தமிழர் கண்ட அரசன் • 308
–––––––––––––––––––––––––––––––––––––
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே.
[காய்நெல்—விளைந்த நெல், கவளம்—யானைக்குத் தரும் சோற்று உருண்டை, மா—ஒரு சென்ட் போன்ற நில அளவு, செறு—ஏக்கர் போன்ற அளவு, நந்தும்—பெருகும், வைகல்—தினந்தோறும், கல்என் சுற்றம்—ஆரவாரக்கூட்டம், பரிவு தப—அன்பு கெடும்படி, பிண்டம்—பொருள் தொகுதி, நச்சின்—விரும்பினால்]
தமிழ் நாட்டகலம்
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும்’
இந்நல் உலகத்தைப் பண்டு தொட்டு ஆண்டவர் மூவேந்தர் எனப்படுவர். சேர, சோழ, பாண்டியர் என்று கூறப்பெறும் இவர்களைப் பற்றிப் பண்டை இலக்கியங்கள் பரக்கப் பேசுகின்றன. இம்மூவரும் சேர்ந்து ஆட்சிபுரிந்த இடத்தின் பரப்புத்தான் யாது என்று நினைக்கிறீர்கள்? வடக்கே வேங்கடமலை (இப்பொழுது திருப்பதி என்று கூறும் மலையே), தெற்கே கன்னியாகுமரி, மேற்கும் கிழக்கும் கடல்கள், வடக்கிலிருந்து தெற்கே ஏறக்குறைய 500 மைல்கள், கிழக்கிலிருந்து மேற்கே அகன்ற விடத்தில் 400 மைல், குறுகிய இடத்தில் சில அடிகள் (குமரி முனையில்) இந்த அளவு குறுகிய நிலத்தை ஆட்சி செய்தவர் மூவர்.
‘மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசு முழங்குதானை மூவர்’