உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

123

கடிதத்தை ஆடைமடிப்பிலிருந்து எடுத்து அவளிடம் தரத் தயங்கவில்லை.அவளும் அதை வாசிக்க மறுக்கவில்லை. 'நழுவிய கைச்சதுக்கம் என்பது என்ன? அதைப்பற்றி அவர் பேசுவதென்ன?' இது புரியத்தொடங்கியதும் அவள் மறு மொழி எளிதாயிற்று. “கொண்கன் என்னை அகன்ற கணமுதல் கண்கள் முற்றும் கனிந்து பனித்தன,

விண்கொள் ஈசெயோ மேவும் வலைஞர்கள் திண்க ரைத்தலத் திட்ட மெல்லாடைபோல்!

என்ற பழம் பாடலை அவள் அடிக்கடி கேட்டிருந்தாள். ஆனால் அதில் முதலடிகள் எப்படியோ அவள் நினைவுக்கு வராமல் நழுவவே,

'விண்கொள் ஈசெயோ மேவும் வலைஞர்கள்

திண்க ரைத்தலத் திட்ட மெல்லாடைபோல்!'

என்ற பின்னிரண்டு அடியை மட்டும் தன்பாடலாக எழுதினாள். உணர்ச்சிக் குழப்பம் போதாமல் இந்த அரைப்பாடல் மறந்த குழப்பமும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தின.

இதேசமயம் மேல் மாட நங்கையும் மிகவும் நைவுற்றாள். தனக்கு நேர்ந்த இனிய நிகழ்ச்சிபற்றி யாரிடமாவது கூற அவள் துடித்தாள். அங்ஙனம் செய்ய முடியாமல் தனிமையில் தன் அடங்கா இயற்கை யார்வத்தைப் பொறுமையுடன் அடக்கிக்கொண்டிருந்தாள். உத்சுசேமியின் தம்பி வந்த போது அவள் உள்ளம் புது நிகழ்ச்சி எதிர்பார்த்து விதிர் விதிர்த்துத் துடித்தது. ஆனால் அவளுக்குக் கடிதம் இல்லை. அவள் எதுவும் அவளது கட்டற்ற இன்ப வாழ்வில் முதல் தடவையாக ஏமாற்றத்தின் சாயல் அவள் புருவங்கள் மீது படர்ந்தது.

உத்சுசேமி கெஞ்சியின் காதலுக்கு எதிராகத் தன் உள்ளத்தை எஃகாக்கிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் கெஞ்சியின் கடிதத்தில் கனிந்து கிடந்த அவன் பாசத்துடிப்பைக் கண்டதும், அவன் காதலை ஏற்கும் சுதந்திரம் தனக்கு இல்லாமற் போயிற்றே என்ற வருத்தத்தில் மீண்டும் ஆழ்ந்தாள். முடித்த முடிச்சை இனி அவிழ்ப்பது முடியாதானாலும், அதன் கடுமை இப்போது அவளை முன்னிலும் மிகுதியாக அறுக்கத் தொடங்