உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 அமைச்சரின் ஆலோலம் பொதுவாக ராஜ்யத்தில் தற்போது குற்றங்கள் ஓரளவு அதிகரித்துள்ளன ” சொல்வது நாமல்ல. சென்னை முதன் மந்திரியாரே பத்திரிகை நிருபர்கள் மாநாட்டில் கூறியிருக்கிறார். கள்ள மார்க்கெட், பதுக்கல், திருட்டுச் சாராயம் காய்ச் சல், தெருவிலே அடிபிடிச் சண்டை, கொலை, களவு, இன்னோரன்ன குற்றங்கள் நாட்டிலே மலிந்து கிடக்கின்றன கவனிக்க நாதியற்று. சென்னை மந்திரிகள் தங்கள் தவறுகளை எப்போ துமே தாமதமாகத்தான் உணருகிறார்கள். அப்படி தாமதித்து வந்த உண்மையைத்தான் பிரதமர் வெளி யிட்டிருக்கிறார். போலீஸ் படைக்காக சென்னை செலவிடும் தொகை வெள்ளையர் காலத்தைவிட பல மடங்கு அதிகம். புதிய புதிய போலீஸ் ஸ்டேஷன்கள் வேறு திறக்கிறார்கள்.