உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம்

ஆனால், கதவருகில் இருந்த பணிப்பெண்கள் சிலர், 'யார் அங்கே' என்று கேட்டார்கள் இருவரும் தாம் இன்னார் என்பதைத் தெரிவித்த அளவில் அவர்களுள் ஒருத்தி கொல்லென நகைத்து, "ஏனையா, இப்படி அடாப்பொய் அளக்கிறீர்! தலைவரும் என் கணவராகிய அவர் பணியாளும் உள்ளிருந்து உண்டு கொண்டிருக்க, அவர்கள் பெயரால் என்னை ஏமாற்றுகிறீரே' என்று எடுத்தெறிந்து கூறி ஏளனஞ் செய்தாள். அதுகேட்டு மூத்த அந்திபோலஸ், கடுஞ் சினங்கொண்டு தன் நிலையத்தையே நோக்கி மீண்டான்.

அவன் போகும் வழியில் ஒரு நடிகையின் வீடு இருந்தது. அவன் சில நேரங்களில் பொழுது போக்கிற்காக அங்கே சென்று அவளுடன் பேசியிருப்பதுண்டு. இன்று தன் மனைவி தன்னை அவமதித்ததை எண்ணி மனம் வெறுப்புற்று, அவளிடம் சென்று சற்றுப் பேசிக் களித்திருக்கலாம் என்று கருதினான். அவளும் அவன் வரவின் அருமையறிந்து போற்றி, அவனிடம் பரிவாய் உரையாடினாள். அதுகண்டு களிப்புற்ற அந்திபோலஸ், தான் தன் மனைக்கென்று செய்துவரும் பொற்சங்கிலி ஒன்றை அவளுக்குத் தருவதாக வாக்களித்தான். அவளும் அவன் பரிவுக்கு மகிழ்ந்து, தன் கைக் கணையாழியை எடுத்து அவன் கையில் அணிவித்தாள்.

பொற்சங்கிலியைச் செய்ய ஏற்றுக்கொண்ட பொற் கொல்லன். அது முடிந்ததும் அந்திபோலஸைக் காண வந்து கொண்டிருந்தான். வழியில், அவன் இளைய அந்திபோலஸைக் கண்டு, அவனே மூத்த அந்திபோலஸ் என்று நினைத்து அவனிடம் சங்கிலியைக் கொடுத்தான் அந்திபோலஸ் அது தனதன்று என்ற போது,அவன் சினங்கொண்டு "இப்போது எனதன்று என்பதனால் என்ன பயன்? உமக்கெனச் செய்தாயிற்று; இனி நீர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியதே" என்று அதை அவனிடம் எறிந்து விட்டுப் போனான்.

கொஞ்சநேரங் கழித்து அப்பொற்கொல்லன் ஒரு கடன் காரனால் சிறை பிடிக்கப்பட்டான். காவலுடன் சிறைக்கூடத்திற்குச் செல்லும் வழியில், அவன் மூத்த அந்திபோலஸைக் கண்டான். கண்டவுடன் சங்கிலிக்குப் பணம் கொடுக்கும்படி அவனைக்கேட்க, அந்திபோலஸ், “பணம் இருக்கட்டும், சங்கிலி எங்கே?" என்றான். பொற்கொல்லன், "உம்மிடந்தான் சற்றுமுன் கொடுத்தேனே'