நான்மணிக்குறள்/அறிவன் வாழ்த்து

விக்கிமூலம் இலிருந்து

1. அறிவன் வாழ்த்து

1. அகில உலகங்கள் யாவும் தனது
மகிமையாற் கொண்டாற்கென் வாழ்த்து.
2. ஒலிகட் ககரம் அடிப்படை யேபோல்
உலகுக் கமைந்தான் இறை.
3. பேரறி வான பெரியோன் அவனடி
சேரல் அறிஞன் திறம்.
4. அண்ட சராசரங்கள் தானே அவையாகிக்
கொண்டவனை நெஞ்சே குறி!
5. ஆக்கியும் காத்தும் மறைத்தும் அருளியும்
போக்கும் இறையே புகல்!
6. உருவும் இலதாய் அருவும் இலதாய்
உருவரு தாண்டியான் ஒன்று
7. மனம்வாக்குக் காயம் மதியின்மீக் கூறும்
இன்னே எலோர்க்கும் இறை!
8. அறிவன் விதிகள் அறிதல்மெய்ஞ் ஞானம்
செறிதல் பிறவியிலா வீடு.
9. பிறவி யிலாத பெருவாழ்வு வேண்டின்
அறத்தின் துணையாம் அது.
10. வினைகளின் வேரறுக்க வல்ல இறைவன்
புனைகழல் நன்னெஞ்சே போற்று!