பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அபிராமி அந்தாதி

தொழில்களையும் புரியும் மும்மூர்த்திதளாகவும் தேவி விளங்குகிறாள். அதனால் அவளுக்கு. த்ரிமூர்த்தி என்னும் ஒரு திருநாமம் உண்டாயிற்று.

இவ்வாறு மூன்று தொழிலையும் செய்யும் அம்பிகை இல சமயங்களில் சிவபிரானைவிடப் பெரியவளாக இருப்பாள். சக்தி தத்துவத்துக்குப்பின் சதாசிவ தத்துவம் தோன்றும்; ஆதலின் சதாசிவத்துக்குச் சக்தி மூத்தவளாகி நாள். இதை நினைத்து.

கறைக்கண்டனுக்கு முத்தவளே! என்கிறார். ரீகண்டனாகிய சதாசிவனுக்கு அவள் மூத்த வளாம். தத்துவங்களின் தோற்ற முறையை எண்ணி' இப்படி ஒரு விசித்திரமான உறவு முறையைச் சொல்வது. பக்தர்களுக்கு இயல்பு, இதே முறையைக் கொண்டு. அம்பிகையைச் சிவனுக்கு அன்னையென்றும் கூறுவதுண்டு. :தவளே இவள் எங்கள் சங்கரனார்மனை மங்கலமாம், அவளே அவர்தமக் கன்னையு மாயினள்' (44) என்று இவ்வாசிரியர் பின்னால் பாடுகிறார்.

அம்பிகை திருமாலின் சகோதரி என்று புராணங்கள் கூறும் திருமால் என்றும் தளராத திருக்கோலம் உடையவர் அவர் மூவா முகுந்தர். அத்தகையவருக்கு இளையவள் என்றாள் அவளுக்கும் மூப்பு இல்லை என்று தெளிவாகிற தல்லவா? கிழத்தன்மையைப் போக்கும் அருளுடையவள் அவள். அதனால் ஜராத்வாந்தர விப்ரபா என்ற திருநாமம். அவளுக்கு வழங்குகிறது. தன்னை அண்டுபவர்களுக்கே நரை திரை மூப்பு வராமல் பாதுகாப்பவளாயின், அவளுக்கு அவை ஏது?

மூவா முகுந்தற்கு இளையவளே!

எம்பெருமாட்டி சில சமயங்களில் தவக்கோலம் கொண்டிருப்பாள். பார்வதியாக அவதரித்தபோது: