பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 இந்தக் காலத்துப் பெண்கள் தங்கள் கணவன் மாரிடம் புலிவேட்டையாடும் அளவுக்கு உள்ள வீரத் தை எதிர் பார்க்கவில்லை. எந்தக் கணவனும் '400' என்றவுடனே கிலி கொண்டிடும் நிலையில்தானே இருக் கிறார்கள். பெண்கள் இன்று தங்கள் கணவன்மார்களின் கட்டற்ற வீரத்தை மட்டுமே பெரிதாகக் கருதவில்லை. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் கணவன் அழ கரசு இருக்கவேண்டும் அதோடு அன்புடையவனாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல குணவானாக பண் புள்ளம் படைத்தவனாக இருக்க வேண்டும். வெளியில் செல்லும்போது தங்களையும் அழைத்துச் செல்லவேண் டும். நல்ல நாகரீகமுடையவனாக விளங்க வேண்டும். குடும்பத்தில் அக்கறையுடையவனாகத் திகழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள் எதிர்ப்பவர்களைத் தாக்கித் தகர்த்திடும் கட்டான உட லும், உள்ள உரமும், உருட்டு விழியும் உள்ளவனாக ஊரார் கண்டு நடுங்கிடும் மனிதனாகத் தங்கள் கணவன்மார் இருக்கவேண்டும் என்பதைப் பெண்கள் விரும்பிய காலம் போய்விட்டது. எனவே தாலி கட்டுவதிலும் நாம் செய்யும் அர்த்தமுள் ளதா? அறிவிக்குப் பொருத்தமானது தானா எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். அய்யரை அழைத்து மந்திரம் என்பதை ஓதாமல்,அம்மி மிதித்து அருந்ததி காட்டுவது போன்ற சடங்குகளைச் செய் யாமல் நடைபெற்று வரும் திருமணங்கள் சட்டப்படி செல் லாது என்று மக்களிடையே ஒரு பயம் முன்பெல்லாம் நிலவி வந்தது. சந்தேகம் உதித்து வந்தது.