும் கொடுத்தார். கண்ணப்பர் அதன்பின் தம் அறப்பணியைச் செவ்வனே செய்து முடித்தார். கண்ணப்பர் நல்லப்பர் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க வில்லை. நல்லப்பரின் நண்பர் சிலர் அவரிடம் வந்து, கரை கட்டிப் படி அமைத்தவர் நல்லப்பர்’ என்று ஒரு கல் நாட்டும்படி கண்ணப்பரை வற்புறுத்த வேண்டும் என்றார்கள்.

நல்லப்பர் மறுத்துவிட்டார். "அறம் செவ்வனே நடக்க வேண்டும். அதுதான் நம் குறிக்கோள். பெயர் நாட்டுவது அல்ல” என்று கூறினார் நல்லப்பர்.

கருத்துரை:- நல்லவர்கள் மக்கள் நலத்தையே நாடுவர். தங்கள் புகழை காட்டிக்கொள்ள நினைக்கமாட்டார்கள்.

பெருமாளும் சதாசிவமும்

ர் ஊரில் சதாசிவம் என்ற ஒருவன் இருந்தான். அவனுக்கு அண்ணன்மார் இருவர்; தம்பி ஒருவன். தந்தை இறந்தபின் உடன் பிறந்தவர்கள் அவர் தேடி வைத்த செல்வத்தைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொண்டனர். தந்தையின் செல்வத்தில் ஒவ்வொருவனுக்கும் கால் பங்குதான் கிடைத்தது.

அதே ஊரில் பெருமாள் என்ற ஒருவன் இருந்தான். அவன் சதாசிவத்தின் நண்பன். அவனுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை. அவன் தந்தை சதாசிவத்தின் தந்தையளவு செல்வம் படைத்தவர் அல்லர். இருந்தாலும் அவர் தேடி வைத்த செல்வம் முழுவதும் பெருமாளுக்கே உரிமையாயிற்று. ஆகையால் பெருமாள் சதாசிவத்தைக் காட்டிலும் பெரும் பணக்காரனானான்.

பெருமாளைப் பார்க்கும் போதெல்லாம் சதாசிவத்துக்குத் தான் குறையுடையவன் என்ற எண்ணம் தோன்றும்.

பெருமாளைப் போல் தனி மகனாகப் பிறந் திருந்தால் தனக்குத் தன் தந்தையின் செல்வம் முழுவதும் சேர்ந்திருக்கும். தான் பெரும் பணக்காரனாகியிருக்க முடியும் என்று எண்ணினான் சதாசிவம்.

ந.சி.1-3 நண்பன் என்ற முறையில் அவன் ஒரு நாள் பெருமாளைச் சந்தித்து வரச் சென்றான்.

பெருமாள் படுத்திருந்தான். சதாசிவம் அருகில் சென்றபின்தான் அவன் நோயுற்றுப் படுத்திருக்கிறான் என்று அறிந்தான்.

சதாசிவம் ஆதரவான குரலில் பெருமாளை நோக்கி, மருந்து வாங்கிச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டான்.

"மருந்து வாங்கி சாப்பிடத்தான் வேண்டும். என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. வீட்டில் துணைக்கு ஒருவரும் இல்லை...” என்று சொல்லிக் கலங்கினான் பெருமாள்.

"கலங்காதீர்கள், இதோ நான் போய் மருத்துவரை அழைத்து வருகிறேன்” என்று சொல்லி சதாசிவம் விரைந்து சென்றான்.

மருத்துவர் வந்து பார்த்து, மருந்து கொடுத்துச் சென்றார். அதன்பின் பெருமாள் சதாசிவத்தை நோக்கி, நண்பரே, அண்ணன் தம்பியரோடு பிறந்த நீங்கள், என்னையும் உங்கள் உடன் பிறந்தவன் போல் பாவித்துச் செய்த உதவியை நான் மறக்கமாட்டேன்’ என்று கூறினான்.

தான் அண்ணன் தம்பியருடன் பிறக்க வில்லையே என்ற குறை அவன் பேச்சில் வெளிப் பட்டது. அதைக் கேட்டு சதாசிவம் உருகிப் போனான்.

கருத்துரை:-உடன் பிறப்பில்லாத வாழ்வு சிறந்ததாகாது

நெஞ்சகமும் வஞ்சகமும்

ரு காட்டில் எருது ஒன்று இருந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் பச்சைப்பசேல் என்று புல் மண்டிக் கிடந்தது. எருதுக்குத் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த புல்லே போதுமானதாக இருந்தது. எனினும், தூரத்துப் புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால், புல் மண்டிக் கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது.

அது போகும்போது, மரத்தில் இருந்த பச்சைக் கிளி அதைக் கூப்பிட்டது. எருதண்ணா, எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில் உள்ள புல்வெளிக்குப் போகிறேன்; புதுப் புல் தின்னப் போகிறேன்” என்றது காட்டெருது.

"அண்ணா, வேண்டாம்; அங்கே புலியிருக்கிறது!’ என்று எச்சரித்தது பச்சைக்கிளி.

அப்போது அங்கே ஒரு நரி வந்து சேர்ந்தது

அது பச்சைக்கிளியைப் பார்த்து, ‘ஒருவர் ஒரு வேலையாகப் போகும்போது எங்கே போகிறீர்கள் என்று கேட்பதே தவறு ; மேலும் எருதண்ணா ஆசையாகப் புதுப்புல் தின்னப் போவதைத் தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று. சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத் தவறு புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று நீ கேள்விப்பட்டதில்லையா ? அப்படியே புலியிருந்தாலும் எருதண்ணாவின் கொம்பு அதன் குடலைக் கிழித்து விடாதா? எருதண்ணாவை நீ என்னவென்று. நினைத்துக் கொண்டாய்?’ என்று கேட்டது.

நரியின் பேச்சைக் கேட்ட எருதுக்குக் கிளியின் மேலே கோபம் கோபமாக வந்தது. தன் வீரத்தைப் பாராட்டிய நரியோடு பேசிக்கொண்டே அது புல்வெளியை நோக்கிச் சென்றது.

புல்வெளியில் அது இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது நரி அங்கிருந்து நழுவியது; புல்வெளியில் ஒரு புறத்தில் மறைந்திருந்த கிழட்டுப் புலி எருதின் மேல் பாய்ந்து அதைக் கொன்று தின்றது. நரியும் அதன் குருதியைக் குடித்து மகிழ்ந்தது.

சாகும்போதுதான் எருதுக்கு அறிவு வந்தது. பச்சைக்கிளியின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், நரியின் நயவஞ்சகத்திற்கு இரையானதை எண்ணி வருந்தியது.

