உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. லான்ஸிலட் பெருந்தகையின் வீரம்

ஆர்தர் அரசருக்கு வலக்கையாய் இருந்து அவரைப் போர்களில் எதிரிகளைத் துரத்தியடித்து அவர் பேரரசை நிலைநிறுத்த உதவிய பெருவீரர் லான்ஸிலிட்டே. அவர் ஆர்தர் வட்ட மேடை வீரருள் தலைசிறந்த வராயிருந்ததுடன் அவருக்கு ஒப்பற்ற தோழராகவும் இருந்தார். ஆயினும் அவருக்கு ஆர்தர் அரண்மனையிலிருந்து விருந்து வாழ்வு வாழப் பிடிக்கவில்லை. நாடெங்கும் சென்று காடுகளிலும் ஒதுக்கிடங்களிலும் மறைந்து மக்களைத் துன்புறுத்திவரும் ஆர்தரின் பகைவரைப் போரிட்டு வென்றழித்துத் தம் புகழைப் புதுப்பிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். சிறப்பாக ஆற்றுக் கடலருகிலுள்ள மாளிகைத் தலைவனாகிய துர்க்கைன்' என்ற கொடிய வீரனை அழிப்பதிலேயே அவர் மிகவும் கருத்துக் கொண்டார். இந்நோக்கத்துடன் அவர் தம் மருமகனாகிய லயோனெல் பெருந்தகையுடன் புறப்பட்டுச் சென்றார்.

அந்நாளில் பிரிட்டனெங்கும் நிறைந்திருந்த காட்டு வழிகளில் சுற்றியலைந்து மிகவும் களைப்படைந்து லான்ஸிலட் ஒரு மரத்தடியில் சோர்ந்து கண்ணயர்ந்து உறங்கினார். லயோனெல் பெருந்தகை அவரைக் காத்து அருகில் நின்றிருந்தான்.

ரை

அச்சமயம் காற்றினும் கடுக மூன்று வீரர் குதி மீதேறியோடினர். நெடிய பாரிய உடலுடைய ஒரு முரட்டு வீரர் அவர்களைப் பின்பற்றித் துரத்தி வந்தான். அவன் கொடிய ஈட்டியால் அவர்களைக் காயப்படுத்தி அதன் பின் அவரவர் குதிரைகளின் கடிவாளங்களால் பிணித்துக் கல்லிலும் முள்ளிலும் கட்டியிழுத்தான். இக்கொடுமையைப் பார்க்கப் பொறுக்காமல் லயோனெல் லான்ஸிலட்டை எழுப்பக்கூடத் தாமதிக்காது முரட்டு வீரன் மீது பாய்ந்தான். ஆயினும், முரட்டு