3
கையிலேயும், குறிப்பிடத் தக்க வளம் உண்டாகவில்லை. வறுமை கொட்டலாயிற்று. வாட்டம் அதிகரித்தது. அதே போது, தொழில் முறை மாறி, பண்ட உற்பத்தி அதிகரித்து, செல்வம் கொழித்ததால், வாழ்க்கை வசதிகள் அதிகமாகி, நாகரிகம் மேலோங்கி விட்டது. நாகரிகத்தின் முழுப் பயனை ஒரு சிலர் அடைய, அந்த நாகரிகத்தின் அடிப்படைக்கு அரணாக அமைந்திருந்த பெரும்பாலானவர்கள், அந்த நாகரிகத்தின் பயனை அனுபவிக்காமலிருந்தபோது, அவர்கள் மனதிலே, ஓர் அதிர்ச்சி, ஓர் குமுறல், ஏற்பட்டது, தங்கள் நிலை மோசமாகிற நேரத்திலே, தங்கள் உழைப்பின் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கை வசதிகளில் துளியும் தங்களுக்குக் கிடைக்காதது, அவர்கள் மனதிலே, ஓர் அணைக்க முடியாத தீயை உண்டாக்கிற்று. சேகரித்த தேனை இழந்துவிடும் வண்டுகளாகத் தமது வாழ்க்கை இருப்பதை அறிந்தனர். மனம் நொந்தனர். குறைகளைப்பற்றி ஒருவருக்கொருவர் பேசினர். ஒவ்வோர் நாளும் பேசினர். கூடிக் கூடிப் பேசினர்.
- “என்னதான் இதற்குப் பரிகாரம்?
- பொறுத்திருந்து பார்ப்போம்.
- அவர் மனம் இளகாமலா போகும்?
- ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டும்;
- அவர் நம்மைக் கைவிடமாட்டார்.
என்று துவக்கப்பட்ட உரையாடல், கொஞ்ச காலத்தில்
- எத்தனை முறை கேட்பது?
- எவ்வளவு கெஞ்சிக் கெஞ்சிக் கேட்பது?
- ஏழைக்கு இரங்காதவனும் ஒரு மனிதனா?
- அவன் மனம், கல்லா? இரும்பா?
- கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கிறதா?
என்று மாறி,
- இப்போது முடியாதாம்!
- இலாபம் இல்லையாம், முன்போல்.
என்ற பேச்சு மறுபடியும் மாறி,
- நமது உழைப்பினால் கொழுத்தான்;
- இலாபம் மலைபோலக் குவிந்திருக்கிறது;
- நாம் வாடுகிறோம் வறுமையால்; அவன்
- அரச போகத்தில் இருக்கிறான்;
- நமது உழைப்புத் தரும் இலாபத்தால்தானே