இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ்மண் பதிப்பகம்
2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி : 9444410654
தமிழினமே! தாயினமே!
விழிப்புக் கொள்க!
மொழியிலையேல் இனமில்லை; இனமிலையேல் நிலமில்லை;
முழுவுண்மை; இஃதறியா மூட ரெல்லாம்
விழியிலர்போல், அடிமைகள்போல், தமிழினத்தை விடிவிக்க
வைப்பவர்போல் பற்பலவும் விதந்து கூறி,
வழியறியா வழிகளிலே மக்களினைப் பலகூறாய்ப்
பலகுழுவாய்ப் பலகொடிக்கீழ் வகுத்துக் கொண்டு
பழிமலிய அரசியலை நடத்துகின்றார்; பொருளியலைப்
பெருக்குகின்றார்! தமிழ்நாட்டைப் பாழ்செய் வாரே!
செந்தமிழைச் செந்தமிழர் பேரினத்தைச் செந்தமிழ்நன்
னாட்டை, இவர் போட்டியிட்டுச் சீரழித்தே,
இந்திக்கும் வடவர்க்கும் தில்லியரின் ஆட்சிக்கும்
என்றென்றும் அடிமையென ஈடு வைத்தே,
தத்தம்நலம், பதவி, அதி காரமிவை தாம்பெறவும்
தமக்குப்பின் தம்மக்கள் பெறவும் செய்யும்
தந்திரத்தை அரசியலென் றுரைக்கின்றார்; எழுதுகின்றார்!
தமிழினமே! தாயினமே! விழிப்புக் கொள்க!
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2, சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்,
சென்னை 600 017.
தொலைபேசி : 044-24339030
செல்பேசி : 9444410654