உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொந்தளிக்கும் கடல் நாட்டிலே குமுறிக் கொண்டிருந்த தேர்தல் புயல் அனேகமாக ஓய்ந்து விட்டது. புது நிலைக்கான முயற்சி கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கின்றன. ஐந்தாண்டு காலம் அடக்குமுறை பாசீச ஆட்சி நடத்தி வந்தவர்கள் பொது மக்களின் தீர்ப்பைப் பரிசாகப் பெற்று தலை தாழ்ந்திருக்கிறார்கள் ! திராவிட முன்னேற்றக் கழகத்தார் துணிவிருந்தால் தேர்தலில் நின்று பார்க்கட்டுமே என்று தோள் தட்டி னார் காமராசர். நேரடியாகத் தேர் தலில் கலந்து கொள் ளாமலேயே, குறுகிய காலத்தில் ஆதரவை மட்டும் அளித்து, காங்கிரசை முறியடித்து வெற்றிக்கொடி பிடிக்கும் வகையில் ஐம்பது தோழர்களை திராவிட முன்னேற்றக் கழகம் உலவ விட்டிருப்பது கண்டு "தோற்றேன், தோற்றேன்" என்று முகாரி பாடுகிறார் இப்போது! சிறையிலே கொலைச் சிந்தும், வீதியிலே பிணமும், வேடிக்கை விருத்தங்களாக ஆகிவிட்டகாங்கிரஸ் கொலு மண்டபத்திலே இடி விழுந்துவிட்டது. அதுவும் பேரிடி!