கருத்துரை:- வஞ்சகமில்லாதவர்கள் சொல்லும் கடுஞ் சொல்லும் நன்மையைத் தரும். வஞ்சகரின் இன்சொல்லோ துன்பத்தையே தரும். 
கடலும் காற்றும்

காற்றரசன் வானமண்டலத்திலேயே வேகமாகச் சென்று கொண்டிருந்தால் . அப்போது, அவன் பார்வை நிலத்தின் பக்கம் திரும்பியது. பயிர்கள் செடி கொடிகளெல்லாம் வாடிக் கிடந்தன. மெல்லக் கீழே இறங்கி வந்தான்.

"நீங்களெல்லாம் ஏன் வாடிக் கிடக்கிறீர்கள் ? என்ன நேர்ந்தது ?’ என்றான் காற்றரசன்.

"அரசே. ஏரி குளமெல்லாம் நீர் வற்றிப் போய் விட்டன. எங்களுக்கு வேண்டிய தண்ணிர் கிடைக்கவில்லை. அதனால்தான் ஒரே வாட்டமாய் வதங்கிக் கிடக்கிறோம்’ என்று அவை மறுமொழி கூறின.

அவற்றின் குரல் பரிதாபமாயிருந்தது ! அவற்றின் நிலை ஒரே சோகக் காட்சியாயிருந்தது. "விரைவில் உங்கள் துன்பத்தைப் போக்குகிறேன்" என்று சொல்லிவிட்டுக் காற்றரசன் புறப்பட்டான்.

சிறிது தூரம் சென்றவுடன், கீழே ஒரு பெரிய நீர்ப்பரப்பைக் கண்டு இறங்கி வந்தான். கடலரசனைக் கண்டான்.

"நண்பா, உன்னிடம் நீர் நிறைய இருக்கிறதே ! சிறிது அளவு பயிர் பச்சைகளுக்குக் கொடுத்து உதவுகிறாயா" என்று காற்றரசன் கேட்டான். கடலரசன் சிரித்துக்கொண்டே, "வேண்டிய அளவு எடுத்துக் கொள்" என்றான். காற்றரசன் சிறிது நீரை அள்ளினான். அள்ளிய வேகத்தில் கீழே கொட்டி விட்டான்.

"ஒரே உப்பாயிருக்கிறதே !...” என்றான். இதைக் கேட்ட கடலரசன் பெருஞ்சிரிப்புச் சிரித்தான். என்னிடமுள்ள நீர் குறையாமல் இருப்ப தற்குத்தான் உப்பிட்டு வைத்திருக்கிறேன். இல்லா விட்டால் உன் மாதிரி ஆட்களுக்குப் பிச்சை போட்டே குறைந்து போய்விடும்” என்றான்.

கடலரசன் பேச்சுக் காற்றரசனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. சீற்றத்துடன் பாய்ந்து சென்று கதிரவனிடம் முறையிட்டான்.

"தம்பி, பயப்படாதே ! கடல் அரசனுக்குத் தெரியாமலே நான் கடல்நீரை உறிஞ்சி மேகமாக்கித் தருகிறேன். மேகங்களைத் தள்ளிக் கொண்டு போய் பயிர் பச்சைகளுக்கு மழையாகப் பொழியச் செய்து விடு. அவற்றின் வாட்டம் தீரும் ; ஏரி, குளங்களும் நிறையும்;! தாமாகக் கொடுக்காதவர்கள் செல்வத்தை மறைமுகமாகத்தான் கவர்ந்து நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும்” என்றான் கதிரவன்.

அது, தான் சொன்ன வண்ணமே கடல்நீரை மேகமாக்கியது. காற்று அம்மேகத்தைப் பயிர், செடி, கொடிகளுக்கும், ஏரி குளங்களுக்கும் மழையாகப் பொழியச் செய்தது. உலகம் செழித்தது !

கருத்துரை :- தாமாக உதவி செய்ய முன்வராதவர்களின் செல்வத்தை அவர்களும் மனம் நோகாமல் கவர்ந்து பிறர்க்குதவி செய்வது எல்லோருக்கும் நலம் பயக்கும்.

குருவியும் பருந்தும்

காட்டிலே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் தொடையிலே ஒரு சிட்டுக் குருவி வந்து உட்கார்ந்தது. முனிவர் அதை நோக்கினார். சிட்டுக் குருவியின் சின்னஞ்சிறிய அழகான உருவம் அவர் உள்ளத்திலே அன்பு பெருகச் செய்தது. ஆதரவாக அவர் அதன் முதுகைத் தடவிக் கொடுத்தார். அன்பின் மிகுதியால் அதற்குத் தாம் கற்ற கல்வி முழுவதையும் கற்றுக் கொடுத்தார்.

சிட்டுக் குருவி சிறந்த கல்வியறிவு பெற்றது, அது பறவைகளிடம் திரும்பிச் சென்றபோது, எந்தப் பறவையும் கல்வியில் அதற்கு நிகராக நிற்க முடியவில்லை. எல்லாப் பறவைகளும் அதனிடம் யோசனை கேட்க வந்தன. அதன் புகழ் எங்கும் பரவியது. புகழ் பெருகப் பெருகச் சிட்டுக் குருவிக்குச் செருக்கும் பெருகியது. கல்விக் கடலே தான்தான் என்று நினைத்தது கல்விக்கடல் என்று எல்லாப் பறவைகளும் தன்னை அழைக்க வேண்டும் என்று அது விரும்பியது. விரும்பியதைச் சொல்லியது. கல்விக்கடல் சிட்டுக் குருவியார் அவர்களே வணக்கம் என்று சொல்லித்தான் எந்தப் பறவையும் தன்னை அழைத்துப் பேச வேண்டும் என்று அது கூறியது. அவ்வாறு வணங்கிப் பேசாத பறவைகளுடன் அது பேச மறுத்தது. நாளுக்கு நாள் சிட்டுக் குருவியின் செருக்கு அதிகப்படுவதைக் கண்ட மற்றப் பறவைகள் அதன் மேல் வெறுப்புக் கொண்டன.

சிட்டுக் குருவியிடம் அவமானம் அடைந்த சில பறவைகள் பருந்திடம் சென்று முறையிட்டன. சிட்டுக் குருவியின் அளவு கடந்த செருக்கைப் பற்றி பருந்து கேள்விப்பட்டது.

கோபங்கொண்டு பருந்து பறந்து வந்தது. "ஏ ! சிட்டுக் குருவி !’ என்று அழைத்தது. சிட்டுக் குருவி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கல்விக் கடலே’ என்று அழைத்து வணக்கம் கூறினால்தான் அது பேசும் என்று கூட இருந்த பறவைகள் கூறின. ஆனால் பருந்து அவ்வாறு அழைக்கவில்லை.

"அற்பக் குருவியே உனக்கு இவ்வளவு ஆணவமா !” என்று கேட்டுக்கொண்டே சிட்டுக் குருவியை நெருங்கியது. பிடித்து வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டது.

