உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 22

வெளியே வராதபடி முகம் விரிப்புகளிடையே புதையுண்டிருந்தது அவளுக்குத் தெரியாது.

மென்னயத்துடன் கெஞ்சி அவளிடம் சொல்லாடினான். 'அம்மணி, நான் சொல்வதைத் தயை செய்து செவி கொடுத்துக் கவனி. இந்தத் திடீர் நுழைவு உனக்குத் தகாத் துணிச்சலாகவே தோற்றக்கூடும். ஆனால் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன், எவ்வளவு பூசிக்கிறேன் என்பதைத் தெரிவிக்க இதுபோன்ற ஒரு தறு வாய்ப்புக்காக நான் எத்தனை ஆண்டுகள் காத்திருந்து வருகிறேன் என்பது உனக்குத் தெரியவராது. இன்றிரவு இந்த இரகசிய வருகையின் அவாவை என்னால் தடுக்கக்கூடவில்லை. என் ஆசையின் அளவை இந்தத் திடீர் நுழைவே உனக்கு மெய்ப்பித்துக் காட்டக் கூடும்' என்றான்.

அவன் பணிவிணக்கம், நய நாகரிகம், மெல்லியல்பு ஆகியவை இச் சமயம் பேய்மகளைக் கூட அவன் வசமாக்காமல் இருந்திருக்க முடியாது. ஆயின் அந்நிலையிலும் மணமான ஒரு மாதரசிக்கு இத்தகைய சூழல் ஒரு சிறிதும் தகுதியல்ல என்றறிந்து, அவள் புறமனம் அக மனத்தின் துடிப்புக் கடந்து பேசிற்று. 'நீங்கள் செய்வது தவறு என்றே எண்ணுகிறேன்’ என்று அவள் தளர்ந்த குரலிலேயே கூறினாள். ஆனால் அவள் மனக்குழப்பம் கூட இச்சமயம் அவள் இனிய கவர்ச்சியைப் பெருக்கிற்றே யன்றி வேறன்று. அவ்வழகின் மாயத்தில் சிக்குண்டு கெஞ்சி விரைந்து மறுமொழி கூறினான், 'நான் தவறு செய்யவில்லை, அம்மணி! நீண்டகாலப் பாசமும் மதிப்பும் தவிர வேறு வழிகாட்டி யில்லாமலே, நான் மயிரிழையும் பிசகாது உன்னருகே வர முடிந்துள்ளது. ஆனால் என் திடீர் நுழைவே என் நோக்கம் பற்றி நீ தவறாக ஐயம் கொள்ள வைத்திருக்கிறது என் று அறிகிறேன். ஆகவே நான் தெளிவாகக் கூறிவிடுகிறேன். என்னிடம் வேறு எந்தத் தவறான எண்ணமும் கிடையாது. என் மனதில் குழப்ப மூட்டும் ஒரு செய்தி குறித்து யாராவது ஒருவரிடம் மனம் விட்டுப் பேச மட்டுமே விரும்புகிறேன்' என்றான்.

இவ்வாறு கூறிக் கொண்டே அவன் குழந்தை போல அவள் சிறிய அழகுடலைக் கைகளில் எடுத்தணைத்தபடி நடந்தான். ஆனால் இடைவழி அறை கடக்குமுன், ஏற்கெனவே மாதரசியால்