உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வளரும் தமிழ்

[105

துறவறம் இல்லறத்துக்கு மாறானதன்று. இல்லறந் துறந்த அறமும் அன்று. தன்னலம் துறந்த துறவறமேயாகும். தம் இல்லத்தின் கடமை முற்றுற்றபின் உலகுக்கு உழைக்க வந்தவர்தாம் துறவோர். தம் இல்வாழ்வில் நின்றே உலகு பேணலை மேற்கொண்டவர் அந்தணர். பிற்காலத்தில் கோவில் வழிபாடு முதலிய பொதுக்கடனாற்றும் ஊழியன் பார்ப்பான் எனப்பட்டான். குருக்கள், இவர்கள் பிறப்பால் தமிழராகிய வேளாளராதலாலும், கொலை வேள்வி செய்யாதவராதலாலும் வேளாப் பார்ப்பனர் என்றும் வழங்கப்பட்டனர். இன்றும் இவர்களுடன் பிராமணர் உண்ணுவதும் மணஉறவு கொள்வதும் இல்லை. அவர்கள் மந்திரங்களும் பிராமணர் மந்திரங்கள் அல்ல. வேளாளர் தீக்கை பெறும்போது ஓதும் மந்திரங்களே. குருக்கள் பெயராகிய பார்ப்பான் என்ற சொல்லே தவறுதலாய்ப் பிற்காலத்தில் பிராமணனுக்கு வழங்கிற்று. அச்சொல் குறித்த தமிழர் மதிப்புப் பிராமணர்க்குப் போயிற்று, தமிழர் குடியைக் குறித்த அச்சொல்லைப் பிராமணர் விரும்பாது ஏளனம் செய்ததால் அது குருக்களை இழிவுபடுத்தும் சொல்லாய் அது மாறிற்று.

5.இரப்பது இழிவு. ஈகை சிறந்தது.

குறிப்பு: இவ்விரண்டும் ஒன்றுடன் ஒன்று பொருந்தா நீதிகள். திருக்குறள் முதலிய நூல்களில் இரண்டு நீதிகளும் தரப்படுகின்றன. ஆனால், எவரும் இரத்தல் கூடாது, இரத்தல் இறைவன் படைப்பிலேயே இருத்தல் தகாது என்று வள்ளுவர் பெருமான் கூறுவதனால் ஈகை இடமறிந்து உதவுதல் என்ற பொருளே தரும். அதாவது பொருளீட்ட முடியாதவன், முயன்றும் பெறாதவன், இடுக்க ணுற்றவன், பிறர்க்கென உழைத்துத் தன்னைப் பேணாதவன், பொது நலம் பேணி ஆளும் அரசன் ஆகியவர்க்கு ஈதலையே தமிழர் ஈகை என்று கொண் டிருத்தல் வேண்டும். சோம்பர், இரத்தலைத் தொழிலாகக் கொண்டவர். இறைவன் பேர் சொல்லிப் பிழைக்கும் எத்தர், இரத்தல் உயர்வெனக் கொள்பவர், மக்களிடையே வேற்றுமை விளைவிப்பவர் ஆகியவர்கட்குக் கொடுத்த, கொடுத்து வரும் தவற்றினாலேயே தமிழர் நலிந்தனர், நலிகின்றனர்.