கருத்துரை :- செருக்குக் கொண்டவர்கள் வெறுப்புக்காளாவார்கள். செருக்கே அவர்களைக் கொல்லும் பகையாகும்.

அணையும் வெள்ளமும்

காட்டாறு ஒன்று இருந்தது. அதன் கரையிலே ஒரு சிற்றுார் அமைந்திருந்தது. அந்தக் காட்டாற்றிலே திடீர் திடீர் என்று வெள்ளம் பெருகும். வெள்ளம் பெருக்கெடுக்கும்போது ஊரில் உள்ள குடிசைகளையும், ஆடு மாடுகளையும் அடித்துக் கொண்டு போய்விடும். இந்தத் திடீர் ஆபத்தை எப்படித் தடுப்பதென்று தெரியாமல் அந்த ஊரார் பலமுறை துன்பம் அனுபவித்து விட்டார்கள். கடைசியில் நல்லான் என்ற ஒருவன், அந்தக் காட்டாற்றிற்கு ஒர் அணை கட்டுவதென்று திட்டமிட்டான். ஊர்ப் பெரியார்களின் அன்பும் ஆதரவும், இளந்தோழர்களின் ஒத்துழைப்பும் கொண்டு நல்லான் அந்த அணையைக் கட்டி முடித்தான்.

அணை வெள்ளப் பெருக்கைத் தடுத்ததோடு, தோட்டந் துரவுகளுக்கு நீர் தரவும் பயன்பட்டது. அதற்கு நல்லான் அணையென்று பெயரிட்டு அழைத்தார்கள். ஊரார் அவ்வப்போது பழுது பார்த்து அணை உடையாமல் பார்த்துக் கொண்டார்கள். நல்லான் மூப்படைந்து இறந்த பிறகும் அணை இருந்தது. பாட்டிமார் தங்கள் பேரன் பேத்தியர்க்கு அந்த அணைக்கட்டின் வரலாற்றைக் கதையாகக் கூறுவார்கள். நல்லான் செய்த முயற்சிகளைக் கதை கதையாகக் கூறுவார்கள். நல்லான் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருநாள் முனியன் என்ற ஓர் இளைஞன் அந்த அணைக்கட்டின் பக்கம் சென்றான். அதற்கு முந்திய நாள் வெள்ளம் வந்து அணைக்கட்டு நிரம்பியிருந்தது.

முனியன் நீர் நிறைந்த அந்த அணைக் கட்டைப் பார்த்தான். அவனுக்கு மனத்தில் பொல்லாத ஆசையொன்று தோன்றியது. அந்த அணைக் கட்டை ஒர் இடத்தில் உடைத்துவிட்டு அது எப்படிப் பாய்கிறது என்று பார்க்க வேண்டும் என்பதுதான் அவ்வாசை. ஒரு கடப்பாரையினால் யாரும் பார்க்காதபோது அணைக்கட்டுச் சுவரைப் பெயர்த்தான். சிறு துளையின் வழியாக நீர் குபுகுபு வென்று பாய்ந்தது. சிறிது நேரத்தில் சிறு துளை பெரிதாகி ஓடியது. அந்த வெள்ளப் பெருக்கில் ஊரி லிருந்த பல குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டன.

முனியன் பயந்து ஊருக்குள் திரும்பினான். அவன் தாய் தந்தையரும், அவர்கள் வீடும் ஆடும் மாடுகளும் அடித்துச் செல்லப்பட்டன. தன்னால் வந்த வினையைக் கண்டு முனியன் பொங்கிப் பொங்கி அழுதான் அழுதால் போனதெல்லாம் திரும்பியா வந்துவிடும் ? அதன்பின் அவன் பல துன்பங்களை அனுபவித்துத் திருந்தினான்.

கருத்துரை :- அணை கட்டுவது அரிய செயல் , உடைப்பது எளிது. நற்செயல்கள் செய்தல் அரிது ; தீது, செய்தல் எளிது. அரிய செயல் செய்தலே சிறப்பு.

கறையும் இருளும்

ரவு நேரம். நாரையொன்று காற்றில் பறந்து சென்று கொண்டிருந்தது. எங்கும் பட்டப் பகல்போல் ஒளி பரவியிருந்தது. அந்த ஒளியில் வெப்பம் இல்லை. குளிர்ச்சி நிறைந்த அந்த இன்ப ஒளி எங்கிருந்து வருகிறது என்று தேடித்தான் அந்த நாரை பறந்து கொண்டிருந்தது.

உலகமெங்கும் அந்த இன்ப ஒளி பரவியிருந்தது. நாரை சென்ற இடமெல்லாம் அந்த ஒளி நிறைந்திருந்தது. நாரை சிந்தனையோடு வானை நோக்கி நிமிர்ந்தது.

உயரத்தில் ஒளித்தகடு போல் வட்ட நிலா அழகுடன் விளங்கியது. நாரை அதன் அழகில் மயங்கி நிலாவையே பார்த்துக் கொண்டு நின்றது.

நிலா அழகாகத்தான் இருந்தது. உலக முழு வதும் ஒளி பரப்பும் பேரொளியைப் பெற்றுத்தான் விளங்கியது. ஆனால் அந்த ஒளி நிலாவின் இடையிலே ஓர் இருட்டுப் பகுதியும் இருந்தது. அது நிலவின் இடையில் ஒரு கறை போல இருந்தது.

இவ்வளவு அழகான நிலவின் இடையில் இப்படி ஒரு கறையிருக்கிறதே என்று வருந்தியது. நாரை. தன்னிடம் உள்ள கறையை நீக்கிக் கொள்ளாமல் உலகைச் சூழ்ந்துள்ள இருளை ஒட்டப் புறப்பட்டு விட்டதே இந்த நிலவு இதன் கருத்து என்ன என்று அறிய நாரை ஆசைப் பட்டது.

அது நிலாவை நோக்கிப் பறந்தது. எவ்வளவு உயரம் பறந்தும் அதனால் நிலாவை அடைய முடிய வில்லை ; போகப் போக நிலா மேலும் மேலும் தொலைவில்தான் இருந்து கொண்டிருந்தது.

நிலாவை நெருங்க முடியாது என்று கண்டு கொண்ட நாரை, அருகில் காற்றில் தவழ்ந்து சென்று கொண்டிருந்த ஒரு மேகத்தைப் பார்த்தது. மேகமே, நிலா தன்னிடமுள்ள கறையைப் போக்கிக் கொள்ளாமல், உலகில் உள்ள இருளைப் போக்குகிறதே ! இதன் கருத்து என்ன ?என்று கேட்டது.

“நாரையே, உயர்ந்த பெரியோர்கள் தங்கள் குறையைக் காட்டிலும் பிறருடைய குறையை நீக்குவதே முதற்கடமை என்று நினைப்பார்கள். அது போன்றதுதான் நிலாவின் இயல்பு !’ என்றது மேகம். நிலாவின் உயர்ந்த தன்மையை வியந்து பாராட்டிக் கொண்டே நாரை உலகு நோக்கி இறங்கி வந்தது.

கருத்துரை :- தன் துன்பத்தைக் காட்டிலும் பிறர் துன்பத்தைப் பெரிதாக நினைத்து அதைப் போக்க உதவி செய்வதே நல்லோர் இயல்பாகும்.

முரடனும் மணியனும்

முரடன் ஒருவன் இருந்தான். அவன் தன் அரட்டல் உருட்டல்களாலேயே நாள் பிழைத்து வந்தான். வலியற்றவர்களை மிரட்டிப் பொருள் பறித்துத் தன் வாழ்வை நடத்தி வந்தான்.

அந்த ஊரில் மணியன் என்ற ஒருவன் இருந்தான். அவன் உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழை. உடலில் வலுவும் உள்ளத்தில் உறுதியும் இல்லாத ஒரு கோழை.

அவனுக்கு இந்த முரடனைப் பார்த்தாலே பயம். கண்டவுடன் உடல் நடுங்கும். முரடன் உறுமலைக் கேட்டவுடனே கையில் உள்ள காசைக் கொடுத்து விடுவான்.

அவசரமாகச் சில்லறை தேவைப்பட்டால் முரடன் மணியனைத்தான் தேடிவருவான். கேட்கு முன் கொடுக்கக் கூடிய ஒருவன் இருக்கும்போது அவனை விட்டு வைப்பானா அவன் ?

முரடன் பிழைப்பு இப்படிப் பல நாள் நடந்து வந்தது.

ஒரு நாள் முரடனுக்குக் காசு தேவைப்பட்டது. மணியனைத் தேடி வந்தான். மணியன் தன் குடிசைக்குள் இருந்தான். மணியா! மணியா!” என்று கூப்பிட்டான் முரடன். மணியன் மகன் சிறு பையன். அவன் வெளியில் வந்து "அப்பா வேலையாயிருக்கிறார். நீங்கள் திரும்பிப்போகலாம்” என்றான்.

முரடனுக்குக் கோபம் வந்தது. சீற்றத்துடன் குடிசையினுள் நுழைந்தான்.

"வேலையற்றவனே, வெளியே போ! வீணாக என்னைத் தொந்தரவு செய்யாதே!” என்று உரத்த குரலில் கூறினான் மணியன்.

முரடன் அயர்ந்து நின்று விட்டான்.

"போகிறாயா இல்லையா?" என்று மீண்டும் மணியன் முழங்கினான்.

அவன் முழக்கத்தில் வெளிப்பட்ட உறுதி முரடனைக் கலங்க வைத்தது. எதிர்பாராத அதிர்ச்சியடைந்தான். பேசாமல் திரும்பி விட்டான்.

மணியன் நிமிர்ந்து பேசக் காரணம் என்ன என்று ஆராய்ந்தான் முரடன்.

அந்த ஊருக்குப் புதிதாகக் குடி வந்த குத்துச் சண்டை வீரன், மணியன் குடிசையை அடுத்த குடிசையில்தான் குடியிருந்தான். அவன் மணியனுக்கு நண்பனாகி விட்டான். அவன் ஆதரவு தனக்கு இருக்கிறதென்ற உறுதியில்தான் மணியன் துணிந்து பேசினான். இனி மணியனிடம் தன் மிரட்டல் பலிக்காது என்று தெரிந்து கொண்டான் முரடன்.

கருத்துரை :-வலிமையுள்ளவர்களின் துணையைப் பெற்றால் வலிமையற்றவர்களுக்குத் துணிச்சல் வந்துவிடும்.அவர்கள் பிறருக்கு அஞ்ச வேண்டியதில்லை.

வெப்பமும் குளிர்ச்சியும்

காலையில் கதிரவன் தோன்றினான். தன் ஒளியைப் பரப்பி உலகம் முழுவதையும் விளக்கம் செய்தான். கடல் நீர்ப்பரப்பின் மீதும் அவன் கதிர்கள் விரிந்தன. கடலை அழகுபடுத்த வேண்டும் என்று கதிரவன் தன் ஒளியை மேன்மேலும் அதன் மீது பாய்ச்சினான்.

வெப்பத்தைத் தாங்க முடியாமல் கடல் முகம் சுருங்கியது. அதன் அலைகள் தளர்ச்சியடைந்து சிறுத்தன.

தான் அன்போடு கதிர் பாய்ச்சிக் கடலை அழகுபடுத்த முயலும்போது அது ஏன் முகத்தைச் சுருக்கிக் கொள்கிறது என்று கதிரவனுக்குப் புரிய வில்லை.

"கடலே, என்ன கோபம்? என்று கேட்டான் கடல் பதில் பேசவில்லை.

பதில் சொல்லக் கூட விருப்பமில்லாத அளவு தன் மீது கடல் கோபமாய் இருக்கக் காரணம் என்ன என்று சிந்தித்தான் கதிரவன்.

அப்போது காற்றரசன் அந்தப் பக்கமாக வந்தான். கதிரவன் சிந்தனையைக் கண்டு காரணம் கேட்டான். கடலின் போக்கைப்பற்றிக் கதிரவன் கூறினான். அதைக் கேட்டபின் காற்றரசன் சொன்ன செய்தி கதிரவனை மேலும் துன்பப்படச் செய்தது.

"நீ வரும்போதுதான் கடல் தன் அலைகளைச் சுருக்கிக் கொள்கிறது. இரவில் நிலவரசன் வரும் போது எவ்வளவு மகிழ்ச்சி கோள்ளுகிறது தெரியுமா ? பொங்கிப் பொங்கி அலைகளை உயரச் செலுத்தி ஆனந்தம் கொள்ளுகிறது உன்னுடைய நட்பை அது விரும்பவில்லை. நிலவரசனைத்தான் அது விரும்புகிறது” என்று காற்றரசன் கூறினான்.

மறுநாள் நிலவரசன் பகலிலேயே வெளியில் வந்தான். கடல், அலைகளைப் பெரிதாக்கிக் கொண்டது. கதிரவன் நிலாவரசனை நேருக்கு நேரே பார்த்தான். 'நிலாத்தம்பி, இந்தக் கடல் உன்னைக் கண்டு பொங்குவதும் என்னைக் கண்டு. பொங்காததும் ஏன் ?” என்று கதிரவன் கேட்டான்.

"அண்ணா, என் கதிர்கள் குளிர்ச்சியாயிருப்பதால் கடலுக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. அதனால் ஆனந்தமாகப் பொங்குகிறது. உன் கதிர்கள் வெப்பமாக இருப்பதால் சூடு தாங்காமல் சுருங்குகிறது” என்றான் நிலவரசன். காரணமறிந்த கதிரவன் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

கருத்துரை:- இனிய சொற்களே மகிழ்ச்சியைத் தரும்.கடுஞ் சொற்கள் மகிழ்ச்சியைத் தரா.

