நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. சுந்தர ராவ்

விக்கிமூலம் இலிருந்து

திரு. சுந்தர ராவ்

இவர் மேற்சொன்ன கோவிந்தசாமி ராவ் கம்பெனியில் முக்கிய ஸ்திரீ பாத்திரமாக நடித்தவர். ஆயினும் நான் பார்த்த போது ஸ்திரீ வேஷத்திற்கு தகுந்த உருவமில்லை. மிகவும் பெருத்த உடம்பையுடையவர். அதிலும் கறுப்பு, ஆயினும் சங்கீதம் மாத்திரம் நன்ருய் கற்றவர். இவருடைய பாட்டை கேட்பதற்கே ஜனங்கள் நாடகத்திற்கு வருவார்கள். இவர் சாவேரி ராகம் பாடுவதில் மிக்க கீர்த்தி பெற்றிருந்தார். எந்த நாடகத்தில் என்ன பாட்டைப் பாடினலும் சாவேரி, சாவேரி என்று ஜனங்கள் கத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு நாடகத்திலும் சாவேரி பாடித்தான் ஆக வேண்டும். இவரது நடிப்புக் கலையைப் பற்றி நான் அதிக மாகக் கூறுவதற்கில்லை. இவர் தாகை ஒரு நாடகக் கம்பெனியைப் பிறகு ஏற்படுத்தினர்.