பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2020.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71003 27343 1831-103943 மனங்மதர் புமாளும் மிக்க இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைந்து, நம் தாய்மொழியை மேன்மையுறச் செய்யலாம். 349113324323-537 எரீக்கிஅக்ராகைகபது, 2340 'மனகம்தர் ஆருயுயுகம் தினவும் 24 933 22 1073/2016 237,85 AVO 7/244 106 1. முதலில், நம் குழந்தைகளுக்குப் பொருள் அறியாமல் வடமொழிப் பெயர்கள் சூட்டும் வழக்கத்தை விடுத்து, அழகுத் தமிழில் நற்பெயர் சூட்டும் வழக்கம் பெற்றோர்களிடையே வர வேண்டும். பிள்ளைகளுக்கு நாம் வைக்கும் பெயர் என்பது நம் இனத்தின் அடையாளம் என்பதைப் பெற்றோர்கள் உணர் வேண்டும். அதேபோல, அங்காடிகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், நற்றமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட வேண்டும். இதனை அரசு தனது பரப்புரைகளாலும், சட்டத்தின் துணை கொண்டும் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் தூயதமிழில் பேச விரும்பும் இளைஞர்களின் தமிழ் உணர்வினைத் தூண்டக்கூடிய நல்லதொரு சூழ்நிலை உருவாகும். 2. தமிழ்ச்சொல், பிறமொழிச்சொல் குழப்பம் தவிர்க்க, நாம் அன்றாடம் பேசும் தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு விரிவான பட்டியல் இட வேண்டும். பின்பு அவற்றிற்கு மாற்றான, ஈடான நற்றமிழ்ச் சொற்களை அறிஞர் குழு ஒன்றின் உதவியுடன் தேர்ந்தெடுத்து, விரிவானதோர் அகரமுதலியினை நாம் உருவாக்க வேண்டும்; அவற்றில் மக்களிடையே மிகுந்த புழக்கத்தில் உள்ள சொற்களை எல்லாம் ஒருங்கிணைத்து, எளிய 'தனித்தமிழ்க் கையேடாக'ப் பதிப்பித்து, பல்துறைகளைச் சார்ந்த கலைஞர்கள் துணையுடன் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். 3. ஆரம்ப நிலையில் இருந்தே ஆங்கிலவழிக் கற்பிக்கும் இப்போதுள்ள கல்வி முறையை அடியோடு அகற்றி விட்டு, தமிழ்வழிக் கல்வி முறையைத் தமிழகமெங்கும் கொண்டுவர வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் தமிழிலேயே கற்பிக்க வேண்டும். தாய்மொழி வழியில் ஆரம்பக் கல்வி கற்றுத் தெளிவு கொண்ட மாணவர்களால்தான் ஆங்கிலம் போன்ற பிறமொழியையும், மற்ற பாடங்களையும் நன்கு புரிந்து படிக்க இயலும். ஆரம்பக் கல்வியே ஆங்கில வழியில் என்று இருப்பதால், மாணவர்கள் தாய்மொழியும் அறியாமல், அயல்மொழியும் புரியாமல் தடுமாற்றம் அடையும் தற்போதைய நிலையை மாற்றவேண்டும். alesse தவி து 4? 7203213 ஏராளமான 4. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் என்பது, முன்பு போல, ஒரு மொழிப்பாடமாக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட வேண்டும். (அறிஞர் அண்ணா, அப்துல் கலாம் ஐயா, 'சந்திரயான்' விஞ்ஞானிகள் திரு.மயில்சாமி அண்ணாதுரை, திரு.சிவன் என அறிஞர்கள் தமிழ் வழியில் கல்வி கற்றவர்களே; அவ்வாறு தாய்மொழி வழியே கல்வி கற்றதனால்தான், அவர்களின் சிந்தனைத் திறன் விரிவடைந்து, அவர்களால் சாதனைகள் பல படைக்க முடிந்தது.) அதன்பின் கல்லூரியில், அனைத்துப் பாடநூல்களும் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படும் வரை மட்டுமே, ஆங்கில வழியில் பாடங்களைக் கற்பிக்கலாம். எந்த விருப்பப் பாடம் எடுத்தாலும் சரி, இளங்கலைப் பட்டம் வாங்கும் வரை, தமிழும் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும். இப்போது போல, தமிழே படிக்காமல் எந்த ஒரு மாணவரும் பட்டம் பெறலாம் என்ற நிலை ஒழிக்கப்பட வேண்டும். VARALEN 5. தமிழில் உயர் படிப்புகளைக் கற்பிக்க இயலாது என்று பலரும் இங்கு தவறாகக் கருதுகிறார்கள் ; ஆனால், இன்று கரோனா (தீநுண்மி) நோய் போல, 1857ல் உலகெங்கும் காலரா நோய் பரவிய காலத்தில், சாமுவேல் ஃபிஸ்க் க்ரீன் எனும் அமெரிக்க மருத்துவர், யாழ் நகருக்குச் சென்று, அங்குள்ள தமிழ் மக்களைக் காக்கும் நோக்கில், தமிழ் இளைஞர்களுக்கு மருத்துவக் கல்வி அளிப்பதற்காக, பல மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, ஏராளமான மருத்துவக் கலைச்சொற்களை உருவாக்கி, மருத்துவப் படிப்பையே தமிழில் கற்பித்து, சிறந்த மருத்துவர்களை உருவாக்கினார். அந்நிகழ்வானது தமிழ் வழியில் எந்தவோர் உயர் கல்வியையும் கற்பிக்க முடியும் என்பதனை உறுதியாக உலகிற்கு எடுத்துக்காட்டிய உயரிய நிகழ்வாகும். 6. தமிழக அரசானது பத்தாண்டுகட்கு முன்பே பொறியியல் படிப்புகளைத் தமிழ்வழியில் கற்பிக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்துள்ளது; எனவே, வல்லமை வாய்ந்த மொழியினைக் கையில் வைத்துக்கொண்டு, வழியற்றோர் போல நாம் வாடி நிற்காமல், எண்ணித் துணிந்து கருமம் ஆற்றினால், எண்ணியாங்கு எய்தலாம் என்பது திண்ணம் ஆகும். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அகராதி ஆய்வு மலர் - 2020-டி) # 150 இதையாந்தத அப்புழகவு tán gái khi sử 7. பிரெஞ்சு மொழியை அந்த நாட்டு அரசாங்கமே பிறமொழிக் கலப்பிலிருந்து மீட்டெடுத்தது போல (மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒருமுறை ஒப்பந்தத்தை மீறி, ஆண்அன 1=5303p? (1203373/313131313 Fathe> சபது அருகாளத்தத் 277721200043 34 43-32720181574220793 B 16 தவார்சத்திவுகபுழுது 410e 20341315342100704-310 220034