உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 திறந்த வெளிக்கு சுற்றுப்புறமும் அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்தன. மைதானத்தில் நடக்கும் விழாவைக் காண அவைகள் மறைத்துக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி, ஒரு சிறு கொடியை நட்டார்களாம். எத்தகைய மேதாவித் தன்மை! என்ன இவர்கள் மூளை! இருப்பதை ஒழித்து விட்டு மரம் நடும் மடத்தனம் நிறைந்த மகான் கள்தான் மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்து ஓட்டுக் கேட்கிறார்கள். இந்த மாடுகளைச் சட்ட சபைக்கு அனுப்பினால் அது சட்ட சபையாகவா இருக்கும். மாட்டுப் பட்டியாக அல்லவா இருக்கும் ! நான் தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசனைப் பற்றி பலர் பேசி னார்கள். அவர் செய்த சேவையின் பட்டியலும் உங்களுக்குப் படித்துக் காட்டப்பட்டது. அவரது சேவையைக் கூறி உங்கள் ஓட்டுக்களைப் போடும்படிக் கேட்கப் போவதில்லை. அவர் வெற்றி பெறுவது காங்கிரசைத் தோற்கடிப்பதில் இருக்கிறது. காங்கிரஸ் மந்திரிகளைப் பற்றி நாம் கூறுவதைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள். அவர்களைத் தினமும் துதி பாடும் தேசீய ஏடு கூறுகிறது சோம்பேறி மந்திரிகள், சொரணை கெட்ட எம்.எல்.ஏ.க்கள் என்று! இப்படிப்பட்டவர்கள் சட்ட சபையிலிருந்து பொது மக்களுக்காக என்ன பணியாற்ற முடியும்! ஆகவே தான் அவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நமது ஆல்பர்ட் ஜேசுதாசன் அவர்கள் இருப்பதே நல்ல தென்று நமது கழகம் நினைத்தது. நமது கழகம் சர்வாதிகாரப் போக்குடையது அல்ல.நூற்று நாற்பது பேர்களைக் கொண்ட ஒரு