உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230 ||

அப்பாத்துரையம் - 33




தொகைக்கு என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. புட்டிச்சாத்தனிடமே அதையும் கேட்கலாம் என்பதைக் கூட அவன் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், சிறிது நேரத்திற்குள் இன்னொருவன் வந்து, வீட்டுக்காக அவன் திட்டமிட்ட இடம் போக, மீந்த இடத்தை விலைக்குக் கேட்டான். பேரம் எதுவும் பேசமாலே, கீவ் திட்டமிட்ட வீட்டின் செலவுக்கான தொகையை எண்ணிவைத்து, அவன் நிலத்தைத் தனக்கு எழுதி வாங்கிக் கொண்டான்.

கீவின் நம்பிக்கையும் லோப்பாக்காவின் நம்பிக்கையும் வளர்ந்து ஆர்வத்துடிப்புக்கள் ஆயின. ஒரு சில நாட்களுக்குள்ளாகவே தீவின் கனவு நனவாயிற்று. அவன் கனவுகண்ட மாளிகையில் அவன் நனவுருவிலேயே சென்று குடிபுகுந்தான்.

புதிய வாழ்வால் அவன் பண்புகளிலும் புதுக் கூறுகள் எழுந்தன. புட்டிச்சாத்தனின் ஆற்றலைக் கண் கூடாகக் கண்டு அதை வாங்க விதிர்விதிர்ப்புற்றான் லோப்பாக்கா. ஆனால், கீவ் தன் பணியாட்களை ஏவி அவனை வீட்டிலிருந்தே துரத்தினான். தான் அருமையாகப் பெற்ற வாழ்வை அவ்வளவு விரைவில் அவ்வளவு எளிதாக இன்னொருவன் பெறுவதா என்று அவன் உள்ளம் குமுறிற்று!

“புட்டியை லோப்பாக்காவுக்குக் கொடுக்க மறுத்த போது, கீவின் பேரவாவைவிடத் தன்னலமே ஒங்கியிருந்தது. தான் கனவுகண்ட ஒரே பேரவா நிறைவேறியபின், அவன் பேரவாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. கொஞ்ச நாட்களுக்குள் அது அவன் அமைதியான வாழ்வின் ஒரு கூறாய்விட்டது. புதிய அவா எதுவும் ஏற்படாததால், புட்டிச் சாத்தனைப் பயன்படுத்த வழி ஏதும் உண்டாகவுமில்லை, அதனிடம் வெறுப்பும் தட்டிற்று. ஆனால் கீவ் இன்றும் இளமையின், தொடக்கக் கோடியிலேயே இருந்ததால், இவ்வெறுப்பு அதை விட்டொழிக்கும் துணிவாக உருவாகவில்லை. அதை, இனிப் பயன்படுத்துவதே இல்லை என்று அவன் தனக்குள் உறுதிசெய்து கொண்டான்.

மனிதன் ஏழ்மையின்போது பணமே பெரிதென்று நினைக்கிறான். பணம் எளிதில் கைக்கு வந்துவிட்டால், அப்போது தான் அது வாழ்வின் நிறைவு அல்ல என்று உணர்கிறான். கீவ்