பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் ஸ்தம்ப சாஸனம்

139

6. சுய மதத்தில் நம்பிக்கை .

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் கூறுகின்றான். நான் முடிசூடி பன்னிரண்டு வருடங்களானபின் உலகம் யாவும் நன்மையையும் சுகத்தையும் அடையும் பொருட்டு இந்தத் தர்ம லிகிதங்களை1 வரையச் செய்தேன். அவரவர் தம் தம் பண்டைய வழிகளைக் களைந்து தம்தம் தர்மத்தை வழிபட்டு அபிவிர்த்தியடைவாராக. உலகத்திலுள்ள மனிதவர்க்கம் யாவும் நன்மையையும் சுகத்தையும் அடையும் பொருட்டு நான் முயன்றுவருகிறேன்; எனது சுற்றத்தாரை மட்டுமல்ல, தூரத்திலுள்ளவர்களையும் சமீபத்தில் வசிப்பவர்களையும் கவனித்து வருகிறேன். ஏனென்றால், சில மனிதருடைய க்ஷேமத்தையாவது நான் காப்பாற்றியவனாக நேரலாமன்றோ. இவ்வுத்தேசத்துடன் நான் எல்லாக் கூட்டத்தாருக்காகவும் வேலை செய்து வருகிறேன். எல்லா சமயங்களும் பலவிதப் பூஜை மரியாதைகளோடுகூடிய எனது பணிவிடையைப் பெறுகின்றன. ஆனபோதிலும், யாவருக்கும் சுயமத நம்பிக்கையே முக்கியமென்பது எனது எண்ணம். நான் முடிசூடி இருபத்தாறு வருடங்களுக்குப்பின் இந்தத் தர்மலிகிதம் எழுதப்பட்டது.

10 வாக்கியங்கள்.

1. தர்மலிகிதங்கள் என்பதால் பதினான்கு சாஸனங்கள், உபசாஸனங்கள் கலிங்க சாஸனங்கள் யாவும் குறிப்பிடப்படுகின்றனபோலும். இவை அரசனது பதின் மூன்றாம் பட்டாபிஷேக வருஷத்தில் பிரசுரஞ் செய்யப்பட்டனவென்று இந்த லிகிதத்தினின்று ஏற்படுகிறது.