உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 12.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு

213

அச்சமயம் போஸ் காட்டிய பொறுமையும் உழைப்பும் மனித ஆற்றலின் எல்லைக்கு முற்றிலும் மேற்பட்டவையாகவே இருந்தன. அவர் நிலை,கல்லையும் கனிய வைக்கத் தக்கதாயிருந்தது. ஆயினும், அரசியலில் ஏற்பட்ட பிளவு பெரிதாகவே வளர்ந்தது. அது உணர்ச்சி நிலைகடந்த அடிப்படை முறை வேறுபாடா யிருந்தது. இந்நிலையில் தலைமைப் பணியை ஆண்டு முழுவதும் போஸ் நீடித்து ஆற்ற முடியாமல், அதனைத் துறக்க வேண்டிய தாயிற்று. அவரது இடத்தில் தற்காலிகத் தலைவராய்க் காந்தியடிகளின் நம்பிக்கைக்குப் பெரிதும் பாத்திரமான ராஜேந்திரப் பிரசாது அமர்வு பெற்றார்.

தலைவர் போஸ் அம்புப் படுக்கையிலிருந்து போராடி வரும் சமயத்தில் காந்தியடிகள் ராஜ்கோட்டில் மன்னர் அடக்கு முறைகளை எதிர்த்துச் சாகும் வரை உண்ணா நோன்பு தாடங்கியிருந்தார். நாட்டு மன்னர் வகையில் பேரவை யக்கத்தின் சார்பில் அவர் எடுத்த முதல் தீவிர நடவடிக்கை துவே.ராஜ்கோட்டு ஒரு சின்னஞ்சிறிய பகுதியானாலும், காந்தியடிகள் உண்ணா நோன்பால் அதன் செய்தி மாநில ஆட்சியாளர் கவனத்துக்குரியதாயிற்று. மாநில ஆட்சித் தலைவர், கூட்டுறவு நடு அரசின் நீதிபதியான 'ஸர் மாரிஸ்குவைய'ரை இது வகையில் தீர்ப்புக்காணும்படி நடுவராக அமர்த்தினார். தீர்ப்பு, காந்தியடிகளுக்குச் சாதகமாகவே இருந்தது. ஆயினும், காந்தியடிகள் தமக்கு இயல்பான அன்பு முறையில் தீர்ப்பை அப்படியே ஏற்கவில்லை. அவர் மன்னரின் நல்லெண்ணக் குழுவுக்கும் சமரஸத்துக்குமே அதை ஒப்படைத்து இரட்டிப்பு வெற்றி கண்டார்.

பேரவையில்

இரண்டாண்டு தலைவராயிருந்து, இரண்டாவது ஆண்டு நடுவில் அப்பதவியைத் துறந்த போஸ், 1939 மே 21-ந் தேதி தம் ஏகாதிபத்தியத் தீவிர எதிர்ப்பு வேலையைத் தொடங்கித் தேசிய முன்னணி என்ற (Forward Block) ஒரு புதிய கட்சியை நிறுவினார்: மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து அதற்குக் கிளைகளும் அமைத்தார். பேரவையும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்றாண்டுகள் அவர் மீண்டும் பேரவையில் பதவி வகிக்கக்கூடாதெனத் தடை விதித்தது.