தாயகத்தின் அழைப்பு
17
டையிடையே மேடேறிவந்து யூஸ்டேஷியா பையனை ஊக்குவாள். தவளை பாயவில்லை என்று கேட்டு அவளும் மனக்கசப்புடன் மீட்டும் திடலில் சென்று பார்ப்பாள். இப்படி இரவு கழிந்தது.
66
தாம்சினும் யோப்ரைட்டும் போனபின் வில்டீவ் வெளியே தன் வேலையாக வந்தான். தீப்பந்தம் அவன் கண்ணிற்பட்டது. ‘ஆ, மாயக்கன்னி, நீ உன் செயலை நிறுத்த மாட்டாயா?” என்று அவன் தனக்குள்ளே, உரத்துக் கூவினான். அன்று மாலையிலேயே மாட உச்சியில் அவள் காத்திருப்பதையும் அவன் கண்டிருந்தான்.
அவன் அவளைச் சென்று காண நினைக்கவில்லை.ஆனால் கால்கள் சென்றன. எங்கே செல்கிறோம் என்ற நினைவில்லாமலே தீப்பந்தத்தின் பக்கம் சென்றான். அருகில் சென்றதும் வழக்கப்படி ஒரு சிறு கூழாங்கல்லைக் குட்டையில் எறிந்தான்.
தவளை ஓசைக்குக் காத்திருந்த பையன் மகிழ்ந்தோடினான். அவன் கையில், அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தேய்ந்த காசை அவசர அவசரமாய் கொடுத்துவிட்டு அவள் வந்தாள். நீண்டநாள் சந்திக்காத காதலர் மீண்டும் சந்தித்தனர்.
மேடேறிவந்த உருவம் கண்டு அவள் "இதோ வந்து விட்டேன்” என்றாள்.
அவள் நாடி துடித்தது. ஆனால் அவன் அடுத்த பேச்சு அவளை எச்சரித்தது. “எனக்கு நீ ஓய்வே கொடுப்பதில்லை; என்னை ஏன் ஓயாது நச்சரிக்க வேண்டும்? மாலை முதல் நான் உன் தீப்பந்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் வில்டீவ்.
அவள் துடிப்பையும் அடக்கிக்கொண்டாள்.கோபத்தையும் அடக்கிக்கொண்டாள்."உன்னை யார் நச்சரிக்கிறார்கள்? நானும் எல்லோரையும்போலத் தீப்பந்தம் கொளுத்தக்கூடா டாதா?”
என்றாள்.
66
'அது மற்ற தீப்பந்தங்களுள் ஒன்றல்ல; என்னை அழைப்பதற்கான அடையாளம்."