உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

அப்பாத்துரையம் 40

-

இத்தனைக்கும் காரணமான நங்கையின் முகத்தை அவன் இப்போதுதான் ஏறிட்டுப் பார்த்தான். அவனை அறியாமல் அது அவன் மனத்தைக் காந்தம்போலக் கவர்ந்தீர்த்தது.

இளைஞனின் சாவுக்காட்சிகூட அவன் நெஞ்சை அச்சுறுத்தவில்லை.

எப்படியும் அவளைப்பெற முயல்வது என்று அவன் துணிந்தான்.

மறுநாளே மிலானியன் மன்னனிடம் சென்று அட்லாண்டா வைத் தான் மணம் செய்ய விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்டதும் மன்னன் திடுக்கிட்டான்.

மன்னன்:நேற்றுத்தானே அழகிய ஓர் இளைஞன் உயிரைப் பலிகொடுத்தான். அதைப்பற்றிக் கேள்விப்படவில்லையா?

மிலானியன்: நானே நேரில் வந்து பார்த்தேன்.

மன்னன்: பார்த்தும் ஏன் இப்படி வந்தாய்? சாக வழி தேடித்தான் வந்தாயா?

மிலானியன்: இல்லை. எத்தனையோ ஆடவர் உயிரைக் குடித்த அந்த அழகைப் பெற்று வாழவே விரும்புகிறேன்.

மன்னன்: அது முடியுமென்று நீ நினைக்கிறாயா?

மிலானியன்: ஆம், ஒரு மாதம் கழித்துப் பந்தய நாள் குறித்து, அதுவரை பயிற்சி ஏற்பாட்டுக்கு வாய்ப்பு அளித்தால் முடியுமென்று கருதுகிறேன்.

மன்னன்: சரி, அப்படியே ஆகட்டும். ஒரு மாதங்கழித்து நாட்குறித்துப் பறைசாற்றுவிக்கிறேன்.

ஓட்டம் விளையாட்டு, வேட்டை ஆகியவற்றுக்குரிய தெய்வம் அஃவ்ரோடைட் என்ற தேவி. மிலானியன் ஒரு மாத முழுவதும் ஒருநாள்கூட வீட்டில் தங்கவில்லை. ஒவ்வொரு நாளும் இறைவி அஃவ்ரோடைட்டுக்குரிய ஒவ்வொரு கோவிலிலும் சென்று வழிபாடாற்றினான். மாத முடிவும் அடுத்தது.