பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



78

களிற்றியானை நிரை

௧௬௯


(சொ - ள்.) க௪. ஓங்கு மலை நாட - ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே,

க. நனந்தலை கானத்து ஆளி அஞ்சி - அகன்ற இடத்தையுடைய காட்டினிடத்தே ஆளியினை யஞ்சி,

உ-ரு. இனம் தலைத் தரூஉம் - தன் இனத்தைத் தன்னிடத்தே கூட்டிக் கொள்ளும். எறுழ் கிளர் முன்பின் - விளங்கித் தோன்றும் மிக்க வலியினையும், வரி Dமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து - வரியினை யுடைய வண்டுகள் ஒலிக்கும் வாயிற்புகும் மதத்தினையும் உடைய, பொறி நுதல் பொலிந்த - புள்ளிகள் பொருந்திய நெற்றியாற் பொலிவுற்ற, வயக்களிற்று ஒருத்தல் - வலி பொருந்திய ஆண் யானைகளின் தலைவன், இரும்பிணர்த் தடக்கையின் - கரிய சருச்சரை யுடைய பெரிய கையால், ஏம் உறத் தழுவ - பாதுகாவல் தோன்றத் தழுவவும்,

௬. கடும் சூல் மடப்பிடி நடுங்கும் சாரல் - முதற் சூலையுடைய இளைய பிடி நடுங்கும் பக்க மலையிலுள்ள,

எ. தேம்பிழி நறவின் குறவர் முன்றில் - இனிமையுறப் பிழிந்த கள்ளினை யுடைய குறவர்களது முற்றத்தில்,

அ- க௦. முந்தூழ் ஆய்மலர் உதிர - மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தள் நீடு இதழ் நெடுந்துடுப்பு ஒசிய - காந்தளது நீண்ட இதழையுடைய பெரிய மலர் முறியவும், தண் என வாடை தூக்கும் - தண்ணென்று வாடைக்காற்று வீசும், வருபனி அற்சிரம்- தோன்றுகின்ற பனியையுடைய முன் பனிக்காலத்தில்,

கக-௩. எம்விட்டு அகன்ற சின்னாள் - எம்மை விட்டகன்றிருந்த சில நாட்களுள்ளே, நம் இல் புலம்பில் - நம்மைப் பிரிந்திருக்கும் தனிமையால், தம்மூர் - தம்மூரின் கண்ணே , தமியர் அளியர் தாம் - தனித்திருக்கும் இரங்கற்குரிய இவர், என் ஆகுவர் கொல் என - எந்நிலை யடைவரோ என எண்ணி இரங்கி,

க௫-உ௪. உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை . உல கெலாம் பரக்கும் பலரும் புகழும் நல்ல புகழினையும், வாய்மொழி - மெய்ம்மொழியினையுமுடைய, கபிலன் சூழ - கபிலன் ஆய்ந்து வினை செய், சேய் நின்று செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு . நெடுந் தொலைவினின்று வளம் பொருந்திய வயல்களில் விளைந்த நெற் கதிர்களைக் கொண்டுவந்து, தடந்தாள் ஆம்பல் மலரொடு கூட்டி - அவற்றைப் பெரிய தாளினையுடைய ஆம்பல் மலராலாய அவியலொடு அட்டு உண்பித்து, யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையா - பல யாண்டுகள் கழியவும் போரை விரும்பிச் செய்யும் இடத்தினின்றும் பெயராமல், தாள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி - பகைவர் வாட்போரினைக் கலக்கி முயற்சியால் வென்று, ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய - நிமிர்ந்த கொம்புகள் பொருந்திய களிற்றினையுடைய மூவேந்தரையும் பிறக்கிடச் செய்த, கடும் பரிப் புரவிக் கைவண் பாரி - மிக்க விரைவினையுடைய குதிரை