பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுந்ததும், கீழே பிணம்போல விழுந்துவிட்டா அடியிலே இருந்து தப்பிக்கலாம். மூச்சுபேச்சே இல்லாமே கிடப்பேன் கால் மணி நேரம்கூட. அதெல்லாம் சாதகத்தாலே வர்றது. போய்விட்டேன். பயந்தே சே: நான் துப்பாக்கி வெடிச்சுது, நீ கீழே விழுந்தே,என்பாடு அடிவயத்தையே கலக்கிவிட்டுது. துப்பாக்கியைக் கைப்பற்றிக்கொண்ட பிறகு, உன்னைப் பார்க்கிறேன், நீ,கண் அடிக்கறே. அப்புறம் தான், எனக்குத் தைரியம் வந்தது, யோசனையும் பிறந்தது. சரியான வேலை செய்தே போ! இனி அந்தப் பய வாலாட்ட மாட்டான். ஆனா என்னைத்தான் கொன்று போட்டே. சே: ஆமாம்! ரோந்து வருகிற ரத்னம் செத்துவிட்டான். இனிமே, சுசீலாவின் அண்ணன் வாழப்போகிறான். ஆமாம்! ரத்னம் ! துப்பாக்கி வெடிச்சுதே, எப்படியப்பா? கொல்ல ர: வெடிக்கும், சாகடிக்காது. சும்மா விளையாட்டுத் துப்பாக்கிதானே. ஆளை மிரட்டத்தானே அது. வேணும்னா, துப்பாக்கி வேணுமா? இரட்டைத் துப்பாக்கி இல்லை இதோ (இரு கரங்களையும் காட்டுகிறான். சேகர், அவன் முதுகில் தட்டிக்கொடுக்கிறான். இருவரும் போகின்றனர்.) காட்சி 48 இடம் :- தேவர் வீடு. இருப்போர் :- தேவர். [தேவர் சோகமாக உட்கார்ந்திருக்கிறார். சேகர் உள்ளே நுழைந்து.) சே: ஒழிந்தது, உம்மை வாட்டி வதைத்த சனியன். சாபம் இல்லை!இதோ படம்! [போட்டோவைப் பெற்றுக்கொண்டு.] தே: ஆஹா! கிடைத்துவிட்டதா? என்னைக் கெடுக்க இருந்த படம் கிடைத்துவிட்டது. என் வாழ்விலே இருந்த பயம் ஒழிந்தது. சேகர் எப்படிக் கிடைத்தது? சே: இதோ, ரத்னம் எல்லாம் சொல்வான்... தே: (கோபத்துடன்) இந்தப் பயல்தானே சுசீலாவுடன் .......

101

101