உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 ஆதாரமற்ற பேச்சுக்கு அர்ததமற்ற கூச்சல் போட்ட இந்த அகிம்சாவாதிகள் இந்த அக்ரமத்துக்கு வாய் திறந்து ஏதாவது கூறியிருப்பார்களா? அவர் களது தேசீய ஏடுகள் ஒப்புக்காவது இதைக் கண்டித் திருக்க வேண்டாமா, தோழர்களே ! பாருங்கள், நம் பரமாத்மாக்கள் பாராளும் லட்சணத்தை! இப்படிப் பட்டவர்கள் தான் மாட்டுப் பெட்டியைக் காட்டி ஓட்டு கேட்கிறார்கள் ! நெசவாளர் துயர் நீங்க வில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகமாகி விட்டது. எங்கும் பட்டினிப் பட்டாளம் பவனி வரத் தலைப்பட்டு விட்டன. பசிக் கொடுமை தாளாது மக்கள் மாண்டு மடிவது மட்டு மல்ல; தற்கொலையும் செய்து கொள்ளும் நிலைக்கு நாடு வந்து விட்டது, இந்த நல்லவர்களின் ஆட்சி காலத்தில். சமீபத்தில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு வந்தது. அதை நீங்கள் பார்த்தீர்களோ, இல்லையோ ! ஒரு நெசவாளி நூல் கிடைக்காத கஷ்டத்தால் பல நாள் பட்டினி இருந்தான். அவன் மனைவி தனது இரண்டு குழந்தைகள் பசியால் வாடி வதங்குவது காண சகியாமல் கணவன் வெளிச் சென்றிருந்தபோது, தூக்கிலே தொங்க ஆரம்பித்து விட்டாள். வீட்டுக்குத் திரும்பி வந்த கணவன் இக் கோரக் காட்சியைக் கண்டு மனம் வெதும்பி, மக்கள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் தூக்குக் கயிற்றில் தொங்க ஆரம்பித்தான். தூக்கில் தொங்கும் பாட்டாளியின் சரீரம் படபடவென அடித்துக் கொண்ட சப்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத் தார் ஓடி வந்து அவனைக் காப்பாற்றினர். என்ன