பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௪௨

அகநானூறு

பாட்டு


களவுடம் படுநரில் கவிழ்ந்து நிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண் டியானும்
பேணினென் அல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவு ளன்னோள்நின் -
மகன்தா யாதல் புரைவதாங் கெனவே.

-- சாகலாசனார்.

(சொ - ள்.) கஎ. மகிழ்ந - தலைவனே!

க-ரு. நாயுடை முது நீர் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயல் இதழ் புரையும் - நீர் நாய்களை யுடைய பழைய நீரில் தழைத்த தாமரையின் பூந்தாதாகிய அல்லியின் அடுத்த இதழினை யொத்த, மாசு இல் அங்கை மணிமருள் அவ்வாய் - குற்றமில்லாத அகங்கையினையும் பவளம் போன்ற அழகிய வாயினையும், நாவொடு நவிலா நகை படு தீஞ்சொல் - நாவாற் பயின்று பேசப்படாத கேட்டார்க்கு மகிழ்ச்சியைத் தரும் இனிய குதலைச் சொற்களையும் உடைய, யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனை - கண்டார் அனைவரும் விரும்பும் பொற்றொடி யணிந்த புதல்வனை,

சு--கக. பொலம் கலம் சுமந்த - பொற்கலன்களைத் தாங்கிய, கூர் எயிற்று அரிவை - கூரிய பற்களையுடைய நின் பரத்தை, தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டு - அவன் சிறுதேர் ஓட்டிக் கொண்டிருந்த தெருவில் தனியனாய் நிற்பக் கண்டு, செத்தனள் பேணி - நின் ஒப்புமை கருதிப் போற்றி, யாவரும் காணுநர் இன்மையின் - யாருங் காண்போர் இன்மையின், குறுகினள் - குறுகி, பெரிது உவந்து - மிகமகிழ்ந்து, வருகஎன் உயிரென - என் உயிரே வருவாயாக என, பூண் தாங்கு இளமுலை கொண்டனள் நின்றோள் கண்டு - பூண்களை யணிந்த இளமுலைகளில் அணைத்துக்கொண்டு நின்றவளைக் கண்டு,

கக--ச. நிலைச் செல்லேன் - நின்ற நிலையினின்று மீளேனாய், விரைவனென் வந்து கவைஇ - விரைந்து வந்து அவளை அணைத்து, மாசில் குறு மகள் - குற்றமற்ற இளைய மகளே, எவன் பேதுற்றனை - ஏன் மயங்கினை, நீயும் தாயை இவற்கு என - இவனுக்கு நீயும் ஒரு தாயல்லையோ என்று, யான் தன் கரைய - யான் அவளிடம் கூற,

கரு-சு. களவு உடம்படுநரில் கவிழ்ந்து - தாம் செய்த களவைக் (கண்டு கொண்டார் முன்) உடன் பட்டு நிற்பார்போல முகம் கவிழ்ந்து, நிலம் கிளையா நாணி நின்றோள் நிலைகண்டு - நிலத்தைக் கால்விரலாற் கீறி நாணி நின்ற அவள் தன் நிலையினைக் கண்டு,

கசு-கூ. வானத்து அணங்கு அருங் கடவுள் அன்னோள் - வானத்தின் அரிய தெய்வமாகிய அருந்ததி போன்றாள், நின் மகன் தாயாதல் புரைவது எனவே - நின் மகனுக்குத் தாயாதல் ஒக்கும் என எண்ணி, யானும் பேணினென் அல்லனோ - யானும் அவளை விரும்பினேன் அல்லனோ.