பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“அத்தான், என்னோட அன்புத் தெய்வமே! என்னோட அன்பான கர்த்தரே!”—ரஞ்சனி விம்மினாள்; விம்மினாள்; விம்மிக்கொண்டேயிருந்தாள்!...

“அ....ப்...பா!... எங்களோட கண்கண்ட தெய்வமே!...” —விம்மி வெடித்தவனாக, திருவாளர் ரஞ்சித் அவர்களின் அன்புக் கழலடியில் தஞ்சம் அடைகிறான் மணிப்பயல் பாபு!

அதோ, பார்க்கிறீர்களா?

ஊதாப்பூ வானத்திலே, அன்பின் ஆதரிச வடிவமாகத் தரிசனம் தந்த அந்தி நிலா, இப்போது பூரணமான அன்பின் நிதர்சனமான வடிவெடுத்துப் புதிதானதும் புனிதமானது மான ஒரு சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்குகின்றது!...

வாழிய செந்தமிழ்!

⚫⚫⚫

204