446 அனைத்துலக மனிதனை நோக்கி -
1. பிரிட்டனுக்கு.....இருந்தது-1878 செப்டம்பரில் தாகூர் முதன் முறையாக இங்கிலாந்து சென்றார். லண்டன், பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 18 மாதங்கட்குப் பிறகு மீண்டுவிட்டார். அவருடைய - " என்னுடைய நினைவுகள் ' (மாக்மில்லன், 1917) என்ற நூலைப் பார்க்க வும்.
2. என்னுடைய கண்களால்-ஜப்பானுக்குத் தாகூர் 1916; 1924 ; 1929 ஆகிய ஆண்டுகளில் மும்முறை சென்றார். முதன் முறை அவருடைய அனுபவங்களை ' ஜப்பான் யாத்திரை’ (நாட்குறிப்பு) என்ற நூல் வடிவில் 1919-இல் வெளியிட்டார்.
3. மாஸ்கோ -1930-இல் (செப்டம்பர் 11 - 25 வரை) இரு வார காலம் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்தார். மாஸ்கோவில் அவருடைய அனுபவம் பற்றி எழுதிய கடிதங்களைத் தொகுத்து ' ரஷ்யாவிலிருந்து கடிதங்கள் ' என்று 1931-இல் வெளியிட்டார்கள். 4. ஈரான்--ரெசா ஷா பஹ்ல்வியின் அழைப்பின் பேரில் 1932-இல் தாகூர் ஈரான் சென்று வந்தார்.