பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எட்டாம் சாஸனம்

105

8. அசோகன் பொழுதுபோக்கு.

முற்காலங்களில் அரசர்1 வேடிக்கையாக யாத்திரைகள் போவதுண்டு. வேட்டையாடுதல் முதலிய பொழுதுபோக்குகள் இயல்பாயிருந்தன ஆனால் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் தான் முடிசூடிப் பத்து வருடங்களானபின் ஸம்போதியைப்2 பின்பற்றினான். அதனால், தர்மீயமான யாத்திரைகள் ஏற்பட்டன. இவற்றையொட்டி பிராமணரையும் சமணரையும் தரிசனம் செய்வதும் வெகுமதிகள்3 செய்வதும் பொற்காசுடன் ஞானச்சிரேஷ்டர்களைத் தரிசனம் செய்வதும் நாடுகளில் உள்ள குடி ஜனங்களைப் பார்ப்பதும் தர்மத்தை உபதேசம் செய்வதும் தர்மவிவாதம் செய்வதும் நடைபெற்று வருகின்றன. அதனால் தேவர்களுக்குப் பிரியனான பியதஸிக்கு சுகபோகங்களிற் கிடைக்கும் பங்கு முன்போன்றல்லாது இவ்விதமே ஆகும்.

6 வாக்கியங்கள்.

1.அசோகனுக்கு முன் ஆண்டுவந்தஅரசர்களைத் தேவானாம் ப்ரிய அல்லது தேவர் பிரியர் என்னும் பதத்தால் வட இந்தியப் பிரதிகளில் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

2, ஸம்ஸோயி.-பௌத்தமதக் கிரந்தங்களில் எட்டுப் படிக ளுடைய ஞான மார்க்கத்தை வழிபடுகிறவனுக்கு ‘ஸம்போய பராயணன் ' என்று பெயர் வழங்குகின்றது. ஸம்போதி என்றால் பூர்ண ஞானத்தை அடைந்த நிலைமை. இச்சொல் கயையில் உள்ள போதி விருட்சத்தைக் குறிக்கிறதென்று ஸ்ரீமான் பந்தர்கர் அபிப்பிராயப்படுகிறார். இது பொருத்தமென்று தோன்றவில்லை.