உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




120

அப்பாத்துரையம் 40

-

டேடலஸின் சிற்பத் திறனும் மினாஸின் போராண்மை யும் சேர்ந்து, பாஸிடான், கிரீட்டுக்குத் தந்த பழியை அதேன்ஸின் பழியாக்கிற்று. எல்லாரும் விரும்பும் இளமைப்பருவம் அதேனியருக்கு அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் உரிய துன்பப் பருவம் ஆயிற்று. அப்பருவத்தவரும் அதை அணுகுபவரும் எங்கே அடுத்த ஆண்டின் பலிமுறை தம்மீது வருமோ என்று அஞ்சி வாழ்ந்தனர்.தேர்வின் அச்சம் ஒருபுறம் எல்லாரையும் கவலையில் ஆழ்த்திற்று. தேர்ந்தபின் தேரப்பட்டவர் உறவினரை மீளாத் துயரம் ஆட்கொண்டது. கலையாரவாரமிக்க அதேன்ஸ் நகரில் கண்ணீரும் கம்பலையும் நிலையாகத் தங்கின.

மினாஸின் புதல்வி அழகிற் சிறந்த அரியட்னே. அவள் ஆண்டுதோறும் பலியாக வரும் இளைஞர் நங்கையர் துயர்கண்டு கண்கலங்கினாள். அவள் எவ்வளவு தடுத்துரைத்தும் கெஞ்சியும் மன்னன் தன் பலி முறையை நிறுத்தவில்லை. ஓராண்டு, பலியாக வந்தவர் முகங்களுள் ஒன்று வழக்கத்திற்குமேல் அவளைக் கவர்ந்தது. அது மற்ற முகங்களைப்போலத் துயரமோ அச்சமோ உடையதாயில்லை. மணமகளைக் காணச்செல்லும் மணமகன் முகம்போல அது மலர்ச்சியுடையதாயிருந்தது.

அரியட்னேயைக் கவர்ந்த அம்முகம் அதேனிய அரசனின் ஒரே புதல்வன் தீஸியஸின் முகமே.

தன் நகரமக்கள் வாழ்வில் துன்பத்தின் சாயலைப் பரப்பிவந்த மினோட்டாரை ஒழித்துவிடத் தீஸியஸ் துடித்தான். அதற்காகத் தனக்கு வயது வரும் காலத்தை அவன் எதிர்நோக்கி யிருந்தான். அந்த ஆண்டு இளைஞர்களைத் தேர்ந்து வலுக்கட்டாயமாகச் சேர்க்குமுன் அவன் தானாகவே அதில் ஒருவனாக முன்வந்தான். கிழ அரசர், ஈஜியஸ் தன் ஒரே புதல்வன் இவ்விடருக்குள் சிக்குவதை விரும்பவில்லை. ஆனால், தீஸியஸ் பிடிவாதம் பிடித்தான். "நம் மக்கள் சாக நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்பா, மேலும் நான் மினோட்டாருக்கு இரையாவதற்காகப் போகவில்லை. என்னுடன் வரும் மற்றப் பதின்மூவரைக்கூட நான் இரையாக விடப் போவதில்லை. நானே முதலில் சென்று, மினோட்டாரைக் கொன்று அவர்களைக் காப்பேன். ஆகவே, அதுவரை நீங்கள் கவலையில்லாமல் இருங்கள். நான் வரும்போதே உங்களுக்கு என் வெற்றியை