உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ நம்ம மந்திரிகள்! ‘நம்ம சர்க்காரில்' மந்திரிகளின் ‘குட்'டை வெளிப்படுத்திவிட்டால் வெளி நாட்டான் நம்மைப் பற்றி நகைக்க மாட்டானா? நம்ம மந்திரிகளின் யோக்கியதைகளை அம்பலப் படுத்துவோரைப் பார்த்து "நமது சர்க்கார் அனுதாபி கள் " கூறும் சமாதான வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும் இப்படியே நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டு ஆட்சிபீட மகான்கள் செய்யும் காரிய மனைத்தும் மகோன்னதச் செயல் என்றே கூறிக்கொண்டு இருந்ததின் விளைவே, இந்த நாடு வறுமையால் அவதிப் பட நேரிட்டுவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆட்சி பீடத்திலமர்ந்தோர் செய்யும் தகாத செயல்களையும் கண்டிக்க இந்த நாட்டில் எதிர்க்கட்சி இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டது. அதனாலேயே எதேச்சாதி காரம் தலைதூக்கி நிற்க ஆரம்பித்து விட்டது. 2