உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 அப்பாத்துரையம் 11

 அவற்றின் பெயரை வரலாறு அறிவதற்கு நெடுநாள் முன்னரே வளம்பெற்றுப் புகழ் நிறுவிய மாண்ட இனங்கள் பல. அந்த மாண்ட இனங்களுக்குமுன் பிறந்து, அம்மாண்ட இனங்களுடன், அவற்றின் பல தலைமுறைகளுடன் கூடிக்குலாவி, அவற்றுடன் கலைத்தொடர்பும் வாணிகத் தொடர்பும், குடியேற்றத் தொடர்பும் அரசியல், சமுதாயத்தொடர்பும், நாகரிகத்தொடர்பும்கொண்டு பின் அம்மாண்ட இனங்கள் அழிந்த பின்னும் அவற்றின் தூதுவராகி இன்றைய உலகின் புதிய இனங்களிடையேயும் பொன்றாது வாழும் காலங்கடந்த கடவுள் நிலம் இதுவே!

இன்று நிலவும் இனங்களின் வாழ்வு கடந்தும் வருங்கால உலகின் அவாவாய் இன்னும் காலங்கடந்து, உலகின் கனவார்வங்களைத் தன் கருவில் கொண்டுபேணும் கருநிலமாய் இயங்கும் எழிலார்ந்த தாய்நிலம் இவ்வாழ் நிலமே எனலாம்.