பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

17


இங்கே சர்க்கஸிலே வந்து அகப்பட்டுக்கிட்டிருக்கீங்க போலிருக்கிறது”.

“தம்பி!”

“முதலிலே என்னைப் பெயரிட்டு அழையுங்க!”

“சூடாகப் பேசுகிறாயே?”

“இளரத்தம் சார், இளரத்தம்!”


“பேஷ், நானே சொல்லலாமென்றிருந்தேன். நான் ஒரு அருமையான சிறுத்தை வளர்க்கிறேன். அதற்குக் கூட உன் போன்ற பையன்களின் இளம் ரத்தம்தான் தேவையாம். உன்னை அன்றைக்கு நான் காரில் போட்டு என் வீட்டுக்குக் கொண்டு வந்தேன் பார். அன்றிலிருந்தே அது சொல்லிக்கொண்டேயிருக்கிறது. இன்றுதான் என்னால் நிறைவேற்ற முடியப் போகிறது!”

“சந்தோஷம், அப்படியே செய்யுங்கள். நான் கூட முந்தி ஸ்கூலிலே பேசியிருக்கேனாக்கும், வாயில்லா ஜந்துக்களிடம் அன்புகாட்ட வேணுமின்னு. இப்போ நீங்க உங்களுடைய சிறுத்தையிடம் அன்பு காட்டுகிறது. இதுதான் முதல் தடவையோ? பரிதாபம் சிறுத்தை வாடி மெலிஞ்சிருக்குமே..? ம், ஜல்தி...எங்கே அந்தச் சிறுத்தை? கொண்டு வாரும் இப்படி நான் அதனிடம் கேட்கிறேன். என்னுடைய ரத்தம்தான் அதற்குத் தேவையா என்று?” – இடி முழக்கம் செய்தான் பூபாலன். முகத்திரையில் ரத்த வர்ணம் வழிந்தது.

சர்க்கஸ் உரிமையாளர் ககுமார் பேய்ச் சிரிப்புச் சிரித்தார். அடுத்த நிமிஷம், அங்கிருந்த பொத்தானை மெல்ல அழுத்தினார்.

அவ்வளவுதான் – பயங்கரமான உறுமல் முழங்க, அச்சம் தரும் பற்கள் ஒளியில் மின்ன, பெரிய சிறுத்தையொன்று தோன்றியது.