பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

அன்பொடு புணர்ந்த ஐந்தினை - குறிஞ்சி

அணியை அணிந்தவளே! நீ போ!’ என்று கூறி அனுப்பினான் இதனால் நம்மீது அவன் ஒரு நோட்டம் உடையவனா யிருந்தான். அதனால் அவன் மார்பின் மீது மெய்ம் மறந்தவளைப் போல் நான் கிடந்தேன் என்று தலைவன் மீது கொண்ட காதலைத் தலைவி தோழியிடம் சொன்னாள்

460. முறையாய் மணங்கொள்ள வருவான்

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ-இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுந்து, அம் மலை
எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பப் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட கேள்:

ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமேம போல், கவின் பெறும், அக் கவின்
திராமல் காப்பது ஒர் திறன் உண்டேல் உரைத்ததைக்காண்.

இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்
பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அவ்அணி
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும், அத் திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஒர் பொருள் உண்டேல்,
உரைத்ததைக்காண்.
என ஆங்கு
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி, நல் மலை நாட
வேங்கை விரிவு இடம் நோக்கி,
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே.
- கலி 38