பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



குறுந்தொகை

  • * * * * * - - - -e o ‘o - - - - - e. SMAAASA SAASAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

101. ஆடிப்பாவைபோல அவன்

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம், பழன வாளை கதுTஉம் ஊரன் எம் இல் பெருமொழி கூறி, தம் இல், கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.

- ஆலங்குடி வங்கனார் குறு 8 வயலுக்கு அருகிலுள்ள மாமரத்தினது கனிந்து வீழ் கின்ற இனிய பழத்தை, பொய்கையிலுள்ள வாளை மீன்கள் கவ்வி, உண்ணுதற்கிடமாகிய ஊரை உடைய தலைவன், எம்முடைய வீட்டில் எம்மை வயமாக்குவதற்குரிய பெரு மொழிகளைக் கூறிச் சென்று பின் தம்முடைய வீட்டில் முன்னின்றார். தம் கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகின்ற ப்ாவையைப் போலத் தன் மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்கின்றான்.

102. தண்ணிர் துறைவன் கொடுமை யாய் ஆகியளே மாஅயோளே - மடை மாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின்.மெய் சாயினளே, பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இன மீன் இருங் கழி ஒதம் மல்குதொறும்