வாழையும் கன்றும்

ணிவாசகம் என்று ஒரு செல்வன் இருந்தான். அவன் தன்னை நாடி வந்த ஏழை எளியவர்களுக்கு இல்லை என்னாது, கொடையீந்தான். பாரி மன்னனே மணிவாசகமாகத் திரும்பிப் பிறந்து விட்டான் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். மணிவாசகம் கொடுத்துக் கொடுத்து ஏழையானான். ஏழையான பின் பல துன்பங்களுக்காளாகிக் கடைசியில் பட்டினியாகவே கிடந்து இறந்து போனான். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மகன் பெயர் அருளரசன்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த அருளரசன் இளமைப் பருவத்தில் வறுமையினால் பெருந்துன்பத்திற்கு ஆளானான். ஏழை எளியவர்களுக்குத் துன்பம் ஒரு பொருட்டா என்று அவன் துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டான். நாள்தோறும் உழைத்துப் பெறும் ஊதியத்தைத் தவிர அவனுக்கு வேறு வருமானம் இல்லை. அடி முதல் இல்லாததால் அவனால் வாணிகம் செய்து தன் தந்தையைப் போல் செல்வம் சேர்க்கவும் முடியவில்லை. இருந்தாலும் தன்னை அண்டியவர்களுக்குத் தன்னால் ஆன மட்டும் உழைத்தும் பொருள் கொடுத்தும் உதவி வந்தான்.

தமிழ் நாட்டிலே இருந்த மணிவாசகத்தின் புகழ் வடக்கே கங்கைக்கரை வரை பரவியது. ஆனால் அந்தப் புகழ் கங்கைக் கரையை அடைந்த காலத்தில் மணிவாசகம் உலக வாழ்வை நீத்து விட்டான்.

ந. சி. 1-4 காசியில் இருந்த ஒரு வடமொழிப் புலவர் திருக்குறள் படிப்பதற்காகத் தமிழைக் கற்றார். தமிழில் பற்று மிகவே அவர் அதைக் கசடறக் கற்றுப் பெரும் புலவரானார். அவர் மணிவாசகத்தின் புகழைக் கேட்டு, அவனைக் காணப் புறப்பட்டு வந்தார்.

ஊரில் வந்து அவர் மணிவாசகத்தைப் பற்றிக் கேட்டபோது, அவன் இறந்து விட்டதையறிந்து ஏமாற்றமும் துயரமும் அடைந்தார். மணிவாசகத்தின் மகன் அருளரசனையாவது பார்த்துப் போகலாம் என்று அவன் குடிசைக்குச் சென்றார்.

அருளரசன் அவரை அன்போடு வரவேற்றான். வந்த காரணத்தைக் கேட்டு அறிந்தான். தன் பிள்ளையின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி அவர் கையிலே கொடுத்தான். அவர் வாங்க மறுத்தார். அவனோ கட்டாயப்படுத்தி அவரை எடுத்துச் செல்லச் சொன்னான்.

தங்கச் சங்கிலியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார் புலவர். குடிசை முகப்பில் ஒரு பெரிய வாழை மரம் காய்ந்து கருகி நின்றது. அதன் அடியிலிருந்து கிளம்பி வளர்ந்து நின்ற சிறிய மரம் பழுத்து நின்றது. தாய்மரம் கனி கொடுத்து மாண்டாலும், கன்று கனி கொடுக்க மறுக்கவில்லை. அது போலத் தான் அருளரசனும் கொடை கொடுக்கப் பின் வாங்கவில்லை” என்று கூறிக்கொண்டே நன்றியுணர்ச்சியுடன் காசிக்குத் திரும்பினார், தமிழன்பராகிய அந்த வடநாட்டுப் புலவர்.

கருத்துரை:- நல்ல குடிப்பிறந்தவர்களின் அருட்குணத்தை எந்தத் துன்பமும் அழித்துவிட முடியாது.

நோயும் குணமும்

மாரிவளம் என்ற ஒர் ஊர் இருந்தது. அவ்வூரில் சாத்தப்பர் என்று ஒரு வணிகர் இருந்தார். சாத்தப்பர் பரம்பரைச் செல்வர். தம் பாட்டன்மார் ஈட்டிய பொருளுக்கு மேல் தம் உழைப்பால் பெரும் பொருள் ஈட்டினார். மாரிவளத்திலேயே, ஏன் அந்த வட்டத்திலேயே அவர்தான் பெரிய செல்வர். அவருக்கு இருந்த நிலபுலன்களையும், கட்டடங்களையும் நகைகளையும் பிற சொத்துக்களையும் சேர்த்துக் கணக்குப் பார்த்தால் ஐந்து கோடிக்கும் மேல் தேறும் என்று கூறுவார்கள்.

நாடெங்கும் அவருக்குப் பல தொழில்கள் நடைபெற்று வந்தன.

அவரிடம் முருகன் என்ற ஓர் ஏழைப் பையன் எடுபிடியாக வேலை பார்த்து வந்தான். அவனுக்குச் சாத்தப்பர் மாதம் இருபது ரூபாய் 3 சம்பளம் கொடுத்து வந்தார்.

அந்த முருகன் நல்ல பையன். எனவே சாத்தப்பர் அவனைத் தொடர்ந்து வேலைக்கு வைத்துக் கொண்டார்.

ஒருநாள் முருகன் வேலைக்கு வரவில்லை. சாத்தப்பர் அன்று கவனிக்கவில்லை.

இரண்டாவது நாளும் அவன் வேலைக்கு வராமற் போகவே சாத்தப்பர் ஓர் ஆளை முருகன் வீட்டுக்கு அனுப்பி விவரம் கேட்டு வரச் சொன்னார். முருகன் நோயுற்றுப் படுத்திருப்பதாக அந்த ஆள் வந்து சொன்னார். மருத்துவரிடம் காண்பித்தானா, மருந்து வாங்கி உட்கொண்டானா ?” என்றெல்லாம் சாத்தப்பர் அந்த ஆளை வினவினார். அந்த ஆள் அவ்விவரங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு வரவில்லை. பெரும்பாலான வேலைக் காரர்கள் அப்படிப்பட்டவர்கள் தாமே !

சாத்தப்பர் தாமே முருகன் வீட்டுக்குச் சென்றார். பணமில்லாததால் அவன் மருத்துவரிடம் உடம்பைக் காட்டவில்லை என்று அறிந்தார். அங்கிருந்து மருத்துவர் வீட்டுக்குச் சென்றார். அவரை அழைத்துக் கொண்டு போய் முருகனைப் பார்க்கச் செய்தார் ; மருந்தும் கொடுக்கச் செய்தார்.

