பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

அன்பு வெள்ளம்


உங்கள் உயிர்ப்பாற்றலைச் சரியான வழியில் நடக்கவிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் அன்பினை ஆட்சிபுரிய விடுங்கள் அஃது உங்கள் வாழ்க்கையினை மேம்படச் செய்யும் உலகுக்கு உங்களை ஒர் ஒப்பற்ற அருட் கொடையாக்கும்.

ஒன்றுக்கும் உதவாது போன வாழ்க்கையினைக் கொண்டவர்களே! தாங்கொணாத் துன்பங்களின் உணர்வலைகளோடு துடிக்கும் நொறுங்கிய உங்கள் உள்ளங்களை அறைகூவல்விட்டு அழைக்கிறது அன்பு!

அந்த அறைகூவலை ஏற்றுப் புதிதான் அன்பினால் நம் வாழ்க்கை அன்பு வாழ்க்கையாக, புதிய படைப்பாக ஏற்றம் பெற்று வாழ்ந்திட முனைகின்றோம்.

மாந்தர் எல்லாம் துன்பங்களில் உழன்று வரும் நெருக்கடியான இந் நேரத்தில், அன்பின் நற்செய்தியை நாம் பெற்றுள்ளோம் என்று நம்புவோம்.

★ ★ ★
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/116&oldid=1516673" இலிருந்து மீள்விக்கப்பட்டது