உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




122

அப்பாத்துரையம் 40

-

தீஸியஸிடம் இவைபற்றிய திட்டம் எதுவும் இல்லை என்பதை அவள் கண்டாள். பாஸிடானின் அருள் என்ற சொல்லைக்கேட்டு அவள் புன்முறுவல் கொண்டாள்.

"அன்பரே, பாஸிடானின் அருள் இப்போது என் வடிவில் உமக்கு வந்திருக்கிறது. அது இல்லாமல் எத்தகைய வீரனும் மினோட்டாரை வெல்ல முடியாது. ஏனெனில், பாஸிடானின் முடியாது.ஏனெனில், அருட் கட்டளையால் கடலிலிருந்து பிறந்த மினோட்டாரை நிலஉலக வாள் எதுவும் துளைக்காது. நாளைக் காலை நாம் இருவரும் குளித்துப் பாஸிடான் கோவிலுக்குச் செல்வோம். அவர் அருளால் அவர் சிலையருகேயுள்ள வாளை உமக்கு எடுத்துத் தருகிறேன். அதன் பின் இருவரும் மருட் கோட்டம் செல்வோம்” என்றாள்.

அரியட்னே உதவி செய்வேன் என்றது வெறும் காதல் பசப்புரையன்று என்பதைத் தீஸியஸ் கண்டான். ஆனால், ஆரிடர் தரும் பணியில் இவ்வாரணங்கை ஏன் இட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணினான். அவ் எண்ணத்தை உய்த்தறிந்தவள் போல அரியட்னே மேலும் பேசினாள்.

66

'சிறைக்கோட்டத்துக்குள் போன பின்தான் என் உதவி உமக்கு மிகுதி தேவை. நீர் மினோட்டாரின் இடத்தைத் தேடித் திரிய வேண்டும். அதில் உம் கவனம் செல்லும். ஆகவே திரும்பி வருவதற்கு வழி தெரிந்துகொள்ள வேண்டிய வேலையை நான் கவனிப்பேன்” என்றாள்.

“அப்படியா? அதற்கு நீதான் என்ன செய்யக் கூடும்? மருட் கோட்டத்திற்குள் நுழைந்தால் வெளியே வரவே முடியாது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேனே?'

“அப்படியானால் என்ன நினைத்து வந்தீர்?”

"மினோட்டாரை ஒழிப்பதுதான் என் வேலை. மற்றவற்றை அதன்பின்தானே பார்க்கவேண்டும்'

"உங்கள் வீரத்திற்கு இத்துணிவு நல்ல சான்றுதான். ஆனால் வீரம்மட்டும் இங்கே போதாது. நீர் திரும்பிவர வழிதெரிதல் வேண்டும். அத்துடன் விரைந்து திரும்பி வரவேண்டும். காலதாமதம் நேர்ந்தால், என் தந்தையின்