"முதலாளி, இதற்கெல்லாம் தாங்கள் அலையலாமா ? ஓர் ஆளை அனுப்பினாலே போதாதா ?" என்று முருகனுடைய அம்மா கேட்டாள்.

"அம்மா, இது உயிரைப் பொறுத்த செயல். உள்ளத்தின் உணர்வைப் பொறுத்த செயல். இதற்கெல்லாம் வேலைக்காரர்களை விடக்கூடாது" என்று சொல்லிச் சென்றார் சாத்தப்பர்.

அவருடைய அன்பை எண்ணி அவளும் முருகனும் உருகினார்கள். முருகன் விரைவில் நலம் பெற்றான்.

கருத்துரை- பெரியோர் தம்மை அண்டியவர்கள் எவ்வளவு தாழ்ந்த நிலையில் உள்ளவர்களானாலும், தம் மதிப்பை மறந்து, அவர்கள் இருப்பிடம் சென்று, துன்பத்தை நீக்குவார்கள்.

தென்றலும் சுழற் காற்றும்

தொலைவிலே நின்ற அந்த மாமரம் சலசல வென்று சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தது. அதன் கிளைகளிலே தங்க நிற மாம்பழங்கள் அழகாகத் தொங்கிக் கொண்டிருந்தன. ஓர் அணிற் பிள்ளையும் ஒரு கிளிப்பிள்ளையும் அந்த மாமரத்தை நெருங்கின

"அம்மா, மாமரத் தாயே ! பசித்து வந்திருக்கிறோம்" என்றது கிளிப்பிள்ளை.

"உங்களுக்காகத்தானே பழம் வைத்திருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுங்கள்" என்று கூறியது மாமரம்.

"மாவம்மா ! இன்று, ஒரே ஆனந்தமாயிருப்பது போல் தெரிகிறதே ! என்ன காரணம்?" என்று விசாரித்தது அணிற்பிள்ளை.

"பிள்ளைகளே! தென்றல் மாமா வந்திருக்கிறார். அவர் வந்திருப்பதே ஓர் இன்பம்தானே!" என்று கூறியது மாமரம்.

அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டன. தென்றல் மாமாவுடன் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது மாமரம். இரண்டு நாட்கழித்து அணிற்பிள்ளையும் கிளிப்பிள்ளையும் மாமரத்தைத் தேடி வந்தன. “மாவம்மா !! நேற்றெல்லாம் 'ஒ'வென்று அலறிக் கொண்டிருந்தாயே ஏன்?’ என்று கேட்டது அணிற்பிள்ளை.

"இதென்ன அநியாயம்! மாமரத் தாயே! உன் கிளைகளெல்லாம் ஏன் முறிந்து கிடக்கின்றன. ஐயோ ! பழமெல்லாம் கீழே விழுந்து அழுகிக் கிடக்கின்றனவே, ஏன்?" என்று பதறிப் போய்க் கேட்டது கிளிப்பிள்ளை

"பிள்ளைகளே, நேற்று சுழற்காற்று என்கிற முரடன் வந்தான். அவன் செய்த அட்டுழியம்தான் இது" என்று கூறிக் கண்ணீர் விட்டது மாமரம்.

மாமரத்தின் துன்பத்தைக் காணப் பொறுக்காமல் கிளிப்பிள்ளையும் அணிற்பிள்ளையும் கண்ணீர் விட்டன

அவற்றிற்குப் பழம் கொடுக்க முடியாமல் போய் விட்டதே என்று மாமரம் வருந்தியது. பின்னர் அவையிரண்டும் தத்தம் இருப்பிடம் நோக்கிச் சென்றன.

கருத்துரை:- நல்லவர்கள் வரவால் இன்பம் ஏற்படும். தீயோர்கள் வரவால் துன்பமே உண்டாகும்.


துன்பமும் துடிப்பும்

ரு மனிதனுக்குக் காலிலே புண் வந்தது. வலி தாங்க முடியாமல் கால் வருந்தியது. அதனால் நடக்க முடியவில்லை. கால்படும் துயரத்தைக் கண்டு கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.

மற்றொரு முறை கையிலே தீச்சுட்டுவிட்டது. கை உதறி உதறித் துடித்தது. அதைக் கண்ட போதும் அந்தக் கண்கள் வருந்தின. வருந்திக் கலங்கின. கலங்கிக் கண்ணீர் வடித்தன.

அதே மனிதனுக்கு முதுகிலே பிளவை வந்தது. துன்பங்கள் அடுத்தடுத்து ஒருவனையே வந்து வாட்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது அந்த மனிதனைப் பொறுத்த வரையில் உண்மையாயிற்று.

முதுகிலே பிளவை வந்ததால் முதுகால் தாங்க முடியவில்லை. சாயவும் முடியாமல், படுக்கவும் முடியாமல், முதுகு மிக மிகத் தொல்லைப்பட்டது. தம் பார்வைக்குத் தென்படாத முதுகுக்கு வலி வந்த போதிலும் கண்கள் வருந்தின. வருந்திக்கலங்கின. கலங்கிக் கண்ணரீர் வடித்தன. இப்படி ஒவ்வோர் உறுப்பிலும் ஏதாவது நோய், வந்தபோதெல்லாம் அந்தக் கண்கள் அவற்றைக் காணப் பொறுக்காமல் கலங்கிக் கண்ணீர் வடித்தன.

ஒரு முறை அந்தக் கண்களுக்கே துன்பம் வந்து விட்டது. ஒரு கண்ணில் ஏதோ ஒரு துரும்பு விழுந்து கண்ணை உறுத்தி வருந்தியது. துரும்பு விழுந்த கண்ணும் விழாத கண்ணும் சேர்ந்து துடிதுடித்துக் கலங்கின. அப்போது கண்கள் பட்ட துயரைக் கண்டு வேறு எந்த உறுப்பும் வருத்தவில்லை. கண் பொட்டையானால் கூட அவை அதற்காக வருத்தப் படப்போவதில்லை என்றே தோன்றியது. கை மட்டும் ஆதரவாக வந்து தன் விரல்களால் கண்ணில் விழுந்த துரும்பை எடுக்க முயன்றது. கண்ணிலிருந்து வடிந்த நீரைத் துடைத்து விட்டது.

"கண் அண்ணா, நீ எல்லோருக்காகவும் வருந்தினாய்; ஆனால் உன் துயரத்தைக்கண்டு ஒருவரும் வருந்தவில்லையே!” என்று கூறி அதைத் தேற்றியது கை.

மறுபடியும் காலிலே ஆணி குத்தியபோது கண்கள் கலங்கிக் கண்ணீர் வடிக்கத் தவறவில்லை. கால் தனக்காக வருந்தவில்லையே என்று அது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

கருத்துரை:- பெரியவர்கள் பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகவே கருதி உருகுவார்கள். பிறர் தமக்காக வருத்தப்படவில்லை என்பதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.


