160
அப்பாத்துரையம் - 16
'வில்லவனை நெல்வேலியிலும்
விரிபொழில் சங்கர மங்கைப்
பல்லவனையும் புறம் கண்ட
பாராங்குசஉன் பஞ்சவர் தொன்றலும்’
என்று சின்னமனூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. இங்கே வில்லவன் என்று கூறியதால் போர், சேரனை எதிர்த்த போர் என்றும், சங்கரமாங்கைப் போரும் பராங்குசனுக்கு உரிமை யாக்கப் பட்டிருப்பதால், அரிகேசரி மாறனும் பராங்குசனும் ஒருவரே என்றும் பலர் கருத இடமேற்பட்டுள்ளது. இங்கே பொதுவாகப் பாண்டி யர் செயல் குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
பெரியபுராணப் பாட்டு எங்கே?
நெல்வேலிப் போர் கி.பி. 675-ல் நடைபெற்றது என்று உறுதியாகக் கூறலாம். ஆகவே நெடுமாறன் கி.பி. 670 வரையன்றி 675 கடந்தும் ஆட்சி செய்திருந்தான் என்றே கொள்ளல் வேண்டும்.
வரலாற்றுணர்வு மிக்கவரான சேக்கிழார் இப்போரின் முழு உண்மையும் ஆய்ந்துகண்டு பாடியிருப்பது காணலாம், 'சேயபுலத் தெவ்வர் தம் கடல் போன்ற தானையை நெல்வேலியில் அழித்தார்' என்றும், 'வடபுலத்து முதல் மன்னன் படைசரிந்ததும் நெடுமாறன் வாகை புனைந்தான்' என்றும் அவர் பாடினார். 'முதல் மன்னர்' என்ற தொடர் எதிரியான சாளுக்கிய விக்கிரமாதித்தன் வட திசையில் பேரரசாண்ட பேராற்றல் உடையவன் என்றும், அவனை வென்ற வெற்றி அருமை உடையதென்றும் நன்கு குறித்துக் காட்டுகிறது.
அரிகேசரி நெடுமாறனின் பிறபோர்கள்: பாழி, செந்நிலம்
அரிகேசரி மாறவர்மனுக்குரியனவாக மற்றும் இரண்டு வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளன. அவையே பாழி செந்நிலம் ஆகிய இரண்டு போர்க்களங்களின் வெற்றிகள் ஆகும்.
சூழ் யானை செல உந்திப்