உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 135

இலக்கியமும் இதற்கு உறுதுணையாகும். கீழ்நாடுகளின் மற்ற இலக்கியங்கள் - இடைக்காலத் தமிழ் இலக்கியம் உட்பட இவற்றின் பேருதவியால் புதுப்பிக்கப்படத் தக்கவையேயாகும்.

கதிரவன் மேற்கு நோக்கிச் செல்கிறான், சாய்கிறான். அவன் கிழக்கே திரும்பவும் எழுவது திண்ணம். அவன் வடக்குநோக்கிச் சாய்கிறான். அவன் தெற்கு நோக்காதிருக்க முடியாது. ஏனெனில் அதுவே கதிரவனின் சமன் செய்யும் ஏம முறை. தமிழகம் உயர்ந்திருந்தது. ஆனால், அது இச்சமநெறியைப் போதிய அளவு பேணவில்லை. ஆகவேதான் உயர்ந்தது தாழ்ந்தது. தாழ்ந்தது உயர்ந்தது. கதிரவன் வழியையும் இயற்கையின் வழியையும் கண்டு தமிழகமும் தென்னாடும் தம்நலம் பேண உலக நலமும் உலக நலம் பேணத் தம்நலமும் வளர்ப்பனவாக! பண்டைப் பெருமையினின்று இன்றையப் பொதுமையும் நாளையப் புதுமையும் ததும்பத் தென்னாட்டவராகிய நாம் பாடுபடுவோமாக!


+++