தேனும் வேம்பும்

ரு வண்டும் காகமும் வழியில் சந்தித்துக் கொண்டன.

வண்டுத் தம்பி! எங்கிருந்து வருகிறாய்” என்று கேட்டது காகம்.

"சோலையிலிருந்து” என்று பதிலளித்தது. வண்டு.

சோலையிலிருந்தா ? நானும் அங்கிருந்து தானே வருகிறேன். உன்னைக் காணவில்லையே ! நீ அங்கு என்ன செய்து கொண்டிருந்தாய் ?” என்று வினவியது காகம்.

"காக்கையண்ணா, சோலையிலே பூஞ்செடிகள் இருக்கின்றனவே, அந்தப் பக்கம்தான் நான் இருந்தேன். பூக்களிலே இருந்த தேனை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தேன்” என்று கூறியது. வண்டு.

தேனா ? அது எப்படியிருக்கும் ?’ என்று. கேட்டது காகம்.

தேன் என்றால் உங்களுக்குத் தெரியாதா ? தேன் என்று சொல்லும்போதே இனிப்பாக இருக்கிறதே. அது கூடத் தெரியவில்லையா ? தேன் மிக இனிப்பானது. அதன் சுவைக்கு மேலான சுவையுள்ள பொருள் இந்த உலகத்திலேயே கிடையாது!’ என்று கூறியது வண்டு.

“பூ ! இவ்வளவுதானா ?” என்று அலட்சியமாகப் பதில் கூறியது காகம்.

“என்ன அண்ணா, பூ என்று சொல்லி விட்டீர்கள் ? பூவிலிருந்து கிடைக்கிற தேனுக்குப் பூவுலகிலேயே நிகரான ஒரு பொருள் கிடையாது. அதைக் குடிக்கும் போது வாய்க்குக் கிடைக்கிற சுவையும் வயிற்றுக்குக் கிடைக்கிற நிறைவும் உடலுக்குக் கிடைக்கிற ஊட்டமும் உள்ளத்திற்குக் கிடைக்கிற இன்பமும் அளவிட்டுச் சொல்ல முடியாது அண்ணா !” என்று தேனுண்ட மயக்கத்திலே வெறியோடு பேசியது வண்டு.

“வண்டுத் தம்பி, நீ கண்டது அவ்வளவுதான் ! என் வேப்பம் பழத்துக்கு மேலாகவா இதெல்லாம் ? வேப்பம் பழம் கிடைத்தால் இந்த உலகத்தில் வேறு உணவே எனக்கு வேண்டாமே ! நான் சோலையிலே நிறைய வேப்பம் பழம் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன். என்னிடம் உன் தேனைப் பற்றி அளக்காதே!" என்று கூறி விட்டுப் பறந்தது காகம்.

கருத்துரை :- சோலைக்குச் சென்ற வண்டு தேனைப் பற்றிப் பேசியது. காகமோ வேம்பைப் பற்றிப் பேசியது. உயர்ந்தவர்கள் ஒருவனிடமுள்ள நற்குணங்கண்டு மகிழ்ந்து அவற்றைப் போற்றிப் பேசுவர் ; தாழ்ந்தவர்கள் அவரிடமுள்ள தீய குணங்களையே எடுத்துப் பேசுவர்.


அடியும் ஆதரவும்

க்கத்து வீட்டிலே ஒரே கூச்சலும் கூப்பாடுமாயிருந்தது. தங்கம்மாள் ஒடிப்போய்ப் பார்த்து விட்டு வந்தாள். "என்ன நடந்தது ?” என்று விசாரித்தார் பொன்னப்பர்.

"ஆசிரியர் நமசிவாயம் கடன் வாங்கியிருந்தாராம். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்த முரடன் கடனைத் திருப்பிக் கொடுக்கிறாயா இல்லையா என்று கேட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று சொன்னாள் தங்கம்மாள்.

"ஆசிரியர் நமசிவாயத்தை அடிக்கிறானா ? அப்பாவியாயிற்றே அவர். இரு, இதோ வருகிறேன்!” என்று சொல்லிப் பொன்னப்பர் எழுந்தார். பக்கத்து வீட்டுக்கு ஓடினார். ஆசிரியர் நமசிவாயத்தை அந்த முரடன் அப்போதும் அடித்துக் கொண்டுதான் இருந்தான். பொன்னப்பர் அவன் மேல் பாய்ந்தார். அவன் கையில் இருந்த தடியைப் பறித்தார். அவனைத் தூணோடு தூணாகச் சேர்த்து வைத்துக் கட்டினார். அதன்பின் நமசிவாயத்தை நோக்கி, "என்ன நடந்தது ? இவனிடம் எவ்வளவு கடன் வாங்கினீர்கள் ?" என்று விசாரித்தார். "நான் கடனே வாங்கவில்லை. என்னை உங்களுக்குத் தெரியாதா ? எனக்குக் கடன் வாங்க என்ன தேவையிருக்கிறது !” என்று அடிபட்ட வலி வேதனையோடு பேசினார் ஆசிரியர் நமசிவாயம். அவர் பொய் பேசாதவர் என்பது பொன்னப்பர் அறிந்ததே.

கொல்லும் பார்வையோடு அவர் முரடனை நோக்கினார். "சந்தையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன். இப்போது இல்லை என்கிறாரே” என்றான் முரடன்.

நமசிவாயம் ஆப்பக்காரக் கிழவி வீட்டில் சாப்பிடுகிறார் என்பது யாவரும் அறிந்த செய்தி. அவர் சந்தைக்குப் போக வேண்டிய வேலையே இல்லை. முரடன் பொய் அம்பலமாகி விட்டது. பொன்னப்பர் அவனைக் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

"பொன்னப்பரே, சமயத்தில் நீங்கள் வந்து காப்பாற்றாவிட்டால், அந்த முரடன் என்னைச் சாகடித்திருப்பான், பிறர் துயரம் தீர்க்க முன் வரும் உங்களைப் போன்ற வீரர்களால்தான் என்னைப் போன்ற அப்பாவிகள் பிழைத்திருக்கிறார்கள்” என்று நன்றி நிறைந்த சொற்களைக் கூறினார் ஆசிரியர் நமசிவாயம்.

கருத்துரை :- பெரியவர்கள், பிறர் துன்பத்தைத் தமக்கு வந்ததாகக் கருதி விரைந்து சென்று நீக்குவார்கள்.


நீச்சல் வீரர்கள்

மிகப் பழங்காலத்தில் பாண்டி நாட்டில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் வீரன்; மற்றொருவன் பெயர் சூரன். வீரனும் சூரனும் ஆற்றல் மிக்கவர்கள். மலை ஏறுவதிலும் மரம் ஏறுவதிலும் வல்லவர்கள். நீச்சற்கலையில் நிகரற்றவர்கள். வேல் வீசுவதிலும் வில் வளைப்பதிலும் வாள் சுழற்றுவதிலும் அவர்களையொப்பவர்கள் யாரும் கிடையாது.

வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்தோடும் சமயங்களில்கூட அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அக்கரைக்கு நீந்திச் சென்றிருக்கிறார்கள். ஏரி குளங்களில் நீந்துவது அவர்களுக்கு மிக எளிய கலை. இந்திர விழாவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளில், எத்தனையோ முறை அவர்கள் முதற்பரிசு வாங்கியிருக்கிறார்கள்.

பாண்டி நாடு முழுவதும் அவர்கள் புகழ் பரவியிருந்தது. வெளிநாடுகளிலும் தங்கள் திறமையைக் காட்டி விருது பெற வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த எண்ணத்தைச் செயற்படுத்த அவர்கள் ஒரு நாள் பயணம் புறப்பட்டு விட்டார்கள்.

நாடு நாடாகச் சுற்றி அவர்கள் நல்ல பெயரும் புகழும் பெற்றார்கள். ஒருமுறை கடற்கரை அருகில் இருந்த ஒர் ஊருக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். புகழ்பெற்ற நீச்சல்காரர்கள் வந்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் அவர்களைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டார்கள்.

"எங்களோடு போட்டி போட்டு நீந்தக்கூடிய இளைஞர்கள் இந்த ஊரில் யாராவது இருக்கிறார்களா?' என்று அவர்கள் சவால் விட்டார்கள். அவர்களோடு போட்டி போட பத்து இளைஞர்கள் முன் வந்தார்கள்.

போட்டி நடத்த ஏற்பாடாயிற்று. அவ்வூரில் ஒடிய ஆற்றின் ஒரு கரையில் உள்ள ஒரு துறைக்கு நீந்திச்செல்ல வேண்டும். நீச்சல்காரர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நீந்தத் துவங்கினார்கள். மக்கள் கூட்டம் கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. வழக்கம்போல் வீரனும் சூரனுமே முதலில் நீந்திச் சென்று அக்கரை சேர்ந்தார்கள். அவர்களுக்கு மக்கள் பலப்பல பரிசுகளை அள்ளி வழங்கினார்கள். இவற்றையெல்லாம் கண்டு தோற்றுப்போன இளைஞன் ஒருவனுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. அவன் அவர்களை நோக்கிக் கூறினான்: "ஆற்றைக் கடந்த விட்டீர்கள்! இது அப்படியொன்றும் பெரிய செயலல்ல. உங்களால் கடலைக் கடக்க முடியுமா?’’

கடலா? அது என்ன?’ என்று வியப்புடன் வீரனும் சூரனும் கேட்டனர். அவர்கள் அதற்கு முன் கடலைப் பார்த்ததேயில்லை.

"கடலுக்குக் கரையே கிடையாது” என்று ஒரு பெரிய மனிதர் கூறினார். கரையில்லாமல் ஒரு நீர்நிலை உலகத்தில் இருக்க முடியாது. சரி, கடலை எங்களுக்குக் காட்டுங்கள், பார்க்கலாம்” என்று வீரனும் சூரனும் கேட்டனர்.

ஊர்மக்கள் அவர்களைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.

"கண்ணுக்கெட்டிய மட்டும் கரையே தென்படவில்லையே இதுதான் கடலா !” என்று வியந்தான் வீரன்.

“அதற்கும் அப்பால் கரையிருக்கும்” என்று உறுதியான குரலில் கூறினான் சூரன்.

"அப்பால் உள்ள கரைக்கு நீந்திச் சென்று திரும்பிவர உங்களால் முடியுமா?’ என்று கேட்டான் தோற்றுப்போன இளைஞன்.

"எங்களால் முடியாதது எதுவும் இல்லை" என்று கூறிக்கொண்டே கடலில் குதித்து நீந்தினர் வீரனும் சூரனும்.

"வீரனே! சூரனே ! வேண்டாம், வேண்டாம் ! திரும்பிவிடுங்கள்!” என்று ஊர்ப்பெரியவர்கள் கூவியழைத்தனர். ஆனால், கூக்குரல்களையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

அகன்று பரந்த கடலில் பச்சையலைகளினிடையே அவர்கள் சிறிதும் அஞ்சாது நீந்திச் சென்றனர். எவ்வளவு நேரம் நீந்தியும் அவர்கள் மறு கரையைக் காணமுடியவில்லை. கரையில் நின்ற மக்கள் இனி அவர்கள் திரும்பமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு கலைந்து சென்றுவிட்டார்கள். நெடுநேரம் நீந்திய பிறகு அவர்கள் கைகள் அலுத்துப் போயின. இனி என்ன செய்வதென்று வீரன் கலங்கினான். அப்போது அவ்வழியாக ஒரு மீன் பிடிக்கும் படகு வந்தது. வீரன் அதைக் கூவி அழைத்தான். படகில் இருந்தவர்கள், வீரன் வந்த பக்கம் படகைத் திருப்பி ஒட்டிவந்தார்கள்.

வீரன் படகில் ஏறிக்கொண்டான். அவர்களை வேண்டிக்கொண்டு சூரன் நீந்திவரும் பக்கமாகப் படகை ஒட்டச் சொன்னான்.

படகு சூரனை நெருங்கியதும், வந்து ஏறிக் கொள்ளும்படி வீரன் அவனைக் கூப்பிட்டான்.

"அக்கரையைக் காணாமல் நான் திரும்ப மாட்டேன்" என்று கூறிச் சூரன் மறுத்துவிட்டான்.

படகுக்காரர்கள் எவ்வளவோ கூறியும் சூரன் அவர்கள் சொல்லைக் கேட்கவில்லை. அவன் தன் போக்கில் நீந்திக்கொண்டே சென்றான். தங்கள் சொல்லை அவன் கேட்கவில்லை என்றதும், படகுக்காரர்கள் கரை நோக்கித் திரும்பினார்கள். சூரன் கையில் வலுவிருக்கும் வரை நீந்திக்கொண்டேயிருந்து கடைசியில் தண்ணிரில் மூழ்கி இறந்து போனான்.

படகில் திரும்பி வந்த வீரனைக் கடலில் அவ்வளவு தூரம் அஞ்சாமல் நீந்திச் சென்றதற்காக ஊர்மக்கள் பாராட்டிப் பேசினார்கள். திரும்பி வராமல் உயிர்விட்ட சூரனையோ அறிவில்லாதவன் என்று ஏசினார்கள். வீரன் தன் பரிசுப் பொருட்களுடன் திரும்பினான்.

கருத்துரை: - துன்பப்படுங் காலத்தில் கிடைக்கும் துணையை உதறித் தள்ளிவிடக் கூடாது.

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=நல்வழிச்_சிறுகதைகள்-1&oldid=1293868" இலிருந்து மீள்விக்கப்பட்டது