உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

||--

அப்பாத்துரையம் - 22

இதுகண்டு மலைப்பும் திகைப்பும்கொண்டு வாளா இருந்து விட்டனர். அவனது ஆண்மைச் செயல்கள் சோனகனுக்குக் கலக்கமும் அச்சமும் உண்டுபண்ணினாலும், கவவரமடைய எதுவுமில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியவளாகவே இருந்தாள்.

சிறுமியின் உடல் நடுங்கிற்று. அவன் தன்னை என்ன செய்வானோ என்று தெரியாமல் அவள் மலைப்புற்றாள். அதே சமயம் அவளை அவன் வாரி எடுத்த சமயம் அவன் பட்டுப்போன்ற மென்மை வாய்ந்த உடலின் சில்லிட்ட தொடர்பு அவள் உடலெல்லாம் புல்லரிக்க வைத்தது. இதை அவன் கண்டான். கண்டும் உரிமையுடன் அவள் புற ஆடை அகற்றி மெல்லப் படுக்கையில் கிடத்தினான். அவள் அச்சம் தெளிய வில்லை என்று கண்டும் காணாதவன் போல அவளிடம் பாசத்துடனும் நயத்துடனும் உரையாடினான்.

‘ஓரிடமிருக்கிறது, அழகான படங்களும் பொம்மைகளும் மற்ற விளையாட்டுப் பொருள்களும் நிறைந்தது. அந்த இடம் உனக்குப் பிடிக்குமோ என்னவோ, உன்னை அங்கே இட்டுச்செல்ல விரும்புகிறேன்' என்றான். அவள் இயல்பாக விரும்பும் பலசெய்திகளைப் பற்றி அவன் பேசிக் கொண்டே இருந்தான். இதன்பயனாக அவள் அச்சம் முற்றிலும் தெளிந்து அவனுடன் அவள் அமைதியாக இருந்தாள். ஆனாலும் நெடுநேரம் அமைதியற்ற நிலையில் படபடத்தாள். தூக்கம் அவளை அணுகவில்லை.

வெளியே புயல் விடாமல் தொடர்ந்தது.

'இந்தச் சீராளர் இங்கே வராமல் போனால், நாம் எப்படித்தான் இங்கே பொழுது கழித்திருப்போமோ' என்று பெண்களிடையே ஒருத்தி கூறினாள். அத்துடன் 'அவர் வராவிட்டால் என்னளவில் எனக்கு மிகவும் பயமாகவேதான் இருக்கும். ஆனாலும் நம் இளந்தலைவி அவர் வயதுக்குச் சரியாய் இன்னும் சற்று வளர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்' என்றாள்.

சோனகன் மட்டும் கெஞ்சியைவிட்டு அகலவில்லை. அவள் உள்ளத்தின் ஆழத்தில் இருந்த அவநம்பிக்கை இன்னும் முற்றிலும் அகலாதிருந்தது.