இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அபிதா O 119
அபிதா, மலைமேல் திருவேலநாதர் சன்னதி நோக்கி ஏறும் படிக்கட்டின்- ஒன்று, இரண்டு, மூன்றாவது படிமேல் உதிர்ந்து மலர்ந்தாள்.
தன்மேல் புழுதியைத் தட்டிக் கொண்டு அம்பி என் பக்கத்தில் வந்து நின்றான். அவனுக்கு ஒரு சிராய்ப்புக் கூட இல்லை. மயிர்தான் கலைந்திருந்தது.
எனக்கு மார்வலி நின்றுவிட்டது.
அபிதா எழுந்திருக்கவில்லை. இப்போக்கூட அவளைத் தொட ஏன் தோன்றவில்லை? அவள் முகத்தின் புன்னகை கூட மாறவில்லை.
மரத்திலிருந்து பொன்னரளி ஒன்று நேரே அவள் மார்மேல் உதிர்ந்தது.
சற்று எட்ட மோட்டார் சைகிள் பற்றி எரிந்து கொண்டிருந்தது.