பக்கம்:அன்னிபெசண்ட் அம்மையாரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அன்னி பெசண்ட் அம்மையாரின்


சொல் தவறாதவர்; புகழை விரும்பாதவர்; பெருந்தன்மை மிகுந்தவர்; ஒழுக்கம் ஓம்பும்; சீலர்! குழந்தைகளுடன் குழந்தையாக மாறிவிடும் குழந்தை மனம் கொண்ட குணாளர்:

தினசரி கடமைகளை எதத நெருக்கடிகள் வந்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு கடமைகளைச் செய்பவர்!

ஊன் உடலே கோயில் உள்ளமே இறைவன் என்ற திருமூலர் என்னப்படி உடலைப் பேணுவதிலே வல்வராகவே வாழ்தார்

அன்னி உலகம் போற்றும் நாவலர்! சிறந்த சிந்தனையாளர்! ஏற்றமிக்க எழுத்தாளர்! உணர்ச்சிகளின் உந்தகம்! புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர்; அஞ்சாமை அனைவரும் பெற வேண்டும் என்ற அரிமா நோக்காளர்!

தமிழ்நாடு என்ற பொய்கையிலே வண்ணக் கோலத்துடன் வன்ன முகம் காட்டி காட்சியளித்த அன்னி பெசண்ட் என்ற ஞானத்தாமரை, வானிலே பூத்தது! வாழ்க அன்னி பெசண்ட் பிராட்டியின் மக்கள் தொண்டு!