பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கிறேன். நான் சில பிடிவாதக்காரிகளைப் பார்த்திருக்கிறேன், சுசீலா ஒன்றும் பிரமாதமல்ல. [தேவர் தம் காதுகளைப் பொத்திக்கொண்டு.] தே: வேண்டாம் ஜெகவீரரே! உமது வீரப்பிரதாபத்தை விவரிக்க வேண்டாம். என் கோபத்தையும் நீர் கிளறவேண்டாம். நான் இவ்வளவு பொறுமையாக எப்போதும் இருந்ததில்லை... காட்சி 10 படம் :-மாரி குடிசை. இருப்போர்:-மாரி, புருஷன் மன்னார். [மன்னார் குடித்துவிட்டு ஆனந்தமாகத் தெம்மாங்கு பாடுகிறான், பானையைத் தட்டிக்கொண்டு. சுசீலாவை அழைத்து வரக் கிளம்பிய மாரி, புருஷன் வந்து விட்டானா என்று பார்க்க, தன் வீடு வருகிறாள். அங்கு பாடிக் கிடக்கும் புருஷனைக் கண்டு...] EDIT: பாட்டும் கூத்தும் பலமாகத்தான் இருக்குது. மன்: மாரி! மானத்திலே சந்திரன் பாருடி. எவ்வளவு அழகா இருக்கிறான். நிலாக் காலம்னாலே ஒரு ஜோருதான். நீ கிடக்கறயே சுடுமூஞ்சி. இப்படி உட்கார்ந்து கேளடி பாட்டை, பக்கத்திலே வந்து உட்காரேன். (கையைப் பிடித்திழுக்க). மா: தா ! வாலிபம் திரும்பிப் போச்சோ...போவுது... எனக்கு இப்ப விளையாட நேரமில்லை...நான் போயி சுசீலாம்மாவை அவசரமா அழைச்சிகிட்டு வரணும். அப்பாலே வந்து... மன்: சனியன்; சந்தோஷமா இருக்கணும்னா என்னென். னமோ சாக்குச் சொல்லி வாயை அடைச்சிவிடறே. இந்த நிலாக் காலத்திலே ஊர்லே உலகத்திலே அவங்க அவங்க எவ்வளவு சந்தோஷமா இருக்கறாங்க... LD IT : இருக்கறவங்க இருக்கறாங்க. நம்மாட்டம் ஏழைக ளெல்லாம் என்னாச் செய்யறது.

.15

15