உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 28.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

அப்பாத்துரையம் - 28

என்பது எங்கள் முயற்சிக்கு எட்டாதது. இதற்குத் தெய்வம் தான் வழிவிட வேண்டும்.நம்மாலாவது யாதொன்றும் இப்போது இல்லை” என்று ஏக்குற்றாள்.

'எங்களால் உதவ முடியாதென்று உங்களுக்கு உறுதி யாகத் தெரியுமா?" என்று கேட்டுப் பிறகு டாமிதான் காண்டு வந்த பையை அவள் மடிமீது கவிழ்த்தான். அதிலிருந்து பொற்காசுகளாகவே நாற்பது பொன்கள் பொலபொலவென விழுந்தன.'இவற்றை எடுத்து உங்கள் கடனை அடைத்துவிடுங்கள். உங்களையும் உங்கள் தங்கக் கட்டிகளையும் தெய்வம் காப்பாற்றட்டும்” என்றான் டாமி. நம்பிக்கையின்மை, துன்பம் என்னும் தடங்காணா இருகடல்களின் எல்லையில் நின்றிருந்த அவ்அம்மையார் ஒரேயடியாக இன்பம், நன்றி என்னும் தடங்காணா மற்றிரு கடல்களின் எல்லைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். துன்பத்தினிடையே திடுமென வந்த இவ்வின்பந் தாங்க மாட்டாமல் அவள் சாய் இருக்கையிற் சாய்ந்தாள். அவள் உணர்ச்சி வேகத்தால் நரம்புகள் முறுக்குற்று வலித்துக்கொண்டன. இப்புது நிகழ்ச்சி கண்டு யாவரும் அதிர்ச்சி யுற்றனர். திரு டாஸ்ஸெட் உடனே ஓடிவந்து ஆவன செய்தான், உசாவிச் செய்தியறிந்து அவனும் மனமகிழ்ச்சியுற்று டாமியை ஆரத் தழுவிக் கொண்டான். இனி நிலைமைகள் சரிப்பட்டு விடுமென உணர்ந்து டாமியும் ஹாரியும் விடைபெற்று விரைவில் ஆசிரியரகம் சேர்ந்தனர்.

வேனிற்காலம் ஓய்ந்து சாரற்காலம் தொடங்கிற்று. டாமியிடம் கண்ட இனிய மாறுதல்களை ஆசிரியரைப் போலவே டாமியின் தாய் தந்தையரும் பிறரும் வரவேற்றனர். சாரற் பருவம் நீங்கிப் பனிப்பருவம் வந்துற்றதும் பறவைகள் பாடலோய்ந்து அலைந்தாடலோய்ந்து தத்தம் கூடுகளிலடங்கின. சிறுவரும் தம் சுற்றுப்புற உலாக்கள் நீங்கி ஆசிரியரகத்திலும், தோட்டப் பயிற்சி நீக்கி நூலகப் பயிற்சியிலும் இறங்கினர்.

அடிக்குறிப்பு 1. $ 39-10,