பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தி மகாத்மாவும் இருந்தார்!

இருவரும் இங்கே நிரந்தரமான பிரதம விருந்தினர் களாக்கும்: -

ரஞ்சித் வியாபார ரீதியிலே, லட்சக்கணக்கில் புழங்குபவர்: அன்பு முறையிலே கோடிக்கணக்கில் புழங்குவார். அப்படிப்பட்ட புள்ளி இப்போது தனிமையில், தன்னந்தனிமையில் அழுதார்; அழுதார்: அழுதுகொண்டேயிருந்தார்:-ரஞ். . கண்ணே ரஞ்சனி அன்பே ரஞ்சனி! ஆருயிரே ரஞ்சனி! இனி தான் என்ன செய்வேன்?-பாவம் நீ என்ன செய்யப் போறே, ரஞ்? -அந்தரங்கமான மேஜை டிராயர்ச் சாவி கையில் விதியாகச் சிரிக்கவே, அவர் திடுக்கிட்டார்! விதியாவது, வினேயாவது, மண்ணாங்கட்டியாவது:- “எங்க வி. ஐ. டி. பாபு, மேஜையிலே நான் விட்டுட்டு வந்த சாவியை உபயோகப்படுத்தி, என்னோட அந்த ஊதா டயரியைப் புரட்டித் தன்னோட கதைகாரணத் தைப் பத்து வருஷம் கழிச்சு இன்னேக்காகிலும் தெரிஞ்சக் கிடுவானு: தான் மனப்பூர்வமப் நம்பினேன்; அவன் அதிசயமான பிறப்பு இல்லையா?- என் சாவிக்கொத்தைத் தொடவே கிடையாது. அவன் மானஸ்தன், ரோஷக்காரன் சின்னப்பிள்ளையா அவன்?-இல்லே இல்லவே இல்லை:பழனிமலை ஆண்டி. மட்டும் பெரிய பிள்ளையா, என்ன?... ஆளு, பாவுக்கு பரசுராமரோட அவதாரம்தான் பிடிக்கு மாமே?...ஈஸ்வரா இன்றையப் பொழுது எப்படி விடியப் போகுதோ, தெரியலேயே?... பாபுவின் நினவுகளில் மகேஷ் ஒன்றிக் கலக்காமல் இருக்க முடியுமா?- முடியாது: முடியவே முடியாதுதான்!...மகேஷ் இந்நேரம் ரதியின் துணை இல்லாமலே, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பார்: பாவம் சுயப் பிரக்ஞை சிலிர்த்தெழுந்தது. ரஞ்சனியை இன்னமும் காளுேம்!- ‘ரஞ்.ரஞ் சத்தம் கொடுக்காமலே, சத்தம் போட்டு அழைத்தார் பாங்கர் ரஞ்சித்.

196